தொட்டி மீன்
ராமலக்ஷ்மி, பெங்களூர்.
படகு கவிழ்ந்ததில் பலபேர் மரணம்
வெள்ளப் பெருக்கோடு
அடித்துச் செல்லப்பட்டவர் ஆயிரமாயிரம்
பூகம்பத்தால் பூண்டோடு ஒழிந்தது நகரம்
ரயில் தடம்புரண்டதில் காலமானவர்
இருபது இருக்கலாம்
தொலைக்காட்சிப் பெட்டியில்
தொடர்ந்து வந்த செய்திகளை
ஆயாசமாய்ப் பார்த்தபடி
சோற்றிலே இன்னொமொரு
கரண்டி குழம்பினை ஊற்றிக் கொண்டவன்
‘எங்கே சின்னு’வென மகளைத் தேடினான்.
‘தொட்டிமீன் செத்து மிதந்த சோகத்துல
அழுதழுது தூங்கிடுச்சு’ மனைவி பதிலளிக்க,
ஒரே ஒருகணநேர உறுத்தலுக்குப் பின்
மெதுவாகச் சொன்னான்:
‘கொழப்பில உப்பு கொஞ்சம் ஜாஸ்தி.’
அத்தனைதான் முடிகிறது
அனுதாபம் என்பது அன்றாட வாழ்விலே.
*** *** ***
நன்றி: அகநாழிகை [மார்ச் 2010]
- குரானிய வாசிப்பில் ஆண்பிரதியும் பெண்பிரதியும்
- 9/11 – விடையறாக் கேள்விகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஏழு
- இவர்களும் சுவர்களும்
- வீட்டோடு
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -13
- சு.மு.அகமது கவிதை
- காதல் வரம் பெற்றிடாத ஞானிகள்
- கவன குறிப்பெடுத்தல்..!
- வேத வனம் விருட்சம் 81
- தொட்டி மீன்
- சதையானவள் .
- மரணத்தின் வாசல்..
- வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்
- முன் முடிவுகளற்று இருப்பது
- கருத்தற்ற வாழ்வு குறித்து – ஒரு சங்க பாடலின் நீட்சியாக
- முல்லைப்பாட்டில் பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள்
- மனித உணர்வுகளின் அழுத்தமும் காந்தியின் அடையாள அரசியலும்- புத்தக வாசிப்பு
- சில்லியில் நேர்ந்த அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்திருக்கலாம் !
- நினைவில் நின்றவள்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -10
- அவனுக்காவே வாழ்ந்தாள்..= புத்தக வெளியீட்டு விழா
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் – கவிதை -27
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -2
- 11.04.2010 அன்று நடைபெற்ற கம்பன் மகளிரணி விழா வருணனை
- ஒரு கோப்பைத் தேனீர் (கலந்துரையாடல் நிகழ்ச்சி)
- உள்ளங்கையில் உலக இலக்கியம்= அறிமுகம்
- முள்பாதை 25