கடவுளே காதலா…
நெப்போலியன், சிங்கப்பூர்
கடவுள்
காதலிக்க
முடிவு செய்தார்
காதலிக்கு
முதல் கடிதம்
எழுத அமர்ந்தார்
ஆதியானவளே…
பாதியானவளே…
அண்டமானவளே…
கண்டமானவளே…
என எழுதிய ஆரம்பமே
அவளுக்குப் பொருந்தாது
என்றுணர
ஹாய்… டார்லிங்…
ஸ்வீட்டி… டேஸ்ட்டி…
என்றபின்,
முதல் சுற்று
இரண்டாம் சுற்று
மூன்றாம் சுற்று
கடவுளின் முகத்தில்
தாடி துளிர் விட ஆரம்பித்தது…
காதலிக்குத் திருமணம்
மனிதனுடன்!
உச்சி கொதிக்க
கண்கள் சிவக்க
தன் சக்தி முழுக்க
பிரயோகித்து
திருமண வீட்டில்
திடுப்பென விசுவரூபமெடுத்தார்…
‘ கல்யாண வீட்டிற்க்கு
கடவுளே நேரில்
ஆசிர்வதிக்க ‘
என்ற வியப்புடன்
புதுமணத் தம்பதிகளுடன்
கூட்டமே காலில் விழ…
வெட்கித் தலை குனிந்து
விருட்டென மறைந்தார்
பிறகு
அவர் காதலிக்கவுமில்லை
காதலிக்கும் நமக்கு
சொர்க்கத்தில்
இடமளிக்கப் போவதுமில்லை…
kavingarnepolian@yahoo.com.sg
- ஆண் விபசாரிகள்
- விடியும்! நாவல் – (8)
- ஃபீனிக்ஸ்
- கடிதங்கள்
- அம்மா இங்கே வா வா…
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினெட்டு
- அல்லி-மல்லி அலசல் (பாகம் 4)
- பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துத்தான் திருமணம் செய்யவேண்டும்.
- நல்லது நாடும் கிறுஸ்துவ மதமாற்றக்காரர்களே : எங்களை விட்டுவிடுங்கள்
- உரையாடும் கலை
- கடவுளே காதலா…
- வேர்களைத் தேடி…. பயணக் குறிப்புகள் -2
- வாரபலன் ஆகஸ்ட் 2, 2003 ( ஆர்ச்சர், பொது சிவில் சட்டம், விவரணப்படம், இடாகினிப் பேய்)
- பணமில்லா அழகு பாழ்
- கோவாவில் பொது சிவில் சட்டம்
- பசு
- புதிய பரிணாமம்
- ஊக்கமருந்து
- சுதந்திர தினம்.
- கூந்தலை முன்புறம் போடாதே!..
- பசிக்கட்டும்
- அறிவியல் மேதைகள் என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi)
- நெஞ்சுக்குத் தெரியும்
- அழுக்கு
- காஸ்ஸினி விண்வெளிக் கப்பலின் புளுடோனிய வெப்பமின் கலனுக்கு எதிர்ப்புகள்! [Protest against Plutonium Powered Cassini Spaceship]
- சுஜாதாவின் ‘இரண்டாவது காதல் கதை ‘ – நாவல். ஒரு வாசகனின் குறிப்புகள்.
- சரிவின் சித்திரங்கள் (பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் சுயசரிதை நூல் அறிமுகம்)
- ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1
- கலைச்சொற்களைப்பற்றி
- கொள்கை ஒன்றே கூட்டணி தான் வேறு வேறு
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளித்தோர் பட்டியல்
- காலம் சஞ்சிகையின் வாழும் தமிழ்
- உயிர்மை பதிப்பகம்
- தகவல் பெறும் உரிமை- அன்னா ஹஸாரேயின் உண்ணாவிரதப் போராட்டம்
- பி.கே. சிவகுமார் கவிதைகள்
- சிற்பிகளின் கற்பனைக்கு!
- மகுடம் சரிந்தது
- பாதியில் ஒரு கவிதை
- மான மிருந்தால், மங்கையரே!
- உன்னால் முடியும் தம்பி