நம்பிக்கை துரோகி
சுஜாதா சோமசுந்தரம்
நம்பிக்கை துரோகியே
நயவஞ்சகத்தின் திருவுருவே
உன்றைப்பற்றி எழுத
என் பேனாக்கூட மறுத்துவிட்டது
இருந்த போதிலும்
நேரத்தின் கட்டாயத்திற்குள்
சிக்குண்டு
மனதில் உள்ளதை
மறைக்காமல் கொட்டுகிறேன்.
நட்பு என்றால் என்ன ?
உனக்கு தெரியுமா…உந்தன்
அகராதியை புரட்டிப்பார்.
என் வாழ்வில்
நட்பு என்ற வாசலில்
ஒரு சிலர் மட்டுமே
கோலம் போட்டவர்கள்-அதில்
நீயும் ஒருத்தியென்று
அசட்டுத்தனமாக நம்பினேன்.
நீ போட்ட கோலத்தால்
அந்த இடமே கறைபடிந்து விட்டதடி..
உனக்காக….நான்
இழந்ததை எழுத வார்த்தைக்கு
வழி தெரியவில்லை.
என்னுடன்..பழகியது,
பேசியது,சிரித்தது
எல்லாமே நடிப்பா.. ?
நம்பமுடியவில்லையடி..
எந்தன் மனக்குமுறல்
இரவையும் பகலாக்கி விட்டதடி..
பஸ் பிராயணத்தில்
ஹாய் சொல்வதில்லடி நட்பு
உணர்வு பூர்வமாக அனுபவிக்கும்
உன்னத உறவடி அது.
உனக்காக
இந்த நிமிடத்திலிருந்து
நேரத்தை செலவழிக்க
எந்தன் மனம் மறுக்கிறது
உன்னுடன் பழகிய நாட்களை
அழிக்க முயன்ற போதிலும்
நீ…கூறிய வார்த்தைகளை
ஜீரணிக்க முடியவில்லையடி
மறக்க முயல்கிறேன்…
எந்தன் மனதில் சுவடு பதித்த
அந்த நாட்களை….
—-
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 35
- மாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ
- எங்க ஊரு காதல பத்தி…
- பதவி உயர்வு
- அன்புடன் இதயம் – 30
- தோல்விக்குப்பின்
- ஊருப்பொண்ணு
- கடவுள் வழிபாடும், தனிநபர் வழிபாடும்
- மாறிவரும் ராஷ்டிரபதி பவன்
- குடியரசு தலைவர் அப்துல் கலாம் – மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்
- மஞ்சுளா நவநீதனின் தேடலும் இடறலும்
- விடியும்
- ஊரறிய மாலையிட..
- வலை
- நூல் வெளீயிடு
- காதலன்
- வலை
- தவறாக ஒரு அடையாளம்
- கவிக்கட்டு 23
- உயிரிடம் ஒரு சந்தேகம்….
- பொற்கோவின் ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ – நூல் மதிப்புரை
Thinnai – Weekly Tamil Magazine - சென்னை நீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உருவாகட்டும் [Desalination Plants for Chennai
- பூச்சிகளின் சுய மருத்துவம்
- சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்
- சாகர புஷ்பங்கள்
- சொன்னார்கள் செப்டம்பர் 2, 2004 – தொகுப்பு
- கருணாநிதி, பரத்வாஜ், வைரமுத்து – ஏன் இந்தச் சிரிப்பு
- ஆட்டோகிராஃப் 16-ஒரு கதாநாயகி கதை சொன்னாள்
- மெய்மையின் மயக்கம்-15
- கடிதம் செப்டம்பர் 2, 2004
- கடிதம் செப்டம்பர் 2, 2004 – அரவிந்தன் நீலகண்டனுக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும்…
- தென் இலங்கை கவிதை நூல் வெளியீடு
- மாணிக்க விநாயகர் கோவில் பாரிஸ்
- கடிதம் செப்டம்பர் 2, 2004
- கடிதம் செப்டம்பர் 2,2004 – சன் டிவியின் சர்வாதிகாரம்
- கடிதம் செப்டம்பர் 2, 2004 – இத்தாலிய மாதா கீ ஜே!
- யேசுமாதா போன்ற முகம்
- இந்த வாரம் இப்படி (செம்டம்பர் 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ
- வலை
- …. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)
- வேறுபாடு….!
- பெரியபுராணம் – 7
- வலை
- வீடு
- ஈரடி கவிதைகள்
- நம்பிக்கை துரோகி
- நிலாச் சோறு
- அமெரிக்கா…! அமெரிக்கா…!!
- துர்நாற்றம்