சத்தி சக்திதாசன்
இதயத்தைக் கொஞ்சம் திறந்து விடு
இருட்டழிந்து ஓளி வரட்டும்
அன்பு எனும் அந்த அகல் விளக்கை
சிறிதாய்த் தன்னும் ஏற்றி வை
மின்சாரம் மறைந்து போனால்
விளக்குத்தானே வெளிச்சம் தரும்.
எங்கே ஒடுகிறாய் ?
எத்தனை காலத்திற்கு ஓடப் போகிறாய் ?
கால்கள் தளரும் போது
தாங்க உனக்கு நிலம் வேண்டும்
நிலத்தை மிதிக்கும் போது
நிதர்சனமற்றவனே
நிச்சயமாய் இதை
நினைவிற் கொள்
ஒளித்து இருந்து கொண்டே
உலகத்தை விலைக்கு
வாங்கலாம் என
இலவசமாய்க் கனவு காணும்
சித்திரக் குருடனே
சிதைந்து போன உணர்வுகளால்
உறவுகளுக்கு உயிர் கொடுக்க
முடியுமா ?
திறந்து விடு !
உண்மைகள் தேடிவரும் போது
உள்ளத்தில் நிறைவாக தேக்கிவிடு
கலைந்து போன
காவியங்கள் கண்ணீரால்
கழுவப்பட்டது சரித்திரமே!
உன்னையே நீ
உணர்ந்து கொள்ள
தவறி விட்டால்
சத்தியத்தின் எடை
சற்றே தாழ்ந்து விடும்
உன் இதழ்களைத் திறந்து விடு !
புன்னகையின் தோற்றம்
பூவுலகின் மாற்றம்
சிங்காரம் கலைந்த
சித்திரத்தைக் கண்டு விட்டால்
அதை உடைத்து
கருங்கல்லாய் மாற்றிவிடு
மீண்டும் ஒரு சிற்பம் அமைக்க
சிற்பி ஒருவன் அதோ
உன் பின்னால்
வந்து கொண்டேயிருக்கிறான்
உன்னை நீ கேள்வி கேட்க
உத்தரவு யாரிடம் எதிர்பார்க்கிறாய் ?
நாளைய உலகில் நீ ஒர்
பாரிய பங்கெடுக்க வேண்டுமென்றால்
பதுங்கியது போதும்
பாய்ந்தெழுந்து முன்னே வா!
உலகம் உனது வரவை
உன்னிப்பாய் கவனிக்கிறது
உன் பங்கு அளிக்காமல்
லாபத்தில் ஓர் பங்கு
எந்த
வியாபாரத்தில் நீ அடைவாய்
ஒன்றே ஒன்று மட்டும்
ஒரே தடவை நான் கேட்பேன்
திறந்து விடு தோழா உன்னிதயத்தை
அன்புக்குத்
திறந்து விடு !
0000
காதலாகி
சத்தி சக்திதாசன்
ஏடெடுத்தேன் அதில் உன் பூமுகத்தின் எழில் வடித்தேன் – யான்
எனை மறந்து உன்னினைவில் உலகிழந்தேன் பூங்கொடியே
யாழெடுத்தேன் உன் தேன்குரலின் சுவையாற்றும் பண்ணிசைத்தேன் – உனை
யாசித்தேன் ; உன் இதயத்தை பூவாக நேசித்தேன் தேன் மொழியே
வாளெடுத்தேன் உனைக் குறை கூறும் வீணர் தமை வீழ்த்திட்டேன் – மானே
விழி கொண்டு நீயென் இதயத்தை ஏன் புண்ணாக்கினாய் வான்நிலவே
படையெடுத்தேன் தூக்கம் கலைக்கும் இரவுகளை வெற்றி கொள்ள – கிளியே
படர்ந்தாய் குளிர் மேகமாய் என் கொதிக்கும் நெஞ்சத்தின் ஓரத்தில் கவிக்குயிலே
கவியெடுத்தேன் கன்னியுந்தன் மீது யான் கொண்ட காதல் விளக்க – மயிலே
கலையாத மேகமாய் எனவானில் நீ வலம் வர வேண்டிப் பூஜித்தேன் மலர்வனமே
பிறப்பெடுத்தேன் மீண்டும் பிறப்பெடுப்பேன் என்றும் உன் வாழிவில் ஒளியாக – கனியே
பிரிவென்ரொரு வார்த்தை உன் வாயிலிருந்து பிறக்குமுன்னே பிரியுமெந்தன் உயிர் தமிழ்மகளே
—-
sathnel.sakthithasan@bt.com
- சுமை
- பூதளக்கனல் சுனைகளில் மின்சக்தி உற்பத்தி [Energy from Geothermal Springs]
- மெய்மையின் மயக்கம் – 6
- The School of Rock (2003)
- செம்புலப் பெயல் நீர்
- இதோ ஒன்று : ஆபாசமான இணைப்பு
- ஆட்டோகிராஃப் ‘உன் பார்வை போல என் பார்வை இல்லை, நான் கண்ட காட்சி நீ காணவில்லை ‘
- தென்கச்சி சுவாமிநாதனின் திருக்குறள் கதைகள் குறுந்தகடு
- கடிதங்கள் ஜூலை 1,2004
- ஆண்டார்குளம் திருநெல்வேலி மருத்துவ மையம் திட்டப்பணி
- அன்புடன் இதயம் – 23 – சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு
- கவிக்கட்டு 13 -திறந்து விடு
- பூச்சிகளின் ஆர்க்கெஸ்ட்ரா
- வேண்டுதல்!!
- ஏழாவது சுவை
- இசை ஒவியம்
- கவிதையாதெனில்….
- இழப்பு
- கவிதைகள்
- மதிய உணவு
- இருப்பிடம்
- வேர்வை
- விலகி
- திரு எஸ் வி ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி : காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து பியூசிஎல் பற்றி சில சிந்தனைகள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 26
- இருள் (நாடகம்)
- தீர்வுகள் கிடைக்குமா… ?
- மஸ்னவி கதை — 11- அல்வாவும் அழுகையும்
- விதியின் சதி
- ஆண்டைச் சாதியின் அரசியல் சட்டம்!
- இன்னொரு ரஜினிகாந்த் ?
- கலைஞருக்குக் கடிதம்:நெஞ்சுக்கு நீதி எங்கே ?
- தீம்தரிகிட தலையங்கங்கள்
- ஞாநியின் டைரி
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 10
- பு லி த் ே த ா ல்
- இஸ்லாத்தின் தோற்றம்
- வாரபலன் – ஜூலை 1 , 2004 – கூட்டுப் படைப்பு , காவல் துறை ஜெகஜோதி மகாத்மியம், திரைப்படத்துக்கு வங்கி உதவி
- கரைதலின் திறவுகள்…
- இரு கவிதைகள் : மரமறு மறுமரம், சொல்ல வந்தது…
- சின்னச் சின்ன..
- வயோதிகக் குழந்தை
- ஒளிருமே
- தமிழவன் கவிதைகள்-பனிரெண்டு
- நண்பா! (வெண்பா)
- நறுக்குகள்