செல்வநாயகி.
****
தென்னைமட்டைப் பந்தலின்
சின்ன ஓட்டைகள் வழியே
வெளிச்ச வடாம்
பிழிந்துகொண்டிருக்கும்
வாசலில் முன்மதியவெயில்
தூக்கம் கெடுக்கின்றன
இரைச்சல்போட்டு என்று
ஊன்றும் கைத்தடியை
தூணில் அடிக்கும் பெரியபாட்டியை
சொட்டும் மதிக்காது
கசமுசவெனப் பேசிக்கொண்டிருக்கும்
சின்னக் குருவிகள்
பந்தல்மேல் உட்கார்ந்து
அரிசிகொண்டுவந்து இறைக்க
சற்றுநேரம் இருந்தாலும்
கழுத்து நீட்டிநீட்டி
எட்டிப்பார்க்கும் அவை
எந்தலை தென்படுகிறதாவென
ஒவ்வொரு தானிய
கொறித்தலின் முடிவிலும்
தலைசாய்த்து நோக்கும்
குருவிகளின் நட்பில்
குறைந்துவிடும் இம்மியளவேனும்
உடன்பிறப்புகள் யாருமற்று
ஒற்றையாய்ப் பிறந்ததின் ஏக்கம்
பெண்பார்க்க வந்த அன்றும்
குருவிகளுக்கு உணவிட்டுக்கொண்டிருந்ததற்கு
முணுமுணுத்தபடியிருந்தாள் அம்மா
மகள் திருமணத்திற்கு
பந்தல் இருந்த இடத்தை
ஆஸ்பெஸ்டாஸ் ஆக்கிவிட்டார் அப்பா
‘பந்தலுமில்லை நீயுமில்லை
குருவிகளுமிப்போது வருவதில்லை ‘
தொலைபேசி வழி
செய்திப்பரிமாற்றங்களுக்கிடையே
அம்மாதான் சொல்கிறாள்
திசையறிந்து வழியறிந்து
தேடிவரும் அந்தக்குருவிகள்
இக்காங்கிரீட்வனப் புழுக்கத்திலும்
அவற்றிற்கென சிலநெல்மணிகளை
அவிந்துவிடாது காப்பாற்றிவரும்
என்சினேகம் பிடித்து இழுக்க
—-
snayaki@yahoo.com
- கடிதம் – பிப்ரவரி 03, 2005 – திருமாவின் தனித் தன்மை
- கழிவு நீர் பாசனம் ! நல்லா சாப்பிடுங்க சார் !
- கசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்
- ‘காதல் ‘ :::: யதார்த்தத்தை நோக்கிய தமிழ்சினிமா பயண மைல்கல்
- சித்திரங்களின் தளமும் கவிதைத்தளமும்(தமிழ்மணவாளன் கவிதைத்தொகுதி அறிமுகம்)
- எழுத்தின் மீது ஒடுக்குமுறை
- தமிள் வால்க
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- உலகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Splitting & Drift to Smaller Continents)
- கடிதம் பிப்ரவரி 3,2005
- பிப்ரவரி 3, 2005 – இந்த வாரம் (ஏசி , காண்டலீசா ரைஸ், ஆயில்)
- உறவு
- கவிக்கட்டு …. 47
- பேரழிவுச் சூலாயுதம்!
- பெரியபுராணம் – 29
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சுநாமி ஊழியம்
- குருவிகள்
- வின்சன்ட் வான்கோவின் இரத்தம்
- விழிப்பு
- அறிவியல் கதை! – ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு! ‘
- டச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம்
- தமிழ்ச்சிறுமியும் நியூஸ்லாந்தும் , நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும் தமிழ்ச்சமுதாயமும். ‘நொந்துகொள்வதும்,புரிந்துகொள்வதும்.
- உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் வர்க்கப்போரும்–மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் மூலதனக்காப்பு யுத்தம்.
- சென்ற வாரங்களில் (பெப்ரவரி 3, 2005) கோவா, பிகார், ஈராக், நேபாள், ஈரான், சீனா, தமிழ்நாடு
- தமிழா….தமிழா!
- கண்ணன் காலடியில்
- இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி!
- துணை – பகுதி 3
- எப்படிக் கொல்லுவது ( மூலம் – கெய்த் டக்ளஸ் )
- மனைவியின் சிநேகிதர்
- கணவனின் தோழியர்
- தொப்புள் கொடி!
- கவிதை
- உனது மொழியை பு ாியாத பாவி நான்
- சாலையோர நடைபாதை
- ஒவ்வாமை