அகோரி
ப.மதியழகன்,
விதி செய்து வைத்தவன்
சதி செய்து விட்டான்
தரிசு நிலத்தில் விதை முளைவிட
அருள் செய்து விட்டான்
தாந்தோன்றியானவன்
திருவோடு தொலைத்துவிட்டான்
ஊர் செய்யும்
நையாண்டியை பொறுக்காமல்
வித்தையை காட்டிட துணிந்துவிட்டான்
கரிய நிற நாயோடு பைரவராய்
ஒவ்வொரு இரவும்
ஊர் சுற்றி விட்டான்
திருநீலகண்டனாய்
விஷம் உண்டு விட்டான்
நாயன்மார்களை விட்டுவைக்காமல்
அவர்களது வாழ்வில்
அளவுக்கு மீறி விளையாடிவிட்டான்
லீலைகளை செய்வதையே
தனது தொழிலாக கொண்டுவிட்டான்
யாருக்கும் அகப்படாதவன்
பராரியின் கனவில் தோன்றிவிட்டான்
சமூகத்தைவிட்டு ஒதுங்கி
அகத் தேடலையே தொழிலாக
கொண்டு விட்டான்
அவனொருவன் மட்டிலும்
அகம் பிரம்மாஸ்மி என
உணர்ந்து கொண்டு விட்டான்
உமையவளை என்றென்றுமாய்
குமரிமுனையில் காக்க வைத்துவிட்டான்
ஐம்புலன்களை அடக்கி ஒடுக்கி
அதன் மூலம் உலகாண்டு விட்டான்.
ப.மதியழகன்,
mathi2134@gmail.com
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 5
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 3
- மொழிவது சுகம்: மகேசன் நலமே மக்கள் நலம்
- நட்பு
- சிறகும், உறவும்!
- இரண்டு முழு நிலா = தாய்லாந்து நாடோடிக்கதை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -8
- பூரண சுதந்திரம் ?
- உலக ஆத்மா நீ = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -3
- ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா
- சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (6)
- ஜெயபாரதன் கவிதை பற்றி
- நானை கொலை செய்த மரணம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -6
- வேத வனம்- விருட்சம் 99
- முள்பாதை 42
- மூன்றாமவன்
- நாசாவும் ஈசாவும் கூட்டமைத்துச் செவ்வாய்க் கோள் ஆராயும் விண்ணுளவி
- பட்டுக்கோட்டையார் வலியுறுத்தும் பெண்ணுரிமைகள்
- லெனின் விருது வழங்கும் நிகழ்வு
- எல்லார் நெஞ்சிலும் பாலைவனம் இருக்கிறது
- சிரிக்கும் தருணங்கள் ….!
- தாலிபானியத்தை வளர்க்கும் இந்தியா
- பரிமளவல்லி – தொடர் – அத்தியாயம் 7. வின்டர் ப்ரேக்
- காலச்சுவடு பதிப்பகம் புத்தக வெளியீடு
- மலைகள்
- நீலத்தில் மனம் தோயும்போது…
- ரகசியங்களின் ஒற்றை சாவி
- தனித்தில்லை
- மானுட பிம்பங்கள்
- சாத்தான் படலம் !
- அகோரி
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 8