கடவுளுக்கு ஒரு கடிதம்

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

கவிதா நோர்வே


அன்பு நண்ப,

சக தோழர்க்கு எழுதி எழுதி

சொற்கள் தீர்ந்த கணத்தில்

நினைவில் வருகிறாய் நீ.

நலமா?

சொல்லமுடியாத வலிகளும்

அலறியும் கேட்கப்படாத கத்தல்களும்

எழுதி எழுதி ஊர் சேராக் கடிதங்களும்

மீண்டும் என் சேகரிப்புக்கே வருகிறது

மொய்த்துக்கிடக்கும்

அலறல்களின் அடியில்

எஞ்சிக் கிடக்கும்

என் உயிரின் மிச்சத்திற்கு

இன்று கடைசிநாளாய் இருக்கலாம்

இன்றே

என்னைச் சுமந்த மனிதர்களும்

என் சொந்த மண்ணும் சேர்ந்தே

என்னைத் தூக்கிலிடலாம்

நெருக்கி வரும்

மனித படலத்தின்

இரச்சல் தாண்டி

என் அலறல் கேட்கிறதா?

மதுரை அல்ல

வெறும் தீக்குச்சி கூட

கண்களால் பற்றவைக்க முடியாதென்று

தெரிந்த பின்னும் சிலை வைக்கும்

மனிதர்கள் போலும்

பாலை மணலில் விதை போட்டு

கனியும் எனக் காத்திருக்கும்

மனிதர்கள் போலும்…

நானும் கடவுள் பற்றிக்

கத்திக் கத்தி

காலம் கடந்து விட்டேன்

மண் புசிக்கும் மனித குவியல்களுக்குக்

கடவுள்களே காரணி என்று கூவி

இன்று மௌனியாகிவிட்டேன்.

மனித கபாலங்களை

அக்ரோஷத்தோடு சுமக்கும்

உன்னிடம் தஞ்சம் அடையும்

என் இன மக்கள்

உன் சுடுகாட்டிலேயே

உன்னைத் தூக்கிலிடும்

சிவராத்திரிக்கு

நான் கண் விழிக்கும்

நாள் வரும்

உயிர்த்தெழுந்தவனே உன்னை

ரத்தம் சிந்தாமல்

முள்முடி சூடாமல்

மீண்டும் சிலுவையேற்ற

மரப்பலகைகள் தயாராகும்

ஆணினத்தின் மதங்களில்

ஆண்வர்க்கம் உச்ச ஆதிக்கம்

செய்யும் மசூதிகள்

புராதண பொருட்களாகும்

என் கனவு யுகத்தில்

இக்கடிதம் உரத்து

வாசிக்கப்படும்

அதுவரை…

இல்லாத என் அப்பனிற்கு

எழுதிய கடிதங்களுடன் சேர்ந்து

இதுவும் ஒன்றாய் கிடக்கட்டும் விடு!


kavithai1@hotmail.com

Series Navigation

கவிதா நோர்வே

கவிதா நோர்வே

கடவுளுக்கு ஒரு கடிதம்

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

கவிதா நோர்வே


அன்பு நண்ப,

சக தோழர்க்கு எழுதி எழுதி

சொற்கள் தீர்ந்த கணத்தில்

நினைவில் வருகிறாய் நீ.

நலமா?

சொல்லமுடியாத வலிகளும்

அலறியும் கேட்கப்படாத கத்தல்களும்

எழுதி எழுதி ஊர் சேராக் கடிதங்களும்

மீண்டும் என் சேகரிப்புக்கே வருகிறது

மொய்த்துக்கிடக்கும்

அலறல்களின் அடியில்

எஞ்சிக் கிடக்கும்

என் உயிரின் மிச்சத்திற்கு

இன்று கடைசிநாளாய் இருக்கலாம்

என்னைச் சுமந்த மனிதர்களும்

என் சொந்த மண்ணும் சேர்ந்தே

என்னைத் தூக்கிலிடலாம்

நெருக்கி வரும்

மனித படலத்தின்

இரச்சல் தாண்டி

என் அலறல் கேட்கிறதா?

மதுரை அல்ல

வெறும் தீக்குச்சி கூட

கண்களால் பற்றவைக்க முடியாதென்று

தெரிந்த பின்னும் சிலை வைக்கும்

மனிதர்களும்,

பாலை மணலில் விதை போட்டு

கனியும் எனக் காத்திருக்கும்

மனிதர்களும் போல…

நானும் கடவுள் பற்றிச் சொல்லி

காலம் கடந்து விட்டேன்

மண் புசிக்கும் மனித குவியல்களுக்குக்

கடவுள்களே காரணி என்று கூவி

மௌனியாகிவிட்டேன்.

மனித கபாலங்களை

தணியாத ஆசையோடு சுமக்கும்

உன்னிடம் தஞ்சம் அடையும்

என் இன மக்கள்

உன் சுடுகாட்டிலேயே

உன்னைத் தூக்கிலிடுவர்

உயிர்த்தெழுந்தாயே உன்னை

மீண்டும் சிலுவையிடுவர்

ஆண்வர்க்கம் உச்ச ஆதிக்கம்

செய்யும் மசூதிகள்

புராதண பொருட்களாகும்

என் கனவு யுகத்தில்

இக்கடிதம் உரத்து

வாசிக்கப்படும்

அதுவரை…

இல்லாத என் அப்பனிற்கு

எழுதிய கடிதங்களுடன் சேர்ந்து

இதுவும் ஒன்றாய் கிடக்கட்டும் விடு!


kavithai1@hotmail.com

Series Navigation

கவிதா நோர்வே

கவிதா நோர்வே