நட்சத்திரவாசி
பதினைந்து வருடமாக
நானும் பார்த்துகொண்டிருக்கிறேன்
அந்த இற்றுப் போன் கிளையை
ஒடிந்து விழவும் இல்லை
முறித்து எடுக்கவும் இல்லை
பலசமயமும் மனைவி
விறகு எரிக்க இல்லை
என்ற போதும்
அந்த மரத்துக்கு
இற்று போன கிளை
என்னவோ கொள்ளை
அழகு தான்.
—
மழை காலங்களில்
எறும்புகள்
தானியங்களை
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து வேறெங்கும்
கொண்டு செல்வதை தவிர்த்து
வேறு வேலை ஏதேனும் வேலை உண்டோ?
—
பூக்களின் வாசத்தை கண்டும்
காணாமலும் போய்க்
கொண்டிருக்கிறது
ஒரு வண்டு
என்னை சமன்குலைய
செய்யும்
உத்தேசத்துடன்
—
மௌனமாய் உதிர்ந்து
விழுந்து கொண்டிருக்கிறது
ஓர் ஆலிலை
கார்டூன் நெட்வொர்க்கில்
டோமுக்கு பயந்து
ஓடும் ஜெர்ரிக்கு
அது பயன்படக் கூடும்
என்பதை தவிர்த்து
வேறென்ன யோசிக்க முடிகிறது
இப்போது?
—
ஆடு கரையும் போது
ஏன் கரைகிறது என்று
நினைக்காமலில்லை
என்றாலும்
கரைந்து விட்டு தான்
போகட்டுமே என்பதான
மனசை போலொரு
மனசா உனக்கு?
—
இரவில் எழுப்பச் சொல்லி
ஒரு நட்சத்திரம்
உறங்கி போனது
நட்சத்திரங்களை பற்றி
யாரும் கவலை
கொள்வதில்லை என்ற போதும்
நடத்திரம் என்றோ
விண்மீன் என்றோ
எப்படி வேண்டுமானாலும்
அழையுங்கள்
ஆனால்
பகற்பொழுதில் காட்டச்சொல்லி
தொந்தரவு தராதீர்
—
- செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி
- முள் – முத்துமீனாள்- முதல் பதிப்பு வெளியீட்டு விழா
- தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…
- சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
- கலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு
- கலை இலக்கிய விழாவில் ‘வல்லினம்’ இதழ் அகப்பக்கமாக புதிய அவதாரம்
- புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்!
- கருத்தியல் தர்மம் காக்க!
- சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே
- புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்
- கோடை
- என்றாலும் கவிதையே
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 51 << மாறாத உன் தோற்றம் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)
- வேத வனம் –விருட்சம் 49
- அழகு
- தாயெனும்…
- புன்னகை
- முடிவாகவில்லை
- வெறிச்சோடிக் கிடக்கும் வீடு!
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10
- யார் அந்த சண்முகம்?
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று
- தேவை கருணை பார்வை
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- பாதையையும் பயணமும்
- மிச்சாமி துக்தம் : (துக்டம்)
- சற்றுமுன் வந்த மின்னஞ்சல்
- தடை
- ’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”
- காட்டுவா சாகிப்
- தவிர்க்க விரும்பும் தருணங்கள்
- பண்டிகைகள்
- தலைகவிழல்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் (கட்டுரை: 63)