நீளும் இகற்போர்…..

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

சக்தி



சிநேகத்தின் வேர்கள்
கருகுவதை கண்டு
உயிர்ப்பின் தாள லயம்
ஸ்வரம் தப்பிடும்…..

நிகழ்கால நிஜத்திற்கு
இறந்தகால நிழலிற்கும்
நடுவே மனம் வெகுவாய்
அலைப்புறும்…

பொய்யென
தெரிந்தும் மெய்
அன்பின் வாசனையை
விரும்பும்…..

இனம்புரியா ஏதோ ஒரு
உணர்விழை புதிதாய்
நெய்யப்படுவதும்
நெய்யப்பட்ட
அம்மாயத்திரை
சிதறடிக்கபடுவதுமாய்
நீளும் இகற்போரில்
என் நெஞ்சம் துவளும்….

— சக்தி —

Series Navigation

சக்தி

சக்தி