ஹெச்.ஜி.ரசூல்
நேற்றைய வருடங்களை தின்று தீர்த்து
ஓய்வெடுத்துக் கிடக்கும் பாதை
மலையேற்றத்தில் கலந்து கொள்ளும்
முட்டாக்கிட்ட உம்மாமார்கள் குழந்தைகள்
காட்டுவாசாகிபின் ஞாபகங்களோடு
மலையேறிப் பார்த்த கால்கள்
களைப்பில் உட்கார இடம் தேடும்
செங்குத்து உயரத்தில்
பெரும்பாறைகளின் சூழலில்
ஒற்றையடிப்பாதை நீண்டு பெருகும்
கூட்டம் கூட்டமாய் கால்கள்
மூச்சிறைப்பு தீர ஓய்வெடுக்க
முந்தைய பாதையோர குதிரைக்காவின்
மாறிப் போன அடையாளம்.
தலைக்கு மேல் மிரட்சியுற வைக்கும்
ராட்சச பாறைகளின் மீதேறி நின்று
உலகம் முழுதும் கேட்கும்படி
கூவிப் பார்க்கும் ஒற்றைக் குரல்
மலைப்பள்ளியில் நாட்டப்பட்டிருந்த
கொடிக் கம்பம் சாய்ந்திருந்தது.
காட்டுபாவாசாகிப் உட்கார்ந்து
சயனித்த இடம் எதுவாய் இருந்திருக்கும்.
பச்சைப் பிறைக் கொடியில் பூச்சுற்றி
திரிவாசம் பரவ மெளலூதும் பாத்திஹாவும்
காலந் தோறும் வந்து போகும்
மும்தாஜ்கள் உசேன்கள்
சுனைநீரில் கால்நனைத்து
தண்ணீருக்குள் தேடி கண்டுபிடித்து
கொண்டு வந்த கற்கள்
ஆயிரக் கணக்கில் பெருகி
ஆலமரத்தின் மூட்டைச் சுற்றி
இன்னொரு கல்மலையாகி நிற்கும்.
அதன் அழகுகளும் அடுக்குகளும்
கலைக்கப் பட்டிருக்கின்றன.
சிதறிக் கிடக்கும் பாறைக்கற்கள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு நம்பிக்கைகள்
சின்னஞ்சிறு கனவுகள்
பாறக் கோலால் இடித்து தகர்க்கப்பட்ட
உடைந்து போன மினராவின் துண்டுகளில் ஒன்று
இப்போதும் அங்கே கிடந்தது.
—
mylanchirazool@yahoo.co.in
- செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி
- முள் – முத்துமீனாள்- முதல் பதிப்பு வெளியீட்டு விழா
- தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…
- சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
- கலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு
- கலை இலக்கிய விழாவில் ‘வல்லினம்’ இதழ் அகப்பக்கமாக புதிய அவதாரம்
- புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்!
- கருத்தியல் தர்மம் காக்க!
- சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே
- புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்
- கோடை
- என்றாலும் கவிதையே
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 51 << மாறாத உன் தோற்றம் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)
- வேத வனம் –விருட்சம் 49
- அழகு
- தாயெனும்…
- புன்னகை
- முடிவாகவில்லை
- வெறிச்சோடிக் கிடக்கும் வீடு!
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10
- யார் அந்த சண்முகம்?
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று
- தேவை கருணை பார்வை
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- பாதையையும் பயணமும்
- மிச்சாமி துக்தம் : (துக்டம்)
- சற்றுமுன் வந்த மின்னஞ்சல்
- தடை
- ’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”
- காட்டுவா சாகிப்
- தவிர்க்க விரும்பும் தருணங்கள்
- பண்டிகைகள்
- தலைகவிழல்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் (கட்டுரை: 63)