கடிதம் – மார்ச் 4,2004
ஆசாரகீனன்
—-
‘சிலுவைராஜ் சரித்திரம் ‘ – நாவல் பற்றிய காஞ்சனா தாமோதரனின் வாசக அனுபவம் படித்தேன். அண்மைக்கால நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளில் பெரும்பாலானவற்றைப் படிக்கும்போது, ‘தமிழை எங்கே நிறுத்தலாம் ? ‘ என்ற கவிதையில் ஞானக்கூத்தன் எழுதிய பின்வரும் வரிகளே நினைவுக்கு வந்து தொலைக்கின்றன:
வேற்று நாட்டுச் சரக்குகளோடு
உள்ளூர்ச் சரக்கை ஒப்பிட்டால்
தலையில் தலையில் அடித்துக் கொண்டால்
தேவலாம் போல இருக்குது.
இத்தகைய அனுபவத்தை ஏற்படுத்தி தலையில் அடித்துக்கொள்ளும் அபாயத்தை ஏற்படுத்தாமலும், வாசகனை அச்சுறுத்தி ஒட்டு மொத்தமாக மேல் நாட்டு இலக்கியத்தின் பக்கமோ அல்லது தற்போதைய மோஸ்தரான தமிழ் மரபின் பக்கமோ விரட்டி விட்டுவிடாமலும் எழுதப்பட்டுள்ள படைப்பு ராஜ் கெளதமனின் சிலுவைராஜ் சரித்திரம் என்பதை காஞ்சனாவின் அறிமுகம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழில் எழுதப்பட்டுள்ள சொற்பமான நல்ல படைப்புகளில் இதுவும் ஒன்று என்பதில் ஐயமில்லை.
பலரையும் நையாண்டி செய்வதாலேயே இந்த நாவலுக்கு நியாயமாகக் கிடைத்திருக்கவேண்டிய கவனம் கிடைக்கவில்லையோ என்று கருத வேண்டி இருக்கிறது. உதாரணமாக, புத்தகத்தில் தமிழ் விரிவுரையாளர் வேலைக்கான நேர்காணல் ஒன்றை இப்படி நகைச்சுவையுடன் விவரிக்கிறார் ராஜ் கெளதமன்:
‘ஒங்க விருப்பப் பாடம் எது ? ‘
‘தமிழ் நாவல்கள் ‘
‘தமிழ் நாவலாசிரியர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் யார் ? ‘
சிலுவை தொண்டைக்குழி வரை ஜெயகாந்தன் வந்து விட்டார். அதுக்குள்ளே சிலுவை ஒரு கணம் யோசித்துப் பார்த்தான். ஜெயகாந்தனைப் பழமைவாதிகளுக்குப் பிடிக்காது என்பது தெரியும். எதுக்கு வம்பு ? ‘டாக்டர் மு.வ., அகிலன் ‘.
‘இவர்களைப் பிடிக்க என்ன காரணம் ? ‘
‘காதலையும், ஆண்-பெண் உறவுகளையும் தமிழ் மரபுக்கு ஏற்றபடி கண்ணியமாகச் சித்தரித்துள்ளார்கள். ‘
‘டாக்டர் மு.வ.வின் சிறுகதை ஒன்றைக் கூற முடியுமா ? ‘
‘குறட்டை ஒலி. ‘ அந்த நேரம் பார்த்து அந்த மூணுபேருக்கும் டிபன் காபி வந்ததால், சிலுவையைப் போகலாம் என்று அனுப்பி விட்டார்கள். பாவம், இண்டர்வியூ பண்ணிப் பண்ணிக் களச்சுப் போயிருப்பாங்க!
சிலுவைராஜ் சரித்திரத்தை இதுவரை கட்டுடைக்காமல் விட்டு வைத்ததற்கு தமிழக அறிவு ஜீவிகளுக்கும், கலக அனார்க்கியர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
– ஆசாரகீனன்
aacharakeen@yahoo.com
- சிறகுகள்
- வாரபலன் – மார்ச் 4,2004 – காலங்கள் தோறும் – வல்லம்பர் சங்கம் – வந்ததா வரவில்லையா ? – கணையாழித் தொகுதி – ரங்கா டியர்
- முதன் முதலாய்
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 9
- விடியும்!- நாவல் – (38)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -15)
- வாப்பாக்காக…
- பாதை எங்கே ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தெட்டு
- பாஜக ஒளிர்கிறதா ?
- கண்ணகி கதை இலக்கியமா ?
- சுற்றுச்சூழல் அழிவால் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்குகின்றன.
- பூகோளச் சுழற்சியால் அசுர ஹரிக்கேன்களை உருவாக்கும் கொரியோலிஸ் விளைவு (Coriolis Effect)
- தனிமை விரும்பிகள் ரேடியோ அலைவரிசை (RFID) தொழில்நுட்பத்ததை ஏன் எதிர்க்கிறார்கள் ?
- அன்னை
- கரும்பும் கசந்த கதை
- ஐம்பூதங்களின் அழுகுரல்
- நெருடல்களற்ற சுகம்
- திரிசங்கு சொர்க்கம்
- புத்த களமா ? யுத்த களமா ?
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 2
- கோஷா முறை
- மறு வாசிப்பில் திருப்புகழ்
- கடிதம் மார்ச் 4,2004
- கடிதம் 4, மார்ச் 2004
- கடிதம் – மார்ச் 4,2004
- கடிதம் – மார்ச் 4,2004
- கடிதம் – மார்ச் 4,2004 – இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் – இன்னும் சில சந்தேகங்கள்
- கடிதம் – மார்ச் 3,2004
- Frontend – Backend
- யுகபாரதியின் ‘தெப்பக்கட்டை ‘
- முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்
- இலக்கியத்தில் வாழ்வின் தரிசனங்கள் :எனக்குப் பிடித்த கதைகள் -வாசிப்பனுவபம்
- திசைகள் மின்னிதழ் அரும்பு சொல் வெளிஇணைந்து வழங்கும்
- நிராகரிப்பு
- எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி!
- ‘கானா ‘ தாலாட்டு
- வேண்டாம்.. வேண்டாம்..ஆனால்..
- முடிவுக்காலமே வைட்டமின்
- சூட்சும சொப்னம்
- எல்லாம் சுகமே..
- என்னால் முடியும்
- பூ வண்ணம்
- பாசமே நீ எங்கே ?
- அருகிருக்கும் மெளனம்
- பிளாஸ்டிக்