நவபாரதக் கண்ணம்மா: அருந்ததி ராய்
வ.ந.கிாிதரன் –
ஓரணை தானேயென்று இருந்து விட
இவளால் முடியவில்லை.
விம்பங்களை வழிபடும் மண்ணில்
பூகம்பங்களைப் பற்றி யார்
கவலைப் படுவார் ?
பில்லியனிலொரு துளி
பலருக்கு அந்தச் சிலர்.
மில்லியன் பல கிடைத்தும் பகிரும்
மனது இவளுக்கு. அதனாலிவலெதிர்த்தாள் ?
சொல்லைச் செயலாக்கும் இவளுறுதி
கண்டு நர்மதாவும் தலை சாய்வாள்.
சொல்லேருழவர்களில் நீர் தேங்கும்
வல்லணை தருமிடர் புாிந்து
அணை அணைக்கா நல்லோர்
உழவாிலொருத்தியிவள். அருந்ததி
நீ வாழி!
பேரணை, சிற்றணையெனப் பல்லணை.
ஊர் மூழ்கும். ஆறறிவு புலம் பெயரும்.
ஐந்தறிவென்ன செய்யும் ?மரமழியும்.
மரம் வாழ் உயிரழியும். ஊர்வன,
பறப்பனவெனப் பலவழியும்.
பலரழிந்தும் பாராமுகம் காட்டும்
மண்ணில் பலவழியப் பொறுக்காப்
பாரதப் பெண்ணிவள் புாியும் நவ
பாரதப் போாில் தோற்றது
தர்மமா ? ஆடி அசைந்து
குதித்துக் கலகலத்தோடிய
நர்மதாவின் அழகு கண்டு
அளப்பாிய சுதந்திர தாகம் கண்டு
பொறுக்காத ஆண்மனது
அணைத்திடப் போட்ட திட்டமாவிந்த
அணை. அவளை அணைக்
கூண்டினுள் சிறைவைக்கச்
செய்த பெருஞ் சதியோ ?
சபை நடுவில் பாஞ்சாலி துகிலுாியப்
பொறுக்காக் கண்ணனவன்
அவை நடுவிலுதித்து அபயக்கரம்
தந்து காத்தான். காப்பதற்குக்
கண்ணனில்லாததால் வந்த
கண்ணம்மாவோயிவள்!
அருந்ததி காட்டி மணமுடிக்கும் மண்ணில்
அபலை நர்மதா நிலை கண்டு
இருகரம் நீட்டி வந்த அருந்ததியே
முறையிட்ட உனைச்
சிறை வைத்தார்.சிறப்பிழந்தார்.
கறை தந்தார். ஆயினென்ன ?
கொடியவரணைப்பில் அழியும்
ஊர் வாழ்த்தும்! உயிர் வாழ்த்தும்.
பேர் சொல்லும் நவபாரதத்துப்
பாஞ்சாலிக்காய்க் குரல் தந்த
கண்ணம்மா இவளென்றே!
***
- பூனை வளர்த்த வரதராஜன் கதை
- மேலோட்டமான சிந்தனைகள்; ஆழமான அவ நம்பிக்கைகள். இதுதானா ஜெயமோகன் ?
- கலி காலம்
- சமரசமன்று : சதியென்று காண் !
- அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை
- காஞ்சி சங்கராசாரியார் : இந்துக்களின் போப்பாண்டவர் ?
- திண்ணையும், திராவிடியத்தின் சீரழிவும், மஞ்சுளாவும், மஞசள் காவியும்
- மஞ்சுளா நவநீதனுக்கு இறுதியாக.
- மதச்சாயம் மாற்றத்திற்கு வழிவகுக்குமா ?
- சில நாட்களில்
- நாடும் கோவிலும்
- தற்காலக் காதல்
- பம்பரமே – பராபரமே
- போர்க்காலமான பூக்காடு
- சமத்துவம்
- தூக்கம்.
- இறுதியாய் ஒரு கேள்வி…!
- 23 சதம்
- பகைவன்
- குளிர் அணு இணைப்பு cold fusion கேள்வி பதில்கள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 5 – மெளனியின் ‘சாவில் பிறந்த சிருஷ்டி ‘ (பதற்றமும் பரிதாபமும்)
- மேஜை மீது சிறிய அளவில் அதிவெப்ப அணு இணைப்பு. (Hot fusion)
- மாரக்கீஷ் காய்கறி கூட்டு (Marrakesh-Africa)
- பிஜி கேரட் சூப்
- பிறவழிப் பாதைகள் (மீண்டும் தீம்தரிகிட, பன்முகம் -காலாண்டிதழ், நிழல் – நவீன சினிமாவுக்கான களம் )
- வாசிப்பனுபவமும் கண்டடைதலும் (அம்மா வந்தாள் பற்றிய இரா பாலசுப்பிரமணியம் கட்டுரைக்கு பதில்)
- திரையரங்கச் சமாச்சாரங்கள்- 1 – பெர்லின் சர்வதேச திரைப்படவிழா-2002
- இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும் – 2
- அணுப் பிணைவு சக்தி – அவனியின் எதிர்கால மின்சக்தி
- முயற்சி
- இரு நகைப்பாக்கள்
- குட்டாஸ் – 2
- பயங்கரவாதம்
- பாவனை முகங்கள்
- நவபாரதக் கண்ணம்மா: அருந்ததி ராய்
- எது கவிதை ?
- அரச சவம்