ஜோதிர்லதா கிரிஜா
தெய்வத்திரு நாட்டினிலே வெண்ணிலாவே _ இன்று
பொய்மலிந்து போனதேனோ வெண்ணிலாவே
கையை நீட்டி, கடமையாற்ற, காசுகேட்கும் மோசக்
கயவர்கள் நிறைந்ததேனோ வெண்ணிலாவே!
வெள்ளையர் வெளியேறி விட்டால் வெண்ணிலாவே – நாளை
தொல்லைதீரும் என்றிருந்தோம் வென்ணிலாவே
வெள்ளையரே மேலோவென்று வென்ணிலாவே – உள்ளூர்க்
கொள்ளையர் நமை எண்ண வைத்தார் வெண்ணிலாவே!
தேனும் பாலும் ஓடவேண்டாம் வெண்ணிலாவே – ஆனால்
ஊனும் உடையும் வேண்டுமன்றோ வெண்ணிலாவே
வானுயர்ந்த மாளிகைகள் வந்த போதும் – அருகே
காணும் குடில்கள் ஒழிவதெப்போ வெண்ணிலாவே ?
சாதிகள் இரண்டே என்று வெண்ணலாவே – அன்றே
நீதி சொல்லிச் சென்று விட்டார் வெண்ணிலாவே
தீதிதென் றுணர்ந்தபோதும் சாதியின் பேரால் – நாங்கள்
மோதி சுட்டிச் சாவதேனோ வெண்ணிலாவே ?
தாயின் கூறே பெண்களென்று வெண்ணிலாவே – பெரியொர்
மாய்ந்து மாய்ந்து எழுதிவைத்தும் வெண்ணிலாவே
ஆய்ந்திதனை அறிந்திடாமல் பெண்கள்தம்மை – இன்று
பேய்கள் சீண்டும் கொடுமை என்னே வெண்ணிலாவே!
கொடுமைகளையும் கெடுதிகளையும் வெண்ணிலாவே – இன்று
கடுமையாகச் சாடி நீக்க வெண்ணிலாவே
அடிகள் காந்தி மீண்டும் வந்து வெண்ணிலாவே – நம்மைப்
படியவைத்துப் பண் படுத்தும் நாளும் எந்நாளோ !
jothigirija@vsnl.net
- மது அருந்தக் காரணங்கள்
- விழி தூர கவனம்
- பணமே பரமாத்மாவே !
- எக்ஸ்-ரே பரிசோதனைகள் இருட்பொருள் (Dark Matter) பெரும்பாலும் குளிர்ந்து இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
- பழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது
- ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து (Accident at Japan ‘s Tokaimura Nuclear Fuel Factory)
- பழைய முடிவும் புதிய முடிவும் (ஆர்.சூடாமணியின் ‘ரயில் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 65 )
- தமிழ்ப் படைப்புலகம்
- சுஜாதா என்றொரு கதை சொல்லி
- அருமையான உறவின் ரகசியம்
- தமிழைப் பாடு நீ!
- மந்திரவாதி
- நாம் நாமாக…
- பாகிஸ்தானிய ராணுவத்துடன் சமாதானப் பேச்சு என்ற கேலிக்கூத்து
- இந்திய ராணுவத்தை ஈராக்குக்கு அனுப்புவது தவறு
- ரகசிய அறை
- தீபமடியோ தீபம் !
- உதவும் உள்ளத்தின் குமுறல்
- ஆட்டத்தின் எல்லைகள்
- கடிதங்கள்
- அல்லி-மல்லி அலசல் (பாகம் 1)
- விடியும்! (நாவல் – 1)
- இன்பராஜின் இதயம்
- நுடம்
- வாரபலன் (ஜூன் 14, 2003 – சேட்டன் , புலிநகக்கொன்றை)
- ஆன்மீக உலகின் கலங்கரை விளக்கு (விவேகானந்தர்)
- மதுரைக்கோயில் அரிசன ஆலயப் பிரவேசம், 1939
- அருமையான பாதாளம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினொன்று
- குறிப்புகள் சில-19 ஜீன் 2003 (அக்னி சிறகுகள்-சேவைத்துறை குறித்த பொது வணிக ஒப்பந்தம்-திரைப்படப் பிரதியும்,அதற்கு அப்பாலும்-மனிதம்
- படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை
- புக்ககம் போன புத்தகம்
- வெண்ணிலவே சொல்லிடுவாய்!
- அலைக்கழிப்பு
- சில்மிஷங்கள்
- முடிவுகளல்ல ஆரம்பங்கள்
- பா.ஸ்ரீராம் – நான்கு கவிதைகள்