கோமதி நடராஜன்
===========
நேற்று நான் யார்?
இன்று நான் யார்?
நாளை நான் யார்?
நான் ,யாருக்கு யார்?
எனக்கே நான் ,யார்?
புரியவில்லை தெரிய வில்லை
தெரிவது போல் தெரிகிறது
புரியவில்லை
புரிவது போல் புரிகிறது ஆனால்
தெரிய வில்லை.
நேற்று நான் புழுவாய் நெழிந்திருப்பேன்
இன்று நான் மனிதனாய் வாழ்கின்றேன்
நாளை நான் பூண்டாக மாறலாம்.
இதில் மெய் மட்டும் நானா அல்லது
மெய் கூட பொய்யா.
ஆத்மா மட்டும் நானா அல்லது
ஆத்மா கூட அனர்த்தமா?
புரிய வில்லையே!
எனக்கே நான் யார் என்று
தெரியவில்லை இதில்
உனக்கு நான் சொந்தமென்றால்
வியப்பாய் இல்லை?
உனக்கே நீ யார் என்று புரிய வில்லை
இதில்எனக்கு நீ பந்தமென்றால்
நகைப்பாய் இல்லை?
ஒருவனுக்கு நான் மகன்
ஒருத்திக்கு நான் தம்பி
ஒருவனுக்கு நான் மாமன்
ஒருத்திக்கு நான் மச்சான்
இருந்து விட்டுப் போகட்டும்
இறைவனுக்கு நான் யார்?
அது தெரிந்தால் போதும்
என் ஜென்மம் சாபல்யமாகும்
அடுத்த ஜென்மத்தில்
உயிரும் மெய்யும் உவகையுடன் ஒன்றாகும்.
- இயல்பாயொரு இயல்பு உடைத்தல்..
- நான் யார்?
- வஹ்ஹாபியின் மோசடி
- “ஜெயகாந்தனின் இலக்கியப் பங்களிப்பு” கனடா எழுத்தாளர் இணையம் நடத்தும் கவியரங்கும் கருத்தரங்கும்
- புதுவகை நோய்: இமி-5
- வண்ணநிலவனின் நாவல் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’
- குழந்தையின் கண்களால்
- ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் – சிறுகதை விமர்சனம்
- விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்
- வானுக்கு கீழே அதன் வாழ்க்கை
- வேத வனம் -விருட்சம் 68
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -7 மதுக்குடி அங்காடி (The Tavern)
- உண்மை பேசும் சிநேகிதம்
- கரைப்பார் கரைத்தால்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -4
- அரசியல்
- இதையும்
- காத்திருப்பேன்
- அறம் செறிந்த அன்பும் மறமும்
- மொழிவது சுகம்: அடித்து வளர்க்கிற பிள்ளைகள்
- முள்பாதை 13
- பள்ளத்தாக்கு (முடிவு)
- பள்ளத்தாக்கு
- மாயபிம்பம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -6 (கடைசிக் காட்சி)
- பொட்டலம்