திமிர்க் காற்றும், விளை நிலமும்
ராம்ப்ரசாத்

இடம்பெயர்ந்தறியா விளைநிலத்தை
தேடி வந்து விதைகளைத் தூவிச்செல்கிறது
வஞ்சக வானம் விதைத்த
பெருஞ்சீற்றத் திமிர் பிடித்த காற்று…
பாலின வேறுபாட்டின் மங்கலான ஒளியில்
நெல்லெனப் பதரைத் தாங்கிய விதைகளை
விழுங்கி பசலை கொள்கின்றது
விளை நிலம்…
விதைக்கப்பட்ட விதைகள்
பதரென உமிழ்கின்றன
ஒரு வீணடித்த தலைமுறையை…
ஆங்கொரு மூலையில்,
விளை நிலங்களை ஒத்துவிடும்
தலைமுறையை தேடி உருவாகிறது
சீற்றத்திமிர் கொண்ட காற்று
மிகச்சிறியதொரு சுழலென…
– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)