கவலையில்…

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

மணிமலர் ரமேஷ்


மண்ணெண்னை லாரியை
ஓட்டி வரும் கவலையில்
இடுங்கிய கண்களால் சிரிக்கும்
சீனத்தாத்தாவின் சிரிப்பு
ஏனோ
தாய்நாட்டில் பிரிந்து வளரும்
பிரிய மகளின் புன்னகையை
நினைவெழுப்பியது
ஆறுதலாய்
நெற்றியில் முத்தம் பதித்து
அரவணைப்பாய்
தூங்க வைக்க இயலுமோ
இப் பெரியவரை என்னால்… ?

எதையுமே நினைவுறுத்தா
எல்லாக் குழந்தைகளுக்கும்
தருவதற்கு வாய்க்குமோ
என்னிடம் எதுவும்.

***

subramesh@hotmail.com

Series Navigation

மணிமலர் ரமேஷ்

மணிமலர் ரமேஷ்