புகாரி
தமிழை மறப்பதோ
தமிழா – உன்
தரமின்று தாழ்வதோ
தமிழா
O
கற்கும் மொழிகள்
கணக்கற்றவையாயினும்
கைகூப்பித் தொழுவது
தமிழன்றி வேறோ
தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய்மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ
அடகுவைக்க
உன்
உயிரை வேண்டுமானால்
உரசிப்பார்
தன்மானத்தையா தொடுவாய்
தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்
தமிழற்றுப் போனவனோ
தன்
தலையற்றுப் போனவனன்றோ
கணினிக் கோட்டையிலும்
இணைய இடுக்குகளிலும்
இணைச்செங்கோல் ஏந்தி
ஏகமாய் ஒளிவீசும்
நம்
செந்தமிழ் மறுப்பதோ
தமிழா
நம்
மூச்சுக் காற்றிலும்
கன்னித் தமிழ் மணம்
என்றும் வீசுதல் வேண்டாமோ
நம்
இரத்தக் குழாய்களிலும்
சுத்தத் தமிழெழுத்துக்கள்
வற்றாது ஓடுதல் கூடாதோ
O
வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா
வார்த்தைகள் அவிழ்ந்து
உதிரும்போது
சுற்றுப்புறமெங்கும்
சுகந்தம் வீசுமே
அதற்காக
நாக்கு நர்த்தனங்களில்
நல்லோசை எழும்புமே
அதற்காக
உச்சரிப்பு ஒவ்வொன்றும்
சிற்பங்கள் செதுக்குமே
அதற்காக
எந்த இசையிலும்
இயைந்து கலந்து
நெஞ்சின் மத்தியில்
நி ?மாய்க் கிசுகிசுக்குமே
அதற்காக
உள்ள உணர்வுகளை
அள்ளிப் பொழிய
நல்ல வார்த்தைகள்
நயாகராவாய்ப் பொங்குமே
அதற்காக
வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா
*
அன்புடன் புகாரி
buhari2000@hotmail.com
- கடிதம் ஜூன் 24, 2004
- நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : வெளியீட்டு விழா
- மனத்துக்கண் மாசிலனாதல் – ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ‘ நாஞ்சில் நாடன் கட்டுரை நூல் அறிமுகம்
- புலம் பெயர் சூழலில் ஒரு புதிய வரவு ஊசிஇலை
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 5
- நெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் – நூல் அறிமுகம்
- Terminal (2004)
- கனடா திரைப்பட விழாவில் செவ்வாய் கிரகம்
- சேலை கட்டும் பெண்ணுக்கு…
- இந்துத்துவம் ஏற்றம் பெற, அகண்டபாரதம் அரண்டு எழ சங்கியே சங்கூதிப் புறப்படு
- ஆட்டோகிராஃப் ‘காதல் சிறகை காற்றினில் விரித்து ‘
- உடன்பிறப்பே
- திரைகடலில் மின்சக்தி திரட்டும் உலகின் பலவித மாதிரி நிலையங்கள் [Various Types of World ‘s Ocean Power Stations]
- கடிதம் -ஜூன் 24, 2004
- கல்கியின் பார்த்திபன் கனவு இணையத்தில்
- கடிதம் ஜூன் 24, 2004
- கலைஞன் நிரப்பும் வெளி : சுந்தர ராமசாமி புகைப்படக் கண்காட்சி :ஜூன் 25 முதல் 27 வரை
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- குழந்தை…
- இல்லம்…
- காகித வீடு…
- கவிக்கட்டு 12 – கொஞ்சம் ஆசை
- சொர்க்கம்
- கவிதைகள்
- ஆறுதலில்லா சுகம்
- பட்டமரம்
- மஸ்னவி கதை — 10.1 : அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- பெண்கள்: நான் கணிக்கின்றேன்
- பொன்னாச்சிம்மா
- தென்கிழக்கு ஆசியா: அச்சுறுத்தும் பெண்கள் குழந்தைகள் கடத்தல்
- வாரபலன் – ஏமாளித் தமிழ் எழுத்தாளா , கிளிண்டன் கொஞ்சிய கிளி , ரொபீந்திர சங்கீத் ஜார்கள், வாய்க்கால் கடக்காத ஜெயபாரதி
- நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?
- இரசியாவை மிரட்டும் கதிர்வீச்சு ஆபத்து-ஒரு இரசிய விஞ்ஞானியின் பேட்டி
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 8)
- தமிழ்நாட்டுக்குப் பொருத்தமான விகிதாச்சார தேர்தல் முறை – என் கருத்துக்கள்
- கோபம்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-25
- சூத்திரம்
- அன்புடன் இதயம் – 22 – தமிழை மறப்பதோ தமிழா
- தமிழவன் கவிதைகள்-பதினொன்று
- கவிதை
- இறைவனின் காதுகள்
- அப்பாவின் காத்திருப்பு…!!!
- இப்பொழுதெல்லாம் ….
- ஏ.சிி. யில் இருக்கும் கரையான்கள்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்
- நல்லகாலம், ஒரே ஒரு சமாரியன்