பாதை எங்கே ?

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

சந்திரவதனா செல்வகுமாரன்


அவளை சோகம் பிடுங்கித் தின்றது. அழவேண்டும் போல இருந்தது. சின்னச் சீரகத்தைப் பலகையில் போட்டு அரைக்கும் போது இரண்டு சொட்டுக் கண்ணீர் சின்னச் சீரகத்துள் விழுந்தது.

அவள் குலுங்கியழவில்லை. கண்ணீர் தரைதாரையாக ஓடவில்லை. இரண்டே இரண்டு சொட்டுக் கண்ணீர்தான். அந்தக் கண்ணீாில் ஒரு கடலளவு சோகம் நிறைந்திருந்தது.

அவளுக்கு அவள் மேலேயே பச்சாத்தாபம் ஏற்பட்டது. கண்ணுக்குத் தொியாத விலங்கொன்று தன்னை இறுக்குவதை உணர்ந்தாள். கண்ணுக்குத் தொியும் விலங்கென்றாலும் உடைந்தெறிந்து விட்டு ஓடிவிடலாம்: எங்கே உடைப்பது ? எங்கே ஓடுவது ? என்று தொியாத பயமும் குழப்பமும் அவளுள்.

யேர்மனிக்கு வந்து மூன்று மாதமாகியும் இந்த வீட்டை விட்டு அவள் எங்கும் செல்ல வில்லை. அவள் சென்றிருப்பாள். மாியதாஸ் அவளை எங்குமே அழைத்துச் செல்லவில்லை.

குசினி யன்னலினு}டே வெளியிலே தொிந்த எல்லா மனிதர்களுமே சந்தோசமாகத் திாிவது போலவும் தான் மட்டும் துன்ப வெள்ளத்துள் அமிழ்ந்து போனது போலவும் அவளுக்கு இருந்தது.

இப்படியெல்லாாம் நடக்கும் என்று தொிந்திருந்தால் அவள் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஊரான தெல்லிப்பளையை விட்டு இங்கு யேர்மனி வரை வந்திருக்கவே மாட்டாள்.

ளெிநாட்டு மாப்பிள்ளை என்று மணம் பேசி வந்த போது அவளை விட அவள் அப்பா அாிநாயகம்தான் பொிதும் சந்தோசப் பட்டார். மி ஷெல் என்ற பயங்கர நிலையிலிருந்து மகளுக்காவது ஒரு விடுதலையும் அதே நேரம் ஒரு நல்ல வாழ்க்கையும் அமையப் போகிறதென்ற நம்பிக்கையும் சந்தோசமும் அவரை உசார் படுத்த காலங்காலமாய் அவர்களுக்கென்றிருந்த அந்த நிலத்தையும் அந்தக் குடிலையும் விற்று அவளை வெளிநாட்டுக்கு அனுப்பவும் துணிந்தார்.

வேண்டாம் அப்பா..! எங்கடை வீடு ஒரு குடில் எண்டாலும் அம்மா வளைய வந்த குடில். இதை வித்துத்தான் எனக்கு ஒரு வாழ்க்கை அமைய வேணுமெண்டால் எனக்கு அப்படியொரு வாழ்க்கை வேண்டாம் அப்பா. கலங்கித் தடுத்தாள் அவள்.

ஒரு கணம் நோய்வாய்ப்பட்டு இறந்து போய் விட்ட மனைவியையும் அவளின்றித் தனித்த வாழ்வையும் நினைத்துக் கலங்கிய அாியநாயகம் – இஞ்சை பார் பிள்ளை. அம்மாவும் இல்லாமல் உன்னையும் தம்பியையும் இந்த நாட்டிலை வைச்சு வளர்க்கிறதுக்கு நான் படும் பாடு கொஞ்ச நஞ்சமில்லை.

எப்ப மி வருவானோ! எப்ப ஷெல் வந்து விழுமோ! எப்ப புக்காரா குண்டு பொழியுமோ! என்று எந்த நேரமும் என்ரை நெஞ்சு பதைத்த படியேதான் கிடக்குது.

வந்த வரனை வேண்டாமெண்டு சொல்லாமல் நீ போயிடு பிள்ளை. உனக்கொரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிட்டுது எண்டால் நீ பிறகு உன்ரை தம்பியையும் அங்கை கூப்பிட்டு வாழ வைக்க மாட்டியே ?!

உங்கள் இணர்டு பேரையும் ஒரு பாதுகாப்பான இடத்திலை விட்டிட்டன் எண்டால் நான் பிறகு அம்மா போன இடத்துக்கே நிம்மதியாப் போய்ச் சேர்ந்திடுவன். – என்றார்.

அப்பா அாியநாயகத்தின் யதார்த்தமான பேச்சு அவளை மேற்கொண்டு எதுவும் பேச முடியாமற் தடுத்து விட்டது. மெளனம் சம்மதமாக வாழ்ந்த குடிலும் விற்கப் பட்டு திருமணம் நிட்சயமானது. குணம், மணம் எதுவுமே தொியாமல், வெறுமனே புகைப்படத்தைப் பார்த்து விட்டு யேர்மனியில் வாழும் மாியதாசுக்கு மனைவியாக அவள் தயாரானாள்.

விசாவுக்காகத் தாண்டிக்குளம் தாண்டி கொழும்பு வந்தவள் மீண்டும் தெல்லிப்பளை போவதில் உள்ள சிரமத்தை நினைத்து கொழும்பிலேயே தங்கி விட்டாள். கொழும்பில் இருந்த அந்த ஏழு மாதங்களும் மாியதாஸ் அவளைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவதும், இவள் கடிதங்கள் போடுவதும் என்று ஒரு இனிமையான தொடர்பு அவர்களைக் காதலர்கள் க்கியது.

எட்டாம் மாதம் ஸ்பொன்சர் எல்லாம் சாி வந்து மாியதாசின் சொற்படி அவள் தன் சொந்தச் செலவிலேயே ாிக்கற் எடுத்து விமானமேறினாள்.

அப்பா தம்பி இருவரையும் பிாிந்த சோகம் அவளை வாட்டினாலும், காதல் சிறகை விாித்தபடிதான் வானில் பறந்து யேர்மனி வந்து சேர்ந்தாள்.

ஃபிராங்போர்ட் (Frankfurt) விமான நிலையத்தில் அவளுக்காக நண்பர்களுடன் காத்திருந்த மாியதாஸ் அவளையும், அவள் மாியதாஸையும் இனம் கண்ட போது புகைப்படத்தில் பார்த்த மாியதாசுக்;கும், நேரே பார்க்கும் மாியதாசுக்கும் இடையே நிறம், அழகு, வயசுத் தோற்றம் எல்லாவற்;றிலுமே சற்று வித்தியாசமிருந்ததால் சட்டென்று மனசுக்குள் ஏமாந்து மீண்டும் சமாளித்துக் காாில் ஏறினாள்.

வழியில் காருக்குள்ளேயே மாியதாஸ் – என்ன நீங்கள் ஃபோட்டோ (Photo)விலை பார்க்க வடிவா இருந்தீங்கள். இப்ப பார்த்தால் காகக்குஞ்சு மாதிாி இருக்கிறீங்கள். – என்று நக்கலும் சிாிப்புமாய் அவளைக் கேட்டான்.

அவளுக்குத் தன் மனசை யாரோ சாட்டையால் அடிப்பது போன்ற வலி ஏற்பட்டது. னாலும் சும்மா பகிடிக்குத்தான் சொல்கிறான் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லி, அசடு வழியச் சிாித்து, கலங்கிய கண்களை மறைத்து மெளனமாகி விட்டாள்.

—-

அவள் மனசு போலவே அடுப்பிலும் கறி கொதித்துக் கொண்டிருந்தது. அரைத்த சின்னச் சீரகப் பொடியைக் கறிக்குள் போட்டுக் கறியை இறக்கியவள் ஓடிப்போய் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். ஊாில் இருந்ததை விட முகம் வாடிக் கறுத்துப் போயிருந்தது.

இவ்வளவு நாளும் அவள் தன் வாழ்க்கை பற்றி எதுவுமே தன் அப்பா அாியநாயகத்துக்கோ தம்பிக்கோ எழுதவில்லை.

தன் கண் முன்னாலேயே மாியதாஸ் ஒரு இத்தாலி நண்பியுடன் சல்லாபிப்பதை எப்படி அவள் எழுதுவாள். வாய்க்குவாய் – நீங்கள் வடிவில்லை. நாட்டுக்குத் திரும்பிப் போயிடுங்கோ. – என்று அவன் சொல்வதை எப்படி எழுதுவாள்.

எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு ஜடமாக வாழ்ந்தாள்.

னால் அந்த ஜடத்தனத்துக்குக் கூட சாட்டையடி கொடுப்பது போன்ற விடயம் நேற்று நடந்தது. இருட்டு வெளிச்சத்தை விழுங்கி விட்டது போன்று தொலைதூரத்தில் அவளுக்குத் தொிந்த சின்னஞ்சிறு நம்பிக்கை நட்சத்திரத்தையும் விழுங்கி விட்ட அந்த விமானச்சீட்டு. – அதை வேலையால் வரும் போது மாியதாஸ்தான் கொண்டு வந்தான்.

– நீங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போயிடுங்கோ. வடிவா இருக்கிறியள் எண்டு நினைச்சுத்தான் கூப்பிட்டனான். நீங்களென்ன காகக்குஞ்சு மாதிாி இருக்கிறியள்…. இன்னும் மூண்டு நாளைக்குத்தான் உங்களுக்கு விசா இருக்கு. அதுதான் ாிக்கற் எடுத்திட்டன். – விமானச்சீட்டுடன் வந்த மாியதாஸ் இப்படித்தான் அவளை வார்த்தைகளால் தேளாகக் கொட்டினான்.

துணுக்குற்றவள் – உங்களோடை மூன்று மாதங்கள் வாழ்ந்திட்டன். இனி நான் போய் என்ன செய்யிறது ? நான் இங்கை சந்தோசமா வாழுறன் எண்டு நினைச்சுத்தான் அப்பா அங்கை சந்தோசமா வாழுறார். நான் இப்பத் திரும்பிப் போனால் அவர் செத்திடுவார்….

என்னை அனுப்பின காசுக்குத் தம்பியை அனுப்பியிருந்தாலும் உழைச்சுக் குடுத்திருப்பான். – சொல்லிக் கதறினாள்.

நீங்கள் இப்ப போங்கோ. நான் உங்களைத் திரும்பக் கூப்பிடுறன். – என்றான்.

பொய் சொல்கிறான் என்று அவளுக்குத் தொிந்தது.

– நீங்கள் இப்ப என்னைக் கல்யாணம் செய்தால் எனக்கு இங்கை தொடர்ந்து இருக்க விசா கிடைக்கும்தானே!

நான் திரும்பிப் போக மாட்டன். நீங்கள் என்னைக் கல்யாணம் செய்யாட்டி நான் தற்கொலை செய்திடுவன். – என்று சொன்னாள்.

இஞ்சை பார்..! நான் இங்கை மாியாதையா வாழுறன். இங்கை செத்து என்ரை மானத்தை வாங்கிப் போடாதை. சாகிறதெண்டால் அங்கை ஊாிலை போய்ச் சா.-

இரக்கமின்றிக் கத்தினான்.

மாியதாஸ் யேர்மனிக்கு வந்து பதினாறு வருடங்கள். வேறு நகரத்திலிருந்து ஏதோ திருகுதாளம் செய்து விட்டு இப்போ இந்த நகரத்துக்கும் வந்திருந்து இங்கும் வேலை செய்கிற இடங்களில் கள்ள வேலைகள் செய்து பிடிபட்டு தமிழாின் மானத்தையே கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கிறான்.

இவனுக்கென்ன மாியாதை இங்கிருக்கிறதென்று அவளுக்குத் தொியாது. னாலும் தன்னை ஏமாற்றித் திருப்பி அனுப்பப் போகிறான் என்பது மட்டும் தொிந்தது.

இப்ப நாட்டுக்குத் திரும்பினால் என்ன நடக்குமென்றும் அவளுக்குத் தொியும். அப்பா எப்படி உடைந்து போவார் என்ற நினைப்பே அவளை உடைத்தது. ஊரார் முகத்தில் எப்படி முழிப்பேன் என்ற நினைப்பு அவளைக் கலங்கடித்தது.

எங்காவது ஓடி விடலாமா என்று யோசித்தாள். எங்கு ஓடுவது.. ? ஸ்பொன்சாில் வந்து விட்டு அகதி விண்ணப்பமும் கோர முடியாத நிலை. தொியாத நாடு. தொியாத ரோடு. ங்கிலம் தொியாது. டொச்சில் ஒரு வார்த்தை தொியாது. என்ன செய்வதென்றே அவளுக்குத் தொியவில்லை.

இவன் திட்டமிட்டுத்தான் என் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறானா ? வேணுமென்றுதான் யாரையும் என் கண்ணில் காட்டாது இந்த வீட்டுக்குள் சிறை வைத்தானா ? குழப்பமும் சந்தேகமும் நிறைந்த கேள்விகள் அவளுள் எழுந்தன.

தமிழர்கள் கூட அதிகமில்லாத இந்த நகாில் யாாிடம் போவது ? என்ன கேட்பது ?

யோசித்து யோசித்தே மூளை குழம்பி விடும் போலிருந்தது. நேரத்தைப் பார்த்தாள். மாியதாஸ் வேலையால் வர இன்னும் சிலமணி நேரங்கள்தான் இருந்தன. அதற்கிடையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

உடைகளை மாற்றிக் கொண்டு எங்கே போவது.. ? என்று கூடத் தொியாமல்

பாதை எங்கே போகிறது.. ? என்றும் தொியாமல் வெளியில் இறங்கி மாியதாஸின் கேவலமான செயல்களுக்கு ஒரு நிரந்தர முடிவினைக் காணும் நோக்கோடு நிதானமாக நடக்கத் தொடங்கினாள்.

சந்திரவதனா செல்வகுமாரன்

யேர்மனி

****

chandra1200@yahoo.de

Series Navigation

சந்திரவதனா செல்வகுமாரன்

சந்திரவதனா செல்வகுமாரன்