’ரிஷி’
உடலின் உபாதை மனதைப் பேதுறச்செய்கிறதோ….
மனதின் வேதனை உடலைப் பிடித்தாட்டுகிறதோ……
இருந்தாற்போலிருந்து
இனமறிந்தும் அறியாமலுமாய் ஒரு இருண்மையில்
குரல்வளைக்குள் திரளும் கண்ணீர்…
இன்று புதிதாய் பிறக்கவே விரும்பினாலும்
காலப்புழுதி மண்டித் தடமழித்துக் கிடக்கும் கடந்தகாலமும்
கடக்கவேண்டிய காலமும்,அவ்வப்போது வாழ்வின் காலடியில்
தொடர்ச்சியை விரித்துநீட்டத் தவறுவதில்லை.
தீப ஒளித் திருநாளின் முன்னும் பின்னும் மூச்சுமுட்டச் செய்யும்
ஒளி-ஒலியில் திணறியழுதுகொண்டிருக்கும் அன்றைய சிறுமி
தன்னை யெதிரொலித்தவாறு அழுதுகொண்டிருக்கும்
இன்றைய குழந்தைகளின் செவிகளிலெல்லாம் மென்பஞ்சை
இதமாய்ச் செருகும் பெருவிருப்பிடம் தஞ்சமடைந்திருக்கிறாள்.
சுனாமியை நகைச்சுவையாக்கும் ’விவரமான குரூரக்கலைஞர்கள்’ ஒருபுறமென்றால்
குழந்தையை அவமானப்படுத்துகிறோம் என்பது புரியாமலே அதன் அழுகையில் ஆனந்தங்காண்பவர்கள் எத்தனையெத்தனை…
வெடிகுண்டுகளின் பிடியில் உழன்று அதையே கனாக்கண்டிருக்கும் குழந்தைகள்
பட்டாசுச் சப்தத்திற்கு என்னவிதமாய் எதிர்வினையாற்றும்?
போன வருட தீபாவளிக்கும் இந்த வருட தீபாவளிக்கும் இடையே
உருண்டோடிய தலைகள் எத்தனை?
இறந்துவிட்ட தலைமுறைகள் எத்தனை?
மெய்யுருவில் இருப்பதைவிட தெய்வ உருவில் வலம் வருவதே
நலம் பயப்பது என்பதை அறியாதவர்களல்லவே அரக்கர்கள்…
வியாபாரத்தந்திரங்கள் தெரியாதுதான் என்றாலும்
ஒரு பட்டாசுக் கடை விரிக்கும் பெருவிருப்பு
எனக்குள் விசுவரூபமெடுக்கிறது.
அதில் வாங்கப்படும் பட்டாசுகளின் திரிகளில் தீயிட, பீறிட்டுக் கிளம்பும்
இன்னிசையில் மனம் வெளுக்க வழிசெய்திருப்பாள் முத்துமாரீ!
மத்தாப்புகளின் வர்ணஒளிர்வில் துலங்கும் ஞானக்கண்கள் !
ஏழைச் சிறுவனின் கையில் தொங்கிக் கொண்டிருக்கும் ’சாட்டை’யின்
கீழ் நுனி தகதகத்து எரிய இன்னும் எரியாதிருக்கும் பகுதி
நீண்டுகொண்டே போகும் !
ஒரு இன்சொல்லுக்கும், புன்சிரிப்புக்கும் இலவசமாய்த்
தரப்படும் தின்பண்டங்கள் !
விறுவிறுவென ஏறும் ஜன்னியாகும் எண்ணங்கள்
இன்னும் பலவாய்….
இன்னும் பலவாய்….
உடலின் உபாதை மனதைப் பேதுறச்செய்கிறதோ….
மனதின் வேதனை உடலைப் பிடித்தாட்டுகிறதோ….
இருந்தாற்போலிருந்து
இனமறிந்தும் அறியாமலுமாய்
ஒரு இருண்மையில்
குரல்வளைக்குள் திரளும் கண்ணீர்…
0
ramakrishnanlatha@yahoo.com
- வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…
- முள்பாதை (அத்யாயம் 1 – தொடர்ச்சி)
- ‘இலக்கியப்பூக்கள்’ நூல் அறிமுக விழா
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! சனிக்கோளின் மிகப் பெரிய வளையம் கண்டுபிடிப்பு ! (கட்டுரை: 65)
- சாகித்திய அகாதமி: தமிழ், கன்னட எழுத்தாளர்கள் சந்திப்பு
- சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! – 1
- சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! – 2
- கடவுள் கொல்ல பார்த்தார் – மஹாத்மன் சிறுகதை விமர்சனம்- பாகம் 2
- அறிவியலும் அரையவியலும் – 3
- ‘அலைவும் உலைவும்’ நூல் வெளியீடு
- ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழு வழங்கும் 43 வது பட்டிமன்றம்
- காதல் சாத்தானின் முகவரி
- குயிலோசை
- நண்பனின் காதலி
- கையசைப்பு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 56 << கடற் கன்னி >>
- யதார்த்தங்கள்
- மழைக்காலங்களில்…
- …கதைசொல்லும் தீபாவளி
- பாரதிதாசனின் கல்விச் சிந்தனைகள்
- அறிவியல் புனை கதை 10: இனியொரு ‘விதி’ செய்வோம்
- முள்பாதை – அத்தியாயம் 1 (தெலுங்கில் புகழ்பெற்ற நாவல்)
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -3
- அன்பு மகள்
- அன்பு மகள் (தொடர்ச்சி)
- விருதுகளும் அதன் அரசியலும்
- புகழ் எனும் போதை
- வஹி பற்றிய வாசிப்பின் அரசியல்
- நிலாச்சோறு!
- பனித்துளிகள்
- படுக்கை குறிப்புகள் – 1
- பதட்டம்
- தீபாவளி 2009
- காவல் நாகம்
- வேத வனம் விருட்சம் -55
- கனவுகள் சுமக்கும் கருவறை
- தினம் தினம் தீபாவளி