வேதா
என்
கூட்டுப்புழு பூச்சியாகித் தன்
கனவோடு பறக்கிறதோ ?
பூக்கள் கொடுத்த தேனெல்லாம் – எனக்குள்
புதைத்த சேதி மறக்கிறதோ ?
கண்மூடிய என் உலகில்…..
புதைத்ததையும், புதைந்ததையும்
உன் புன்சிரிப்பு தெளுக்கிறது!
உன் நினைவைத் தாங்கிய குளிராய்
என்
சின்ன இதயம் சிலிர்க்கிறது!
சிரித்தும் சிறைவைத்தும் – எனக்குள்
உன் உயிரைச் சிந்துகிறது….
மதிபூத்து மலர் சொரிய
ஒற்றைவண்ணத்தில்
என் உலகமெலாம் நிறைகிறது!
அத்திபூக்கும் அதிசயமாய்,
வளைந்து போகும் வானம் ஒன்று….
உன் பார்வை பரிசளிக்கும்!
உன் மவுனங்கள்,
எனக்குள் மழை பொழிக்கும்!
உன் பார்வையில் நானும்,
என் வார்த்தையில் நீயும்
கலந்திருக்கும் காலமெல்லாம்
நினைக்க நினைக்க, சுகம் சுரக்கும்!
……
ம்ஹும்,
புதிதுபுதிதாய் காலங்கள்
புரியாத நேரங்கள்
பூத்துப் பூத்துக் காத்திருந்து
என்ன செய்வேன் தனியாக ?
நீயும்
இறக்கை உதிர்க்கிறாய் – எனக்குள்
ஈரம் நிறைக்கிறாய்!
தளிரை துளிர்க்கவிட்டு
துறவாய் நிற்கிறாய்!
எனக்கான
பகிர்தலுக்கும் , பாசத்துக்கும்,
உண்மையாய்
என் உள்ளக்குமுறலுக்கும்,
புரிந்துபோகாத அவசரமாய்
இந்த வாழ்வோடு ஓடுகிறாய் நீ…..
என் நினைவையும்
உன் மணிக்கட்டில் சேர்த்துக்கட்டிக்கொண்டு!!
piraati@hotmail.com
- கோழிச் சண்டையும், சந்தைக் கடையும்
- அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]
- நூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘
- உயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- தன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து
- உயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)
- இனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்
- அரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்
- யதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்
- குறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு
- சென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)
- கேள்வி -1 சண்டியர் தப்பு ! சாமி சரியா ?
- மடந்தையொடு எம்மிடை நட்பு
- காற்றாடி
- காதல் காதல் தான்
- ஆனாலும்…..
- சூழலைக் கெடுக்கும் ஊழலர்கள்
- முதல் சந்திப்பு
- என்னம்மா அவசரம் ?
- ஒற்றைவண்ணத்தில் ஒரு பூச்சி!
- சின்னச் சின்னதாய்…
- இது உன் கவிதை
- பைத்தியமானேன் வைத்தியமுண்டா
- மனம் தளராதே!
- காதலுடன் ஒரு சொற்றாடல்
- கரடி பொம்மை
- அரியும் சிவனும் ஒண்ணு
- என் கவிதைக்குக் காயமடி!
- ஒரு சொட்டு இரும்பு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு
- விடியும்! நாவல் – (6)
- கடிதங்கள்
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- பசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்
- சாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2
- அரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்
- வசிட்டர் வாக்கு.
- ஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்
- வாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)
- தேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல
- போராடாதே … பிச்சையெடு
- ஆசி
- பெண்ணே
- தவறிய செயல்கள்
- சார்புநிலைக் கோட்பாடு
- அரசியல்
- வெண் புறா
- என் ஜீவன் போகும்…