பத்திரமாய்

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

பவளமணி பிரகாசம்


தென்றலாய் நடந்து வந்தாய்
மனதில் வீசியது புயல்
குளிர்ந்த பார்வை வீசினாய்
உள்ளே வெடித்தது எரிமலை
அன்பாய் அழகாய் பேசினாய்
அண்டம் மீண்டும் சிதறியது
அவசரமாய் ஏனடி ஓடினாய் ?
ஆவியைத் தொட்ட பாவையே!
இன்னும் என்னுள் இனிக்கிறதே
இருவாச்சி போல் மணக்கிறதே
தரையில் கால் பாவ மறுக்கிறதே
விண்ணில் மனம் பறக்கிறதே
இந்தக் கணத்தை, என்னுணர்வை
பத்திரமாய் பொத்திக் காத்திட
பரவசமாய் பிரித்துப் பார்த்திட
பதித்து வைக்கிறேன் இவ்வரிகளிலே.

—-
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்