பட்டுக்கோட்டை தமிழ்மதி
இரவெல்லாம் விளக்கெரிவது
என் வீட்டு எலிகளுக்குப்
பிடிக்குமோ பிடிக்காதோ ?
நானில்லா பகல்களில்
எலிகள்
இரவைப் போல் இருந்து கொள்கின்றன.
அவற்றின் நடமாட்டம்
நாளும் நாளும் நானறியும்படி.
நானில்லா சமயங்களில்
நானென்று என் துணிகளையும்
நானிருக்கும் சமயங்களில்
என் துணியென்று என்னையும்
இதுவரை கடித்ததில்லை.
நடு இரவில்
கண்ணயர கை தவறும் புத்தகம்
காற்றாடி போல்
காற்றாடி கீழ்
கண்ணியில் சிக்கிய பறவையாய்
சிறகடிக்கும்.
பாயில் என்னோடு படுத்துப் புரண்டு
காகிதம் கசங்குவது கண்டு
எலிகள்
சிரித்துச் சிணுங்குவது கேட்கும்
சிலநேரம் தூக்கத்தில்.
இரவெல்லாம் எரியும் விளக்கை
என்னுறக்கத்திற்குப் பின் அல்லது
தன்னுறக்கம் கெடுவதெண்ணி
எழுந்துபோய் அணைக்க
எலிகள் நினைப்பதில்லை.
இரவில் நான்
எழுதிக் கிழித்த காகிதக் கசங்கலுக்கும்
தனியே நான்
கொறித்துப் போட்ட கடலைச் சிதறலுக்கும்
எலிதான் காரணமென்று
பழி சுமக்கிறது பார்ப்பவர் கண்களுக்கு.
காகித்தைக் கிழித்துப்போட
எலிக்கும் தெரியுமென்றால்…
எலிக்கும் தெரியுமோ
கவிதை எழுத…
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி போலவா
என் வீட்டு எலியும் ?
விடியற்காலை
வீட்டுக்கு வரும் பெரியவர் ஒருவர்
எழுதிக் கிழித்த இந்தக்
கசங்கல் காகிதக் கவிதை கண்டு
“இதற்குத்தான் வேண்டும்…”
அவர் முடிப்பதற்குள்
“பூனையா ?” என்பேன்.
வீட்டுக்கு வேண்டுமென்பார்…
பெண்ணியம் பேசும் உலகில்
பெருமையாய்ப்
பெண்ணை.
(சென்னையில் வாழ்ந்த காலங்களில் சில ஆண்டுகள் தங்கியிருந்த ஒரு வாடகை வீடு.)
—- —-
thamilmathi@yahoo.com
- கடிதம் ஜூன் 24, 2004
- நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : வெளியீட்டு விழா
- மனத்துக்கண் மாசிலனாதல் – ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ‘ நாஞ்சில் நாடன் கட்டுரை நூல் அறிமுகம்
- புலம் பெயர் சூழலில் ஒரு புதிய வரவு ஊசிஇலை
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 5
- நெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் – நூல் அறிமுகம்
- Terminal (2004)
- கனடா திரைப்பட விழாவில் செவ்வாய் கிரகம்
- சேலை கட்டும் பெண்ணுக்கு…
- இந்துத்துவம் ஏற்றம் பெற, அகண்டபாரதம் அரண்டு எழ சங்கியே சங்கூதிப் புறப்படு
- ஆட்டோகிராஃப் ‘காதல் சிறகை காற்றினில் விரித்து ‘
- உடன்பிறப்பே
- திரைகடலில் மின்சக்தி திரட்டும் உலகின் பலவித மாதிரி நிலையங்கள் [Various Types of World ‘s Ocean Power Stations]
- கடிதம் -ஜூன் 24, 2004
- கல்கியின் பார்த்திபன் கனவு இணையத்தில்
- கடிதம் ஜூன் 24, 2004
- கலைஞன் நிரப்பும் வெளி : சுந்தர ராமசாமி புகைப்படக் கண்காட்சி :ஜூன் 25 முதல் 27 வரை
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- குழந்தை…
- இல்லம்…
- காகித வீடு…
- கவிக்கட்டு 12 – கொஞ்சம் ஆசை
- சொர்க்கம்
- கவிதைகள்
- ஆறுதலில்லா சுகம்
- பட்டமரம்
- மஸ்னவி கதை — 10.1 : அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- பெண்கள்: நான் கணிக்கின்றேன்
- பொன்னாச்சிம்மா
- தென்கிழக்கு ஆசியா: அச்சுறுத்தும் பெண்கள் குழந்தைகள் கடத்தல்
- வாரபலன் – ஏமாளித் தமிழ் எழுத்தாளா , கிளிண்டன் கொஞ்சிய கிளி , ரொபீந்திர சங்கீத் ஜார்கள், வாய்க்கால் கடக்காத ஜெயபாரதி
- நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?
- இரசியாவை மிரட்டும் கதிர்வீச்சு ஆபத்து-ஒரு இரசிய விஞ்ஞானியின் பேட்டி
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 8)
- தமிழ்நாட்டுக்குப் பொருத்தமான விகிதாச்சார தேர்தல் முறை – என் கருத்துக்கள்
- கோபம்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-25
- சூத்திரம்
- அன்புடன் இதயம் – 22 – தமிழை மறப்பதோ தமிழா
- தமிழவன் கவிதைகள்-பதினொன்று
- கவிதை
- இறைவனின் காதுகள்
- அப்பாவின் காத்திருப்பு…!!!
- இப்பொழுதெல்லாம் ….
- ஏ.சிி. யில் இருக்கும் கரையான்கள்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்
- நல்லகாலம், ஒரே ஒரு சமாரியன்