திகட்டும் இசை

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

ராம்ப்ரசாத்


கீச்சுக்குரலில் பாடிக்கொண்டிருந்தது
அடுப்பு…

ஊதுகுழல் அதன் பாடலுக்கு
காதோரமாய் என்ன சொல்லிற்றோ…
வெட்கத்தில் சிவந்தது அடுப்பு…

தலைக்குமேல் உயர்த்திப் பிடித்திருந்த‌
பாத்திர இசைக் கருவியில்
கன நேரமும் தாளங்கள்…

இசை திகட்டும் வரை
கேட்கலாமென அமர்ந்திருக்கிறாள்
பெண்ணொருத்தி….

– ‍ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigation

ராம்ப்ரசாத்

ராம்ப்ரசாத்