நெடில்

This entry is part [part not set] of 18 in the series 20010204_Issue

பாரதிராமன்


ஓ, இது விதி என்றாய்
இல்லை, வீதி என்றேன்
வீதியில் விரைந்ததால்தானே விதி வாய்த்தது ?

ஓ, இது சதி என்றாய்
இல்லை, சாதி என்றேன்
சாதி என்பதால்தானே சதி வெடிக்கிறது ?

ஓ, இது பணம் என்றாய்
இல்லை, பாணம் என்றேன்
பாணம் என்பதால்தானே பாதாளம்வரை பாய்கிறது ?

ஓ, இது நிதி என்றாய்
இல்லை, நீதி என்றேன்
நீதி என்பதால்தானே நிறைவாய்க் கிடைக்கிறது ?

ஓ, இது மனம் என்றாய்
இல்லை, மானம் என்றேன்
மானம் என்பதால்தானே மனமும் மருகுகிறது

ஓ, இது முடம் என்றாய்
இல்லை, மூடம் என்றேன்
மூடம் என்றபின்தானே வாய் முடமானாய் ?

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.