உண்மை தெய்வமான க(வி)தை

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

தேவமைந்தன்


ஆதியில் உண்மை இருந்தது.
பேசக் கற்றுக்கொண்டார்கள்
மனிதர்கள்.
மொழியும் கட்டமைந்தது.
சொற்கள்
மனிதரிடையே பரிமாறிய
மறுகணம்
பொய் பிறந்தது.
கொண்டாடும்
வழக்கமும் பிறந்தது.
மனிதர்கள்
பொய்யைத் தோள்களில்
தூக்கிவைத்துக்
கொண்டாடினார்கள்.
கொண்டாடவே
உண்மை
தெய்வம் ஆனது.
****
karupannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்