கானல்காட்டில் இலக்கிய மான்கள்

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

பா.சத்தியமோகன்


அறிதல் – ஆக்கம் – பகிர்தல் – என்ற நோக்கத்தோடு நெய்வேலியில் மாலன் அவர்களால் துவங்கப்பட்ட –

திசைகள் இயக்கம் சார்பில் அமர்வு ஏற்பாடாகி யிருந்தது . பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலன் அவர்கள்

தலைமையில் கானல்காடு என்ற இடத்தில் இலக்கிய சந்திப்பு (18 & 19.6.02005 ல் ) நடைபெற்றது. பட்டிவீர்ன் பட்டியை

தனது சொந்த ஊராகக்கொண்ட கவிஞர் திலகபாமா , ப்ழனி மலைக்குன்றுப்பகுதியில் ( கானல் காடு ) இரண்டு நாள்

நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார் . காலம் சென்ற சி.க. அவர்களின் துணைவியார் தமது உரையாடலில் சி.சு.செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி, லா.ச.ரா., ஆகியோர் பற்றின நினைவுக்குறிப்புகளைத் தெரிவித்தார் . மிக ருசியாக. திலகபாமாவின் உழைப்பு கூட்ட நிகழ்ச்சிக்கு த்தூணாக இருந்தது.

கிட்டத்தட்ட முப்பது நபர்களின் உணவு , தங்குமிடம், ஆகியவற்றை ஏற்பாடு செய்வது

அந்த மலைக்குன்றில் சாதாரணமா ? அதுவும் கொஞ்சம் கூட சலிப்பில்லாமல் !! கடைசி வழியனுப்பல் வரையில்

சிரித்த முகத்தோடு அதனைச்சாதித்துக்காட்டினார். இது எளிதல்ல. இலக்கியத்திற்காக தாங்கி

க்கொள்ளும் தன்மை அன்பாக மாறிப்போனாதால்தான் அவருக்கு இது சாத்தியமாகியிருக்கிறது .

பிரம்மரா ?ன், இந்திரன் , தொ.பரமசிவன், பழமலை , பா.வெங்கடேசன், ெ ?யசந்திரன் , நித்திலன் , வைகைச்செல்வி, மதுமிதா, தேவேந்திரபூபதி , ரெங்கநாயகி, உள்ளிட்ட பலர்

கலந்து கொண்டனர் . கண்பார்வையற்ற பேராசிரியர் கண்ணன் போன்றோரின் வருகை அந்த மலைக்குன்றில் –

இயற்கைசக்தியின் நடுவே – தமிழின் சக்தியை – நிரூபித்த்தது . பல வி ?யங்கள் பயனுள்ளதாக பேசப்பட்டன.

public poetry , private poetry பற்றின விவாதமும், பாலினசொற்கள் புழக்கம் கவிதையில் நோக்கமும் பொறுப்பும்

அற்றவையாக ஆனது பற்றியும் போயின விவாதங்கள்.

ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் , கவிதை ரசனை, குழுவிவாதம் தவிர்ப்பு , தெளிவு கொண்ட போக்குகள்,

யாவும் சாத்தியமாகின கூட்ட்ம் இதுபோல் கலந்துகொண்டு நீண்ட மாதங்களாகிவிட்டன.

— பா.சத்தியமோகன்

sathiyamohan@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்