பேதமை

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

பவளமணி பிரகாசம்


வெள்ளிப் படகிலேறி
கருங்கடலில் வலை வீசினேன்
துள்ளின வைர மீன்கள்
மணக்க மணக்க குழம்பு வைத்து
ருசிக்க ருசிக்க உண்டிட
ஏனோ மனம் வரவில்லை
மடியில் வைத்து ரசித்தேன்
துடித்து முடிந்தது
ஈரம் காய்ந்தது
கருவாடாக காத்திருந்தேன்
கிட்டவில்லை அதுவும்
வைரத் தூளெல்லாம் அந்தோ
வெறும் சாம்பலானதே
வெந்து மடிந்ததே
மாயமென்ன அறிகிலேன்
பேதமை என்பதோ
பெருந்தவறென்பதோ
வேதனை என்பதே
தேடிக் கொண்ட வினையோ

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்