லலிதா
1915 அல்லது 16ல் காபியும் ரவா உப்புமாவும் தென்னிந்தியாவுக்கு
அறிமுகமானதாகத்தெரிகிறது. என் தாயார் அதற்கான பாட்டுக்களைப் பாடுவார்.
உப்புமாவைக் கிண்டிப் பாரடி அடி {ரவா உப்புமாவை)
ஒய்யாரமான பெண்ணே உல்லாசமான கண்ணே(உப்பு)
ஆறுமணிக்குள்ளாக அழகு மஞ்சள் குளித்து
அடுப்பை மூட்டிவைத்து வாணாயை எடுத்துவைத்து(உப்பு)
கடுகு பச்சைமிளகாய் ,காயம் கறிவேப்பிலை
இஞ்சி எலுமிச்சங்காய் ஈர வெங்காயத்துடனே (உப்பு)
ஒருபடி ஜலம் வைத்து ஒருபிடி உப்பு போட்டு
ஒருபடி ரவா போட்டு ஒருசேர் நெய் விட்டு (உப்பு)
தலைவாழை எலை போட்டு தீர்த்தம் எடுத்து வைத்து
வெண்ணை உருட்டி வைத்து வெல்லம் நொறுக்கி வைத்து (உப்பு}
காபி
______
அடி கருப்புப் பொண்ணே கண்ணாட்டியே
காப்பித்தண்ணியைப் போடடி
பச்சைப் பொண்ணே பங்கஜமே
பாலைவிட்டுக் கலவடி
செவப்புப்பொண்ணே செம்பகமே
சீனி ரொம்பப்போடடி
நீலப்பொண்ணே நிர்த்தனமே
நேர வந்து குடுடி
மஞ்சப்பொண்ணே மரகதமே
மணையைஎடுத்துப்போடடி
வெள்ளைப் பொண்ணே விஜயவல்லி
வேறே பானம் ஏனடி
இதென்ன அநியாயம் ? ஒருவன் காபி குடிக்க இத்தனை பெண்களா ?
லலிதா
——–
(மாலதி அனுப்பியது)
- சோகல் கட்டுரையும், கறுப்பில் வெளியானதும் குறித்து
- யெளவனம்
- உள்வீடு
- கால் கொலுசு
- என்ன உலகமோ
- அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)
- வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.
- ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும்
- கடிதங்கள் – டிசம்பர் 11,2003
- கடிதங்கள் – ஆங்கிலம் – டிசம்பர் 11,2003
- நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம்
- ‘போலீஸ் தனது அடியாளாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது ‘
- ஒரு இந்துவின் பதில் – திரு.திருமாவளவனுக்கு
- மனித நல்லிணக்கம்.
- காபியிலும் ஆணாதிக்கம்
- கூட்டு வாழ்க்கை – ஒரு உதாரணம்
- வைர வியாபாரமும் வன்முறையும்
- வார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்
- சில எதிர்வினைகள்
- அன்புள்ள மனுஷ்யபுத்திரன்
- காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்
- முரசொலி மாறன்
- பின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை
- எனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘
- பாரதி, மகாகவி: வரலாறு
- பாரதி நினைவு நாள்
- யானை பிழைத்த வேல்
- பிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்
- பாம்புபற்றிய என் ஆறாவது கவிதை
- விடியும்! – (26)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)
- வினைத்தொகை
- மேல் நாட்டு மோகம்
- அம்மண தேசம்
- காதல் மாயம்
- ரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்
- நட்பு
- கடவுள்கள் சொர்க்கத்தில்…..
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- கொஞ்சம் தள்ளிப்போனால்
- தேர் நிலைக்கு வரும் நாள்
- தேர்க்கவிதை
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு
- கங்கைகொண்டசோழபுரம்
- புதசுக்கிரயோகம்
- கவிதைகள்
- கவிதைகள்
- என் புத்திக்குள்
- அரவம்.
- காகம்.
- ஏ ! பாரதி
- ஆதாரம்
- கபிலர் பாறை
- நாளையும்…..அக்கறையாகவோர்………….. ?
- இணையம்