எஸ்ஸார்சி
பர்ஜன்யனுக்கு குரல் கொடுக்கும்
தவளைகள்
விரதம் முடித்த பார்ப்பனர் போல்
ஒலி எழுப்புகின்றன
வறண்ட தோலாய் க்காய்ந்த
ஏரியிடை
தாக்குப்பிடிக்கும் தவளை மீது
பர்ஜன்யன்
நீர் வார்க்கிறான்
தாகம் கூடித்தத்தளித்த
தவளைகள் இதோ சந்திக்கின்றன
காணும் காட்சியோ
தந்தைபின் விரையும் பிள்ளைகள் போல்.
மழையில் நனைந்து ஒர் தவளை
மற்றொன்றை வாழ்த்துகிறது
முன்னே பாயும் தவளைக்கு
அதிசயமானவை
பச்சை நிறத்தவை
வாழ்த்துப்பா பாடுகின்றன
குருவும் சீடருமாய்
தவளைகள் பாடம் படிக்கின்றன
நீர் மீது பாய்ந்து
குரல் தருங்கால்
தவளைகள் பருமன் கூடுவதுவாய்
காட்சி தருகின்றன
ஆ யெனவும்
ஆடு போலும் சப்திப்பன
புள்ளி கொண்டவை
பச்சை நிறத்தன
பல் உருவங்கொண்டன
குரல்களோ விதம் விதமாய்
இரவொன்றுக்கு மூன்று கால வேள்விசெய்
பார்ப்பனன்
முன் பண்டங்கள் குவிவது போலே
மழை காணும் முதல் நாளே
ஏரிக்கரை இரவு
தவளைகள் ஆளுகையில்
அந்தணர்கள் ஆண்டு வேள்வி
சாதிக்கிறார்கள்
சோம ரசங்கள் சுவைத்தவர்கள்
அவர்கள்
தவளைகட்கு தேவக்கட்டளை
நிறைவேறுகிறது
வருடங்கள் சுழற்சி கண்டு
மழையெனப் பொழிகிறது
பதுங்கிய தவளைகள்
விடுதலை எய்துகின்றன
ஆவென குரல் தரும்
ஆடு போல் கத்தும்
புள்ளித்தோலுடைய
பச்சை த்தவளைகளே
எமக்கு வளமே தாரும். ( ரிக் .7/103)
வள்ளற்பசுக்கள் பல
எமக்கு அள்ளி வழங்கிடும்
ஒ தவளைகளே
யாம் நூறாண்டு வாழ சேமம் தருக ( ரிக்/7/103)
—————————————————————————
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -12
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -1 (மரணத்தில் எஞ்சியவை)
- அப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி
- முடிந்த முடிவாக இஸ்லாம் இருக்கிறது என்றும் வாதத்திற்கும், மருநோக்கல்களுக்கும் இடமில்லை என்பதைத் தெளிவு படுத்தியமைக்கு
- சிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’
- நாடகம் நிகழ்வு அழகியல் _வெளி ரங்கராஜன்
- சாகித்திய அகாதமி: ஆனந்தகுமாருக்கு சா அ பரிசு
- நியூஜெர்ஸி பாரதி தமிழ் சங்கம் – தமிழ் வகுப்புகள்
- PRESTIGE GROUP Presents “Katha Collage” & Ismat Apa Ke Naam – II
- சிங்கப்பூர் கவிமாலை விருது விழா
- அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
- விவேகனுக்கு எனது பதில்
- அப்துல் அஸீஸ் உலகம் தட்டை என்று சொல்கிறாரா?
- முத்துசாமி பழனியப்பன் கவிதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 53 << நீ வறுமைப் பெண் >>
- ரசனை
- தவறியவர்களுக்கு
- நட்புடன் நண்பனுக்கு
- ஆயுதங்களால் போரிடுவது எளிதானது
- கடவுளிடமிருந்து பறிக்கப்பட்டவர்கள்
- விஸ்வரூபம் – ஒரு அறிவிப்பு
- நல்லாசிரியர்
- அணுவளவும் பயமில்லை
- கடற்பறவையின் தொழுகை
- தொலைக்காட்சி
- கண்ணோடு காண்பதெல்லாம்
- அப்படியே….!
- ‘தேவனி’ன் நாவல் ‘கல்யாணி’
- அவிழ்க்கப்படாத சில முடிச்சுகள்
- பட்டாளத்து மாமா
- வேத வனம் விருட்சம் -51
- பணமா? பாசமா?
- விண்கோள்களின் சுற்று விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630)
- அண்ணா – வேலுமணியின் வரைபடம்
- அறிவியல் புனைகதை:8 ஐஸ்வர்யா பாட்டியும் தமிழ் பேசும் கிளியும்