புகாரி
.
சித்திரையே எழில்
முத்திரையே
சொல்லிவிடு உன்
சூட்சுமத்தை
எத்தனையோ தமிழ்
மாதங்களும்
இன்னமுதத் தேன்
அளந்தாலும்
முத்தொளிரும் தமிழ்ப்
புத்தாண்டில்
முரசொலித்தே உன்
முகமெடுத்து
முத்தமிழர் ஏன்
முன்வைத்தார்
மொழிவாயே என்
சித்திரையே
.
அத்தைமகள் விழி
மார்கழியும்
அமுதளக்கும் நிலத்
தைமகளும்
முத்தமிடும் பொற்
கார்த்திகையும்
முகிலவனின் நல்
ஐப்பசியும்
எத்தனையோ இம்
மாதிரியாய்
முத்தமிழர் தம்
மாதங்களும்
சித்திரமாய்ப் பண்
பாடிவர
சித்திரையே நீ
ஏனடியோ
.
கத்தரியாய்த் துயர்
துண்டாடி
கவிபாடும் தீப்
பிழம்பரசி
எத்தனையோ இருள்
எழுந்தாலும்
எரிப்பாயே அருள்
நிறைப்பாயே
சித்திரையே தவப்
பொற்கொடியே
சூரியனும் உன்
சொற்படியே
முத்தெடுக்கும் நீள்
மூச்சழகே
முறைதானே நீ
தலைமகளே
.
முத்துரதம் மண்
ஊர்ந்துவர
மேற்தளத்தில் தமிழ்
வீற்றிருக்க
எத்திசையும் வளர்த்
தூயதமிழ்
எழுந்தோங்க வளம்
விண்முட்ட
புத்தாண்டின் புது
நல்வாழ்த்தாய்
புவியெங்கும் தமிழ்ச்
சுரம்பாட
சித்திரையே நீ
வந்துவிட்டாய்
செந்தமிழின் தேன்
தந்துவிட்டாய்
*
அன்புடன் புகாரி
buhari2000@hotmail.com
- சுமை
- பூதளக்கனல் சுனைகளில் மின்சக்தி உற்பத்தி [Energy from Geothermal Springs]
- மெய்மையின் மயக்கம் – 6
- The School of Rock (2003)
- செம்புலப் பெயல் நீர்
- இதோ ஒன்று : ஆபாசமான இணைப்பு
- ஆட்டோகிராஃப் ‘உன் பார்வை போல என் பார்வை இல்லை, நான் கண்ட காட்சி நீ காணவில்லை ‘
- தென்கச்சி சுவாமிநாதனின் திருக்குறள் கதைகள் குறுந்தகடு
- கடிதங்கள் ஜூலை 1,2004
- ஆண்டார்குளம் திருநெல்வேலி மருத்துவ மையம் திட்டப்பணி
- அன்புடன் இதயம் – 23 – சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு
- கவிக்கட்டு 13 -திறந்து விடு
- பூச்சிகளின் ஆர்க்கெஸ்ட்ரா
- வேண்டுதல்!!
- ஏழாவது சுவை
- இசை ஒவியம்
- கவிதையாதெனில்….
- இழப்பு
- கவிதைகள்
- மதிய உணவு
- இருப்பிடம்
- வேர்வை
- விலகி
- திரு எஸ் வி ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி : காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து பியூசிஎல் பற்றி சில சிந்தனைகள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 26
- இருள் (நாடகம்)
- தீர்வுகள் கிடைக்குமா… ?
- மஸ்னவி கதை — 11- அல்வாவும் அழுகையும்
- விதியின் சதி
- ஆண்டைச் சாதியின் அரசியல் சட்டம்!
- இன்னொரு ரஜினிகாந்த் ?
- கலைஞருக்குக் கடிதம்:நெஞ்சுக்கு நீதி எங்கே ?
- தீம்தரிகிட தலையங்கங்கள்
- ஞாநியின் டைரி
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 10
- பு லி த் ே த ா ல்
- இஸ்லாத்தின் தோற்றம்
- வாரபலன் – ஜூலை 1 , 2004 – கூட்டுப் படைப்பு , காவல் துறை ஜெகஜோதி மகாத்மியம், திரைப்படத்துக்கு வங்கி உதவி
- கரைதலின் திறவுகள்…
- இரு கவிதைகள் : மரமறு மறுமரம், சொல்ல வந்தது…
- சின்னச் சின்ன..
- வயோதிகக் குழந்தை
- ஒளிருமே
- தமிழவன் கவிதைகள்-பனிரெண்டு
- நண்பா! (வெண்பா)
- நறுக்குகள்