சாந்தி மனோகரன்
அம்மா பால்…!!!
பழக்கத்தை மாற்றிக்கொள்ளத் தெரியாத
பால்க்காரன்…
பெண்வாசனை இல்லாத வீட்டில்
எந்த அம்மாவை அழைப்பானோ தெரியவில்லை…!
சூரியனோ…சேவலோ அல்ல-இந்த
பால்க்காரனும்…பேப்பர்-காரனும் தான்
எங்களின் விடியற்காரர்கள்…!!
பள்ளிக்கூடம் போகும் தம்பி
பணியிலிருந்து ஓய்வு பெற்ற அப்பா
படித்து முடித்து வேலைக்கு செல்லாதிருந்த நான்…
நாளொன்றுக்கு 23 மணி நேரம்
குப்பையாய்க்கிடக்கப்போகும் செய்தித்தாளுக்காக
சண்டையிட்டுக்கொள்வது வாடிக்கை…!!!
வேலை தேடி வெளியூரில் நான்
மேல் படிப்புக்காக வெளிநாட்டில் தம்பி
யோசித்துப்பார்த்தேன்….
என்னதான் செய்துகொண்டிருப்பார் அப்பா..!!!
தினம் காலை..பேப்பர் காரனும்…அம்மாவை
அழைக்கும் பால்க்காரனும்
செய்தித்தாள் சண்டைகளும்
அவர் நினைவில் வந்து போகலாம்..மற்றபடி…
வீட்டில் ..அன்பு தொலைத்த அறைகள் எல்லாம்
சிறைகளாய் மாறியிருக்கும்..அங்கேதினம்
ஆயிரம் முறை தொலைப்பேசி
சரியாக வைக்கப்பட்டுள்ளதாவென சரி பார்த்து…
எப்போதாவது சிணுங்கும் தொலைப்பேசிக்காக காதுகளும்..
எப்போதோ வரப்போகிற மரணத்திற்காக கண்களும்
எப்போதும் காத்திருக்கும்…!!!
செய்தியில் வாசித்தேன்…!!!
மரணம் தழுவுதலில்..விதவை மனைவியரை
விதவை கணவர்கள் முந்துகிறார்களாம்…
இதிலென்ன ஆச்சரியம்…
மனைவியை இழப்பதுவும் மரணம் தழுவுதலும்
ஆண்களைப்பொருத்தவரை ஒன்றுதானே…
மனைவியை இழந்த பின்னே
கணவன் வாழ்கிறான் என்றால்
உண்மையில் அதுதானே ஆச்சர்யம்…
—-
shanthi_yem@yahoo.com
- கடிதம் ஜூன் 24, 2004
- நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : வெளியீட்டு விழா
- மனத்துக்கண் மாசிலனாதல் – ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ‘ நாஞ்சில் நாடன் கட்டுரை நூல் அறிமுகம்
- புலம் பெயர் சூழலில் ஒரு புதிய வரவு ஊசிஇலை
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 5
- நெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் – நூல் அறிமுகம்
- Terminal (2004)
- கனடா திரைப்பட விழாவில் செவ்வாய் கிரகம்
- சேலை கட்டும் பெண்ணுக்கு…
- இந்துத்துவம் ஏற்றம் பெற, அகண்டபாரதம் அரண்டு எழ சங்கியே சங்கூதிப் புறப்படு
- ஆட்டோகிராஃப் ‘காதல் சிறகை காற்றினில் விரித்து ‘
- உடன்பிறப்பே
- திரைகடலில் மின்சக்தி திரட்டும் உலகின் பலவித மாதிரி நிலையங்கள் [Various Types of World ‘s Ocean Power Stations]
- கடிதம் -ஜூன் 24, 2004
- கல்கியின் பார்த்திபன் கனவு இணையத்தில்
- கடிதம் ஜூன் 24, 2004
- கலைஞன் நிரப்பும் வெளி : சுந்தர ராமசாமி புகைப்படக் கண்காட்சி :ஜூன் 25 முதல் 27 வரை
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- குழந்தை…
- இல்லம்…
- காகித வீடு…
- கவிக்கட்டு 12 – கொஞ்சம் ஆசை
- சொர்க்கம்
- கவிதைகள்
- ஆறுதலில்லா சுகம்
- பட்டமரம்
- மஸ்னவி கதை — 10.1 : அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- பெண்கள்: நான் கணிக்கின்றேன்
- பொன்னாச்சிம்மா
- தென்கிழக்கு ஆசியா: அச்சுறுத்தும் பெண்கள் குழந்தைகள் கடத்தல்
- வாரபலன் – ஏமாளித் தமிழ் எழுத்தாளா , கிளிண்டன் கொஞ்சிய கிளி , ரொபீந்திர சங்கீத் ஜார்கள், வாய்க்கால் கடக்காத ஜெயபாரதி
- நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?
- இரசியாவை மிரட்டும் கதிர்வீச்சு ஆபத்து-ஒரு இரசிய விஞ்ஞானியின் பேட்டி
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 8)
- தமிழ்நாட்டுக்குப் பொருத்தமான விகிதாச்சார தேர்தல் முறை – என் கருத்துக்கள்
- கோபம்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-25
- சூத்திரம்
- அன்புடன் இதயம் – 22 – தமிழை மறப்பதோ தமிழா
- தமிழவன் கவிதைகள்-பதினொன்று
- கவிதை
- இறைவனின் காதுகள்
- அப்பாவின் காத்திருப்பு…!!!
- இப்பொழுதெல்லாம் ….
- ஏ.சிி. யில் இருக்கும் கரையான்கள்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்
- நல்லகாலம், ஒரே ஒரு சமாரியன்