சத்தி சக்திதாசன்
விந்தையான மனிதர்
வித்தியாசமான உள்ளங்கள்
துள்ளி எழுவர் – பின்
துவண்டு விழுவர்
காகிதங்களில் கிறுக்குவர்
கசங்கிய உள்ளங்களின்
வெதும்பலை என்றுமே
வெளிப்படையாய்
ஏற்றுக்கொள்ளார்
இதுதான் இன்றைய
இருபத்தியோராம்
நூற்றாண்டாம் என்னடா
நிச்சயமாய் இதில் ஓர்
நிதர்சனம் என்றுமே
தெரியவில்லை
கலர் கலராய் டாவீகள்
கச்சிதமாய் அவைகளிலே
தினம் ஒரு சீரான
கருத்துப் போராட்டம்
‘என்று மடியும் இந்த
போலிப் போரட்டம்
என்று தணியும் இவர்
வாய்ச்சொல்லு சீர்சிருத்தம் ‘
பல வழிகள் உண்டு உலகில்
பணியாமல் வாழவே – ஆனால்
அத்தனையும் உங்கள் கொள்கையை
அனுசரிக்கும் வழிமுறையா ?
சமுதாயச்சந்தையிலே நாமெல்லாம்
சல்லிக்காசு பெறாத
சதைப்பிண்டங்கள் தான்
என்னைப்பெற்றதொரு அம்மாதான்
நான் பெறப்போகும் வாழ்விற்கு
இன்னொரு அம்மாவின்
இன்பத்தை அடகு வைக்கின்றேன்
நான் ஒரு சகோதரன் தான்
நல்ல வாழ்க்கைக்காக-இன்னொரு
சகோதரனின் கண்களில்
சமுத்திரத்தை ஏன்
உருவாக்குன்றேன்.
உலகம் இனிமையானதுதான்
உறவுகள் என்றுமே
தித்திப்பையானவைதான்
வெறும் நாவினால் மென்று
வழியைத் தவறவிடாமல்
நேராகச் செல்லும் ஓர்
நெஞ்சத்தின் துணையுண்டு.
பெண்களின் வாழ்வை-வீணே
பைத்தியக்காரத்தனமான
சிதனச்சுவாலையின் மாலை
சித்திரம்போல் கழுத்தில்
சூடி மகிழும் ஓர்
சுயம்வரத்தை நடாத்தும்
பொய்யான நிலை மாறவேண்டும்.
என்ன உலகம் இது
எப்படியான ஓர்
சிதறித் தெறித்த
தேங்காய்ச் சில்லைப்போலே
வலியின் வேகத்தைத்தன்
விவேகத்தினால் தாங்கிக்
கொண்டு
உண்மையை மூலதனமாய்
உணர்ச்சியை
வியாபாரமாய் நன்றியை
லாபமாய் கொண்ட
நம் உண்மை நண்பர்கள்
உலகில் நிச்சயம்
அன்பான,அடிப்படையுடன்
கூடிய
நேரான நெடுஞ்சாலை
என்றுமே திரும்பவும்
வளைவான பாதைகுள்
செல்லாது கண்டாரோ ?
பிச்சை கேட்கும் கூட்டமொன்று
எங்கே நானென்று பார்த்து
என்னைத்துரத்தின
அறிவாரா நானும்
தமிழெனும் உலகத்தில்
தள்ளாடும் ஓர்
ஓடமென்று
உலகம் பின்னிய இந்த
உதவாத வலையினுள்ளே
சிக்கிக் கொண்ட மகா
முட்டாள் இவன்
ஒன்றுமட்டும் உதிக்கிது இவன்
மூளையிலே
என்ன உலகமிது
எப்படி
காண்பார் உலகில்
சமத்துவத்தை
—————-
sathnel.sakthithasan@bt.com
- சோகல் கட்டுரையும், கறுப்பில் வெளியானதும் குறித்து
- யெளவனம்
- உள்வீடு
- கால் கொலுசு
- என்ன உலகமோ
- அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)
- வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.
- ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும்
- கடிதங்கள் – டிசம்பர் 11,2003
- கடிதங்கள் – ஆங்கிலம் – டிசம்பர் 11,2003
- நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம்
- ‘போலீஸ் தனது அடியாளாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது ‘
- ஒரு இந்துவின் பதில் – திரு.திருமாவளவனுக்கு
- மனித நல்லிணக்கம்.
- காபியிலும் ஆணாதிக்கம்
- கூட்டு வாழ்க்கை – ஒரு உதாரணம்
- வைர வியாபாரமும் வன்முறையும்
- வார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்
- சில எதிர்வினைகள்
- அன்புள்ள மனுஷ்யபுத்திரன்
- காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்
- முரசொலி மாறன்
- பின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை
- எனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘
- பாரதி, மகாகவி: வரலாறு
- பாரதி நினைவு நாள்
- யானை பிழைத்த வேல்
- பிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்
- பாம்புபற்றிய என் ஆறாவது கவிதை
- விடியும்! – (26)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)
- வினைத்தொகை
- மேல் நாட்டு மோகம்
- அம்மண தேசம்
- காதல் மாயம்
- ரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்
- நட்பு
- கடவுள்கள் சொர்க்கத்தில்…..
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- கொஞ்சம் தள்ளிப்போனால்
- தேர் நிலைக்கு வரும் நாள்
- தேர்க்கவிதை
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு
- கங்கைகொண்டசோழபுரம்
- புதசுக்கிரயோகம்
- கவிதைகள்
- கவிதைகள்
- என் புத்திக்குள்
- அரவம்.
- காகம்.
- ஏ ! பாரதி
- ஆதாரம்
- கபிலர் பாறை
- நாளையும்…..அக்கறையாகவோர்………….. ?
- இணையம்