ஒரு உச்சிப்பனிக்காலத்தில்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

அருண்பிரசாத்


ஒரு உச்சிப்பனிக்காலத்தில்
இடம்பெயர்ந்தன பறவைகள்
இலை இழந்த கிளைகளுக்கு
வெற்றுக்கூடுகளை மட்டும் தந்துவிட்டு.

போர்த்திய பனியுறையின் கீழ்
மட்கும் சருகுகளோடு
வலியுடன்புதையுண்டன
துரோகங்கள்.

தூரத்தே வரவேற்கும்
வசந்தத்தின் புத்துயிர்ப்பு
இன்றுகளை மென்றபடி.

everminnal@yahoo.com

Series Navigation

அருண்பிரசாத்

அருண்பிரசாத்