உனது மொழியை பு ாியாத பாவி நான்
நளாயினி தாமரைச்செல்வன்
____
மனசும் உடலும் சோர்ந்த தருணங்களில்
உன் மடியில் கால் பதித்து நடைபயின்று
உன் அலையின் ஓசையில்
என் சோகங்களையே
களைந்து போட்டு
உன்னோடு சேர்ந்து
குதாகலித்திருக்கிறேன்.
மலைச் சூாியனின்
மறைவு கண்டு
உன்மடியில்
முகப்புதைத்தழும்
சூாியனின் கோல அழகை
கவிதையாக புனைந்து
உரக்க உன் செவிகளில்
சேற்கும் படி
காற்றிற்கு சொல்லியிருப்பேன்.
என் சூாியக் காதலனின்
கரம் பிடித்து
உன் அலைகளே
நமக்கு சாட்சி என நினைத்து
உன் மணற்கரையில் நடந்திருப்பேன்.
நிலவின் ஒளியிலே
உன்மடியில் படுத்திருந்து
நீ காற்றிடம் சொல்லியனுப்பும்
கதைகளை குதூகலம் பொங்ககேட்டிருப்பேன்.
வற்றாத என் ஐPவநதியாய்
என்மனதுள் பல கவிதைகள் புனைய
உன்மடி தந்தவளே
பார் உன்னைக் கூட
ஒரு ஆணாக சித்தாிக்க முடியவில்லை.
ஆண்கள் அப்பப்போ தமது உணர்வுகளை வெளிக்காட்டி
சாந்தமாகிடுவர்.
பெண்களோ அப்படியல்ல
என்பதற்கு நீ நல்ல உதாரணம்.
அமைதி என்றுமே ஆபத்தானது
என உணர்த்த நீ ஒருத்தி போதும்.
மெளனம் என்றுமே
பயங்கரத்தை தோற்றுவிக்கும்
என்பது எத்தனை உண்மையானது.
காலம் காலமாக
உனக்கு தந்த வலிகளை
வெளிக்காட்ட
நீ இப்படியா செய்து தொலைப்பது.
உனது எத்தனை சோகங்களை
அன்றயபொழுதில்
அலைகளோடு எனக்கு சொல்லி அனுப்பினாயோ ?
உனது மொழியை பு ாியாத பாவியாகிவிட்டேன்.
நளாயினி தாமரைச்செல்வன்.
சுவிற்சலாந்து.
30-12-2004
thamarachselvan@hotmail.com
- சென்ற வாரங்களில் (பெப்ரவரி 3, 2005) கோவா, பிகார், ஈராக், நேபாள், ஈரான், சீனா, தமிழ்நாடு
- தமிழா….தமிழா!
- கண்ணன் காலடியில்
- உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் வர்க்கப்போரும்–மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் மூலதனக்காப்பு யுத்தம்.
- தமிழ்ச்சிறுமியும் நியூஸ்லாந்தும் , நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும் தமிழ்ச்சமுதாயமும். ‘நொந்துகொள்வதும்,புரிந்துகொள்வதும்.
- விழிப்பு
- அறிவியல் கதை! – ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு! ‘
- டச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம்
- இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி!
- வின்சன்ட் வான்கோவின் இரத்தம்
- உனது மொழியை பு ாியாத பாவி நான்
- சாலையோர நடைபாதை
- குருவிகள்
- கவிதை
- தொப்புள் கொடி!
- எப்படிக் கொல்லுவது ( மூலம் – கெய்த் டக்ளஸ் )
- மனைவியின் சிநேகிதர்
- கணவனின் தோழியர்
- ஒவ்வாமை
- உலகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Splitting & Drift to Smaller Continents)
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- தமிள் வால்க
- எழுத்தின் மீது ஒடுக்குமுறை
- கசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்
- ‘காதல் ‘ :::: யதார்த்தத்தை நோக்கிய தமிழ்சினிமா பயண மைல்கல்
- சித்திரங்களின் தளமும் கவிதைத்தளமும்(தமிழ்மணவாளன் கவிதைத்தொகுதி அறிமுகம்)
- கடிதம் – பிப்ரவரி 03, 2005 – திருமாவின் தனித் தன்மை
- கடிதம் பிப்ரவரி 3,2005
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சுநாமி ஊழியம்
- கழிவு நீர் பாசனம் ! நல்லா சாப்பிடுங்க சார் !
- பெரியபுராணம் – 29
- பேரழிவுச் சூலாயுதம்!
- பிப்ரவரி 3, 2005 – இந்த வாரம் (ஏசி , காண்டலீசா ரைஸ், ஆயில்)
- உறவு
- கவிக்கட்டு …. 47
- துணை – பகுதி 3