சக்தி சக்திதாசன்
உள்ளத்தின் ஒளியில்
உண்டான வெளிச்சத்தில்
உருவங்களின் ஆட்டம் – அதிலே
உன்னுடைய தோற்றம்
எத்தனை நாட்கள் நண்பா
எண்ணத்தின் பூக்கள்
எங்கள் மனங்களில்
எப்படி எல்லாம் விரிந்தன ?
முத்தென நினைவுகளை
பொத்தியே வைத்தேன் மனச்சிப்பியினுள்
முத்தியே வெடித்தன இன்று
சுத்தியே வந்தன ஞாபகங்கள்
அன்புக் கம்பள விரிப்பில்
அன்று நாம் நடந்த வனப்பு
இன்று நினைக்கையில் கனவடா
இன்ப அலைகளின் துடிப்படா
இளமையெனும் ஊஞ்சலில்
கபடமில்லாமல் நாமாடிய வேளைகள்
இனியரு பொழுது வாராதா
இதயத்தின் ஏக்கங்கள் தீராதா ?
நினைவு என்னும் மை கொண்டு
நாமெழுதிய நட்பெனும் புத்தகம்
கனவென்னும் நூலகத்தில் இன்று
காலமாகிப் போனதுவோ நண்பா !
வானத்தில் வலம் வரும் வெண்ணிலவு
வீ£சும் காற்றோடு கலந்த நம் நினைவுகளை
பூசிக் கொண்டு சென்று கோவில் வீதியில்
பொன்னொளியாய் தெளித்திடுமா?
குருமணலில் நாம் பதித்த சுவடுகள்
குருதி சொரிந்த நம் மண்ணில்
செந்நிறப் பதிவுகளாய் பதிந்து
செப்பிடுமோ நமது நட்பின் ஆழத்தை
எதோ என்னை அறியாமல்
என் நண்பன் உன் நினைவுகள்
என்னுள்ளத்தில் குதித்துக் கும்மாளமிட
ஏட்டில் வடித்து விட்டேன் கவிதையாக
அன்புடன்
சக்தி
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -12
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -1 (மரணத்தில் எஞ்சியவை)
- அப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி
- முடிந்த முடிவாக இஸ்லாம் இருக்கிறது என்றும் வாதத்திற்கும், மருநோக்கல்களுக்கும் இடமில்லை என்பதைத் தெளிவு படுத்தியமைக்கு
- சிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’
- நாடகம் நிகழ்வு அழகியல் _வெளி ரங்கராஜன்
- சாகித்திய அகாதமி: ஆனந்தகுமாருக்கு சா அ பரிசு
- நியூஜெர்ஸி பாரதி தமிழ் சங்கம் – தமிழ் வகுப்புகள்
- PRESTIGE GROUP Presents “Katha Collage” & Ismat Apa Ke Naam – II
- சிங்கப்பூர் கவிமாலை விருது விழா
- அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
- விவேகனுக்கு எனது பதில்
- அப்துல் அஸீஸ் உலகம் தட்டை என்று சொல்கிறாரா?
- முத்துசாமி பழனியப்பன் கவிதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 53 << நீ வறுமைப் பெண் >>
- ரசனை
- தவறியவர்களுக்கு
- நட்புடன் நண்பனுக்கு
- ஆயுதங்களால் போரிடுவது எளிதானது
- கடவுளிடமிருந்து பறிக்கப்பட்டவர்கள்
- விஸ்வரூபம் – ஒரு அறிவிப்பு
- நல்லாசிரியர்
- அணுவளவும் பயமில்லை
- கடற்பறவையின் தொழுகை
- தொலைக்காட்சி
- கண்ணோடு காண்பதெல்லாம்
- அப்படியே….!
- ‘தேவனி’ன் நாவல் ‘கல்யாணி’
- அவிழ்க்கப்படாத சில முடிச்சுகள்
- பட்டாளத்து மாமா
- வேத வனம் விருட்சம் -51
- பணமா? பாசமா?
- விண்கோள்களின் சுற்று விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630)
- அண்ணா – வேலுமணியின் வரைபடம்
- அறிவியல் புனைகதை:8 ஐஸ்வர்யா பாட்டியும் தமிழ் பேசும் கிளியும்