சத்தி சக்திதாசன்
ஓடும் முகிலின் மீதமர்ந்து
உலகை வலம் வர
என் மனதில் என்றுமே
கொஞ்சமாய் ஆசை !
மலரின் மீது வண்டு
வந்தமர்ந்து
தேனுறுஞ்சும் ஓசையைக்
கேட்கக் கொஞ்சம் ஆசை !
பாலைவனத்திலே
ஏங்கிக் கிடக்கும்
பூங்கொடியின் வேரை
மழையாகி நனைத்து
மகிழக் கொஞ்சம் ஆசை !
பசியாலே வாடித் துடிக்கும்
பிள்ளையின் கையிலே
கடிக்கக் கடிக்கக்
குறையா ரொட்டித்
துண்டாய் மாறக்
கொஞ்சம் ஆசை
அந்தக் குழந்தைக்
கண்களிலே மலரும்
மகிழ்வதனைக் காணக்
கொஞ்சம் ஆசை !
தாமரை இதழின் மீதமர்ந்து
ஆதவனைக் கண்டதும்
அழகுற மலரும்
அந்த
அற்புதத்தைக் காணக்
கொஞ்சமாய் ஆசை !
இலைகளின்
இடையே மறைந்திருந்து
இனிய மாலைத் தென்றல்
இதமாய் அவைகளை வருடும்
இன்பத்தை உணரக்
கொஞ்சமாய் ஆசை. !
கள்ளமில்லாக் குழந்தையின்
களங்கமில்லா உள்ளத்தைப்
பார்த்து மகிழும்
கண்ணாடியாய் மாறிடவே
காலமெல்லாம் மாறாத
ஆசை !
வானுலகில் ஓர் தேவதையாய் மாறி
அன்னை தந்தை
பாட்டன் பாட்டி
பாரதி கம்பன்
அருகருகே அமர்ந்திருந்து
அரட்டை அடிப்பதைக்
காணக்
கொஞ்சமாய் ஆசை !
கொஞ்சக் கொஞ்ச ஆசைகளைக்
கோர்த்து மாலையாய்
கொஞ்சிச் சிரித்து
மகிழும் குழந்தையின்
கழுத்தில் போட்டு
ஆனந்தமாக ஆசை.
0000
செம்மொழிச் செந்தமிழ்
சத்தி சக்திதாசன்
பாடுவோம் இன்று ஆனந்தமாய் ஆடுவோம் உலகத் தமிழர் நாம் எம்மொழி
பாரதத்தினில் ஒரு பெருமை பெற்றது தமிழ் மொழி இன்று செம்மொழி
பயன் என்ன என்று கேட்பதை விடுங்கள் கெளரவம் அடைந்தது தமிழ்மொழி
பழம்பெரும் மொழியின் கழுத்தில் அடுத்தொரு அணிகலன் அதுவே செம்மொழி
கல்லும் மண்ணும் நிறைந்த பாதையில் நீண்ட பயணம் வந்தது நம்மொழி
கனிவாய் அதன் பாதையில் இன்று விழுந்தது பூமழை அதுவே செம்மொழி
பாரதி தட்டிக் கொடுத்து வளர்த்ததந்த மொழி தன்னிகரற்ற இனிய மொழி
பாரினில் வாழும் தமிழர் தலை நிமிர்ந்து கோஷமிடுவோம் எம்மொழி செம்மொழி
தமிழைப் பாடுவோம் ; தமிழைப் போற்றுவோம் இனிய மொழி என் தமிழ்மொழி
தரணியில் தமிழன்னைனைக்கு அடுத்தொரு ஆபரணம் அவள் மொழி செம்மொழி
0000
- கடிதம் ஜூன் 24, 2004
- நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : வெளியீட்டு விழா
- மனத்துக்கண் மாசிலனாதல் – ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ‘ நாஞ்சில் நாடன் கட்டுரை நூல் அறிமுகம்
- புலம் பெயர் சூழலில் ஒரு புதிய வரவு ஊசிஇலை
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 5
- நெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் – நூல் அறிமுகம்
- Terminal (2004)
- கனடா திரைப்பட விழாவில் செவ்வாய் கிரகம்
- சேலை கட்டும் பெண்ணுக்கு…
- இந்துத்துவம் ஏற்றம் பெற, அகண்டபாரதம் அரண்டு எழ சங்கியே சங்கூதிப் புறப்படு
- ஆட்டோகிராஃப் ‘காதல் சிறகை காற்றினில் விரித்து ‘
- உடன்பிறப்பே
- திரைகடலில் மின்சக்தி திரட்டும் உலகின் பலவித மாதிரி நிலையங்கள் [Various Types of World ‘s Ocean Power Stations]
- கடிதம் -ஜூன் 24, 2004
- கல்கியின் பார்த்திபன் கனவு இணையத்தில்
- கடிதம் ஜூன் 24, 2004
- கலைஞன் நிரப்பும் வெளி : சுந்தர ராமசாமி புகைப்படக் கண்காட்சி :ஜூன் 25 முதல் 27 வரை
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- குழந்தை…
- இல்லம்…
- காகித வீடு…
- கவிக்கட்டு 12 – கொஞ்சம் ஆசை
- சொர்க்கம்
- கவிதைகள்
- ஆறுதலில்லா சுகம்
- பட்டமரம்
- மஸ்னவி கதை — 10.1 : அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- பெண்கள்: நான் கணிக்கின்றேன்
- பொன்னாச்சிம்மா
- தென்கிழக்கு ஆசியா: அச்சுறுத்தும் பெண்கள் குழந்தைகள் கடத்தல்
- வாரபலன் – ஏமாளித் தமிழ் எழுத்தாளா , கிளிண்டன் கொஞ்சிய கிளி , ரொபீந்திர சங்கீத் ஜார்கள், வாய்க்கால் கடக்காத ஜெயபாரதி
- நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?
- இரசியாவை மிரட்டும் கதிர்வீச்சு ஆபத்து-ஒரு இரசிய விஞ்ஞானியின் பேட்டி
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 8)
- தமிழ்நாட்டுக்குப் பொருத்தமான விகிதாச்சார தேர்தல் முறை – என் கருத்துக்கள்
- கோபம்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-25
- சூத்திரம்
- அன்புடன் இதயம் – 22 – தமிழை மறப்பதோ தமிழா
- தமிழவன் கவிதைகள்-பதினொன்று
- கவிதை
- இறைவனின் காதுகள்
- அப்பாவின் காத்திருப்பு…!!!
- இப்பொழுதெல்லாம் ….
- ஏ.சிி. யில் இருக்கும் கரையான்கள்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்
- நல்லகாலம், ஒரே ஒரு சமாரியன்