திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030309_Issue

அரசியலும் சமூகமும்

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 14

இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள் (தொடர்ச்சி) மஞ்சுளா நவநீதன் 12. 13. 14 மூன்று கேள்விகள் : இந்தக் கேள்விகள் காஷ்மீர் தொடர்பானவை. காஷ்மீர்பற்றி பாகிஸ்தான் சொல்வதை…

இந்த வாரம் இப்படி (மார்ச் 9, 2003- சாத்தன்குளம் வெற்றி, மாயாவதி ஊழல், சவர்க்கர் படத்திறப்பு, இந்தி மைல்கல்)

சின்னக்கருப்பன் ஜெயலலிதாவின் வெற்றி 40 சதவீதத்துக்கும் மேற்பட்டு கிரிஸ்தவர்கள் வாழும் சாத்தன்குளத்தில் (சாத்தான்குளம் தேவன்குளம் இன்ன வகையறா இல்லை. சீத்தலை சாத்தனார் மாதிரியான ஒரு சாத்தன் வெட்டிய குளம்) ஜெயலலிதாவின் வெற்றி பலருக்கும் இன்னும்…

மன்னிக்க வேண்டுகிறோம்

வ.ஐ.ச.ஜெயபாலன் அண்மைக் காலங்களில் இராமேஸ்வரம் மீனவர்கள்மீது காட்டு மிராண்டித் தனமான தாக்குதலில் மன்னாரைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள் ஈடு பட்டு வருவது அதிற்ச்சி தருகிறது. பின்னணி நிலமைகள் எதுவாக இருந்தாலும் மன்னார் மீனவர்களது வன்முறை…

நினைத்தேன்…சொல்கிறேன்…காதலும் கல்யாணமும் பற்றி…

PS நரேந்திரன் அருட்பா, மருட்பா, வஞ்சிப்பா, கலிப்பா எதுவுமே எனக்கு வேணாம்ப்பா. பொறுப்பா, அன்பா ஒரு பொண்டாட்டிதான் வேணும்ப்பா. அவ கறுப்பா ? சிவப்பா ? கவலையே இல்லேப்பா. உடனே எனக்கொரு கல்யாணம் பண்ணப்பா.…

நசிந்த கிராமங்களும், நரகமாகும் நகரங்களும்

கோ. ஜோதி “சுழன்றதும் ஏர்ப்பின்னதும் உலகம்”, “உழுவார் உலகத்தாக்கு ஆணி” இந்தியாவின் ஆன்மா கிராமாத்தில்தான் உள்ளது என்பன போன்ற கூற்றுக்கள் இன்று பொய்யாகி வருகின்றன. இந்தியா விவசாய வளர்ச்சியைச் சார்ந்துள்ள நாடு, மக்களும், அரசும்…

ஆசியாவில் வளர்ச்சி வறுமையைக் குறைத்தது என்கிறார் சுர்ஜித் எஸ் பல்லா.

சந்தீபன் தேவ் சுர்ஜித் எஸ் பல்லா சுதந்திரச் சிந்தனை கொண்ட ஒரு பொருளாதார நிபுணர். புனிதமான கருத்துகள் என்று சொல்லப் படுகிறவற்றை தகர்ப்பவர். அவருடைய புதிய் நூல் : ' தேசமே இல்லை என்று…

ராஜதந்திரமும் இலக்கியமும் (சுராவின் பேட்டி)

ஜீவா சுந்தர ராமசாமி அவர்களின் பேட்டியைப்ப்ற்றி நீலகண்டன் அரவிந்தன் எழுதிய எதிர்வினை தேவைக்குமேல் கடுமையைக் கொண்டிருந்தது என்று எனக்குப் படுகிறது. மூத்த சாதனையாளரான படைப்பாளியை பற்றி எழுதும்போது அதற்குரிய சமநிலையுடனும் அவரது சாதனைகளை முன்னால்வைத்தபடியும்தான்…

கடிதங்கள்

மார்ச் 09, 2003 அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, நண்பர் மத்தளராயன் [இரா.முருகன்] கட்டுரையை இனிய உரை நடையில் துவங்கி வெண்பாவில் முடிப்பது ஓர் புதிய அம்சம்தான்! ஆனால் 'வெண்பா ' என்று தலைப்பில் பூசிக்…

விஷமாகும் மனம் (பள்ளிக்கூட புத்தகங்களில் வெறுப்பு ஒரு பாடம்)

மொஹம்மது ஷெஜாத் (ஃப்ரைடே டைம்ஸ் இதழிலிருந்து) முஸ்லீம்களே உலகத்தை ஆள உரிமை உள்ளவர்கள், அதற்கு குறுக்கே வரும் காபிர்களைக் கொல்ல முஸ்லீம்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜமாத்-உத்-தாவா அமைப்பால் நடத்தப்படும் ஏராளமான பாகிஸ்தானிய பள்ளிக்கூடங்களில் இது பள்ளிச்சிறுவர்களுக்குச்…

இந்தியாவுக்கு புத்த மதம் திரும்பி வருகிறது

ஃப்ரான்ஸ்வா கோஷியே இந்துமதம் தத்துவவிசாரங்களிலும், சடங்குகளிலும், சாதியத்திலும் மூழ்கிக் கிடந்த நாளில் புத்தர் வந்தார் என்பதில் சிறு சந்தேகமும் இல்லை. வெகுகாலத்துக்குப் பின்னர் ஒரு சங்கராச்சார்யர் வந்து இந்துமதத்துக்கு புது தெம்பை கொடுக்க வேண்டியிருந்தது.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி

அரவிந்தன் நீலகண்டன் முன் குறிப்பு: அணுஉலைகள் குறித்து மிக வேகமாக சிந்திக்கின்றனர் திரு.சின்ன கருப்பனும் மற்றும் திரு.ஜெயபாரதனும். திரு. சின்ன கருப்பனின் கட்டுரையில் மீள்பயன்படு தன்மை கொண்ட எரிசக்தி மூலங்கள் குறித்து ஒரே வரியுடன்,…

உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் அகால முடிவுகள்![Fast Breeder Reactors]

சி. ஜெயபாரதன், கனடா பாரத வேகப் பெருக்கி அணு உலைகளுக்கு எதிர்ப்பு! 2001 ஏப்ரல் 25 ஆம் தேதி 'ஹிந்து ' நாளிதழில், அமெரிக்க மேரிலாந்து சூழ் மண்டலச் சக்தி நிலை ஆராய்ச்சிக் கூடத்தின்…

அறிவியல் துளிகள்-17

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி 65. தொலைக்காட்சி ஆன்டெனாக்களைச் செய்ய அலுமினிய உலோகத்தை மட்டுமே பயன் படுத்துவது ஏன் ? மின்சாரத்தை எளிதில் கடத்துகிற எந்த உலோகத்தையும் ஆன்டெனாவிற்காகப்…

இலக்கிய கட்டுரைகள்

திறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும் (மு.தளையசிங்கத்தின் ‘கோட்டை ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 51)

பாவண்ணன் மதுரையிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தேன். நான் உட்கார்ந்திருந்த பெட்டியில் என்னைத் தவிர எல்லாரும் மாணவ மாணவிகள். ஏதோ விடுப்பு முடிந்து மீண்டும் கல்லுாரிக்குத் திரும்பிக்கொண்டிருப்பதைப்போலப் பார்வைக்குத் தோன்றியது. வண்டி கிளம்பியதிலிருந்து ஓயாமல் பேசியபடி…

பயணக் குறிப்புகள் 2003

காஞ்சனா தாமோதரன் இது வடிவ இலக்கணத்துடன் எழுதப்பட்ட கட்டுரை அல்ல. என் ஜனவரி மாதத்திய சென்னைப் பயணத்தைப் பற்றிய குறிப்புகள் இவை. குடும்பம், தொழில், பிற பணிகள் சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கிய பின், மீதிப்…

கதைகள்

வாயு – அத்தியாயம் நான்கு

இரா முருகன் ஆரம்பித்து விடவேண்டியதுதான். தாடிக்காரன் உள்ளே வந்தான். எதற்கென்று தெரியாமல் முன்வரிசைக் கிழவர் எழுந்து நின்றார். குளோரியா அம்மாளும். தாடிக்காரன் முடி மறைத்தது போக மிச்சமிருந்த முகத்திலும் முன் தலையிலும் பல வண்ணச்…

அவனோட கணக்கு

நாகரத்தினம் கிருஷ்ணா அவர் நினைவிலிருந்து எல்லாம் துடைக்கப்பட்டிருந்தது. சுத்தமாக. அட்ஷரசுத்தமாக. நான் ' என்ற இந்த எனது மானுடப் பிறவியின் கடந்த கால கர்மாக்களைத் திரும்ப அழைக்க முயன்று களைத்துப் போயிருந்தார். இறுதிச் செயற்பாடுகள்மட்டும்…

கண்ணாடிக்கு அப்பால்

ஜெயமோகன் பதினேழு வருடம் முன்பு கோவளத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் வெயிட்டராக இருந்த போது ஒரு ஆஸ்திரேலிய பெண்ணுக்கு புராதன மரச்சிற்பம் ஒன்றை காய்கறிவிலைக்கு வாங்கி பொன்விலைக்கு விற்றேன். அன்று தொடங்கியது என் தொழில்…

இன்னா செய்தாரை ஒறுத்தல்…

-இரவி ஸ்ரீகுமார். -1- ராஜகோபாலின் ஆயசு அநியாயமாக அந்த நண்பகல் வேளை -யில் முடிந்தது. அவருடைய டூவிலருக்கு முன்னால் இரண்டு, பின்னால் இரண்டு என நான்கு ஆட்டோக்கள். மொத்தம் ஆறு ரவுடிகள்.அவரை மறித்து-வெட்டினார்கள். ஓடத்…

கவிதைகள்

என் கண்ணில்

பவளமணி பிரகாசம் அன்று முதல் இன்று வரை காதல் வயப்பட்ட கன்னியரும், காளையரும் கனவுலகில் மிதக்கின்றார், கற்பனையில் பறக்கின்றார், கவிதையில் பேசுகின்றார், தலைமுடியை தங்கத்தில் பதித்து அணிகின்றார்; காதங்கள் கடந்து சென்று சாகசங்கள் புரிகின்றார்;…

பனியின் மடியில்….

புஷ்பா கிறிஸ்ரி 35cm பனி அளவு, இவ்வளவு என்று சொல்லித் தான் இன்றைய வானிலை அறிக்கையில் அறிவித்திருந்தார்கள். ஆமாம். இன்று நிச்சயம் 30cm பனி கொட்டும் என்றதும் நெஞ்சில் தூக்கி வாரிப்போட்டது.. கடவுளே! இவ்வளவு…

அன்புடனும், நன்றியுடனும் லூஸிபருக்காக

மண்ணாந்தை 'இருள் படர்ந்த ஆடித்தளத்தில் மெல்ல தெளிந்து உதயமாகின்றன காரிருளின் தொன்மங்கள். ' :கார்ல் உங் பிரபஞ்ச வெளியில் பல ஒளி வருடங்களுக்கப்பால் எங்கோ அல்லது ஆழ் மனத்தின் அடியாழங்களுக்குள் எங்கோ புதைந்திருக்கும் ஓர்…

பெண்

பிரியா ஆர்.சி. நீ தீ தீபம் ஏற்றவும், தீப்பந்தம் கொளுத்தவும் உன்னால் முடியும் நீ நீர் உயிர் கொடுக்கவும், உயிரெடுக்கவும் உன்னால் முடியும் நீ காற்று தாலாட்டும் தென்றலாக, தவிக்கவிடும் சூறாவளியாக உன்னால் முடியும்…

நான்கு கவிதைகள்

விக்ரமாதித்யன் ஏன் எண்ணென்றால் கணக்கு எழுத்தெனில் கவிதை எண்ணுக்குப் பிறகுதான் எழுத்தை வைத்திருக்கின்றார். ** நிச்சயமற்ற இருப்பு நிச்சயமற்ற வாழ்வு நிச்சயமற்ற எழுத்து நிச்சயிக்கப்பெற்ற மரணத்துள். ** படிக்காது கெட்டவர்கள் யாருமில்லை படித்து கெட்டவர்கள்தாம்…

உயர் மொழி !

புகாரி, கனடா சொற்களின் கல்லறையோ - நாக்கு சுழல்வதால் சுகமில்லையோ ? பற்களின் கூடுகளில் - சொல்லின் பசியோடு திரிகின்றதோ ? சொல்லுங்கள் மெளனிகளே - செவியுள் சொல்லற்ற ஊமைகளே ! சொல்கின்ற சொல்லென்பதும்…

‘ஊக்கும் பின்னும் ‘

கரு.திருவரசு ஊக்குவிக்க வேண்டுமென ஓர்தலைவர் பேசினார் பாக்குவிற்ற பேர்களும் பஞ்சுவிற்ற பேர்களும் தேக்குவிற்ற பேர்களும் செல்வரான நாட்டிலே ஊக்குவிற்றும் தோன்றும் உயர்வு! கொண்டைப்பின் வாங்கக் குமரிப்பெண் போகையிலே அண்டை ஒலிபெருக்கி ஆங்காரம் செய்கிறது பின்வாங்கக்…

வறளையின் வீச்சு

இராம.கி. பொதித்த கமலையிற் பொருகும் மசகு; கதிர்த்த தொள்ளையிற் கருங்கல் தெரிப; கதுத்துச் செறிந்து அதிர்த்த வீளையோ, எதிர்த்து எழும்ப எண்பது நொடியே! ஊற்றும் பொய்த்தே! உழல்வதும் சேறே! ஏற்ற மாக்கள் என்பொடு நொய்ந்தே!…

உறவுக்காலம்

ஸ்ரீநிவாஸன் ராமச்சந்திரன் என் மனக்குளத்தின் மத்தியில் கல் எறிந்து நீரலைகள் நிற்கும் முன் காணாமல் போனவளே ! பார்வை நிலைகொளல்களும் வார்த்தை பரிமாற்றங்களுமாய் மேகக்கூட்டத்தின் மத்தியில், வானவில்லின் வண்ணம் கொண்டு எழுதப்பட்டதொரு ஒப்பந்தம், நூலறுந்த…

நீ வருவாய் என…..

மலர்வனம் விடியற்காலை பொழுது இளந்தென்றல் காற்று சாளரத்தின் ஓரமாய் உனக்காக காத்திருக்கிறது.......... உன் வீட்டு கொடியில் பூத்த மல்லிகைப் பூ உன் கூந்தலுக்காய் காத்திருக்கிறது........... அழகிய புல்வெளிகள் உன் மலர் பாதங்களுக்காய் காத்திருக்கிறது.............. கிழக்கே…