அவிழ்க்கப்படாத சில முடிச்சுகள்
ப மதியழகன்
அவிழ்க்கப்படாத சில முடிச்சுகள்
மலர்கள் மலர்வதும்,
மணம் பரப்புவதும்
பலனை எதிர்ப்பார்த்தா?
சேவல் கூவுவதும்,
மயில் ஆடுவதும்
மதுவின் கிறக்கத்தினாலா?
தென்றல் வீசுவதும்,
மழை பொழிவதும்
அரச கட்டளைக்கு அடிபணிந்தா?
குழந்தை அழுவதும்,
பாவ மன்னிப்புக் கோருவதும்
கடவுளுக்கு பயந்தா?
இரவும், பகலும்
ஒன்று சேராமல் இருப்பது
இயற்கையின் விதியா?
பகலில் நிலவும், விண்மீனும்
மறைந்து போவது
சூரியனின் சூழ்ச்சியா?
பிறப்பும், இறப்பும்
நித்தமும் நிகழ்வது
சூன்யத் தத்துவமா?
மாயை
கன்னி அவள் காத்திருக்க
கண்ணன் அவன் தோள்கொடுக்க
அன்பு நெஞ்சம் கலந்திருக்க
ஆசை உள்ளம் சமயம் பார்த்திருக்க
கனவு உலகம் கவர்ந்திழுக்க
இளமைக் கடல் ஆர்ப்பரிக்க
நாணத்திரை அகன்றிருக்க
ஆனந்த வேட்கையில் ஜீவன் மூழ்கியிருக்க
உலகமும், உயிர்களும் சற்றே மறைந்திருக்க
பக்தியும், பயமும் சிந்தையிலிருந்து நீங்கியிருக்க
மிருகம் மட்டும் எஞ்சி நிற்க
மீண்டும் மண்ணில் பிறவியெடுக்க
மோகத்தீயில் முக்குளிக்க
வாலிபத்தை வரமாய் கேட்க
தேவதையை தனது இளமைக்கு
துணையாய் கொடுக்க
மண்டியிட்டு மருகுகிறது
மானிடனின் நெஞ்சம்
மாயையின் வலையில் வசமாகச்
சிக்கிச் சுழன்றபடியே…
ப.மதியழகன்
115, வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்.
திருவாரூர் மாவட்டம்.
மன்னார்குடி-614001.
தமிழ்நாடு.
mathi2k9@gmail.com
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -12
- அப்படியே….!
- விஸ்வரூபம் – ஒரு அறிவிப்பு
- நல்லாசிரியர்
- அணுவளவும் பயமில்லை
- கடற்பறவையின் தொழுகை
- தொலைக்காட்சி
- கண்ணோடு காண்பதெல்லாம்
- ஆயுதங்களால் போரிடுவது எளிதானது
- நாடகம் நிகழ்வு அழகியல் _வெளி ரங்கராஜன்
- அவிழ்க்கப்படாத சில முடிச்சுகள்
- பட்டாளத்து மாமா
- வேத வனம் விருட்சம் -51
- பணமா? பாசமா?
- விண்கோள்களின் சுற்று விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630)
- அண்ணா – வேலுமணியின் வரைபடம்
- கடவுளிடமிருந்து பறிக்கப்பட்டவர்கள்
- ‘தேவனி’ன் நாவல் ‘கல்யாணி’
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -1 (மரணத்தில் எஞ்சியவை)
- சாகித்திய அகாதமி: ஆனந்தகுமாருக்கு சா அ பரிசு
- அப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி
- முடிந்த முடிவாக இஸ்லாம் இருக்கிறது என்றும் வாதத்திற்கும், மருநோக்கல்களுக்கும் இடமில்லை என்பதைத் தெளிவு படுத்தியமைக்கு
- அறிவியல் புனைகதை:8 ஐஸ்வர்யா பாட்டியும் தமிழ் பேசும் கிளியும்
- சிங்கப்பூர் கவிமாலை விருது விழா
- PRESTIGE GROUP Presents “Katha Collage” & Ismat Apa Ke Naam – II
- நியூஜெர்ஸி பாரதி தமிழ் சங்கம் – தமிழ் வகுப்புகள்
- சிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’
- தவறியவர்களுக்கு
- அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
- விவேகனுக்கு எனது பதில்
- அப்துல் அஸீஸ் உலகம் தட்டை என்று சொல்கிறாரா?
- முத்துசாமி பழனியப்பன் கவிதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 53 << நீ வறுமைப் பெண் >>
- ரசனை
- நட்புடன் நண்பனுக்கு