”பருத்திக்காடு” – நூல் வெளியீடு

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

சுப்ரபாரதிமணியன்


==================================

திருப்பூர் எட்டாவது புத்தக கண்காட்சியில் திருப்பூர்

படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திக்காடு” வெளியிடப்பட்டது.

சுப்ரபாரதிமணியன் தலைமை வகித்தார். திருப்பூர் தமிழ்ச்சங்க செயலர்

ஆடிட்டர் லோகநாதன் “பருத்திக்காடு” நூலை வெளியிட, வழக்கறிஞர்

சங்கத் தலைவர் சொக்கலிங்கம், வெற்றித் தமிழர் பேரவைத் தலைவர்

ஜீவானந்தம், வழக்கறிஞர் மோகன், டாப்லைட் வேலு, ஆகியோர் பிரதிகளைப்

பெற்றுக் கொண்டனர்.

வழக்கறிஞர் சி.ரவி நூல் குறித்த அறிமுகம் உரை நிகழ்த்தினார்..

எழுத்தாளர்கள்

மகுடேஸ்வரன், குழந்தைவேலு, தாண்டவக்கோன், காரை. சந்திரசேகர்,

ஆசீர்வாதம் மற்றும் புத்தக கண்காட்சி அமைப்பாளர் கே.ஆர். ஈஸ்வரன்,

கலைவாணி சோமு, ராம மூர்த்தி, நிஷார் அகமது பழ.விஸ்வநாதன் உட்பட

பலர் முன்னணி வகித்தனர். பிரதிகள் கனவு முகவரியில் கிடைக்கும்

பருத்திக்காடு- திருப்பூர் படைப்பளிகளின் தொகுப்பு 2010 : பங்கு பெற்ற

படைப்பாளிகள்:

சிவதாசன்/ சுப்ரபரதிமணியன்/ சாமக்கோடங்கி ரவி/ சுந்தர் அனர்வா/

மகுடேஸ்வரன்/ ஆதலையூர் சூரியகுமார்/

குழந்தைவேலு/ இரத்தினமூர்த்தி/ ஆர்.பி.ராஜநாயகம்/

காரை சந்திரசேகரன்/ தாண்டவக்கோன்/ சுகன்யா/ சுபமுகி/

கிரிஜா சுப்ரமணியம்/ ஆலம்/ காயாதவன்./ ஆர்.ஆர். பாலகிருஷ்ணன்/

ரவி மகேஷ்/ ஆசிர்வாதம்/ திருப்பூர் டி.குமார்/ டாக்டர் செலவராஜ்/

நாகேஷ்வரன்/ டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா/ சிவக்குமார் பிரபு/

நாதன்ரகுநாதன்/ சி.சுப்ரமணியம்/ முத்துபாரதி/ து.ஜோ. பிரபாகர்/

ஆர்.காளியப்பன். விலை ரூ 70/

பிரதிகளுக்கு : கனவு, 8.2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602.

” கனவு” இலக்கிய கூட்டம்

“கனவு” இலக்கிய வட்ட மார்ச் கூட்டம் ஓஷோபவனில்

நடைபெற்றது. வழக்கறிஞர் சுகன்யா தலைமை தாங்கினார். துணை கலெக்டர்

செல்வராஜ் முன்னிலை வகித்தார். சுப்ரபாரதிமணியன் திருப்பூர்

படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான ” பருத்திக்காடு” ( வெளியீடு: கனவு

பதிப்பகம், திருப்பூர், பக்கங்கள் 144, விலை ரூ.70) நூலை அறிமுகப்படுத்தி

பேசினார். நாவலாசிரியர் தி. குழந்தைவேலு “ தந்திர கவசம்” என்ற

அவருடைய புதிய நாவலின் அனுபவங்களை விளக்கினார். சிவதாசன்

“ தென் கொங்கு” என்ற உடுமலை ‘துரை அங்குசாமி’ எழுதிய நூலை

அறிமுகப்படுத்தினார். வழக்கறிஞர் சி.ரவி, கவிஞர்கள் ரத்தினமூர்த்தி , ஜோதி,

ஆகியோர் இன்றைய திருப்பூர் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள்

பற்றி பேசினார்.

செய்தி: சி.ரவி

வழக்கறிஞர்.

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்