This entry is in the series 20110227_Issue

இளங்கோ


*
ஒரு முடிவுக்கு வருபவை
என்று
எதுவமில்லை

ஒவ்வொன்றும் ஒரு வெற்றிடத்தை
உருவாக்கவோ
சீர்குலையும் ஒரு சமனை
கூடாரமென உயர்த்தவோ
புதைந்தபடியே அதன்
ஆழங்களை அளக்கவோ

ஒரு
வாதத்தின்
இறுதிச் சொல்லைப் போல
மற்றுமொரு வாதத்துக்குள்
நுழைந்து விடும்
சாமர்த்தியமென

முடிவுக்கு வருபவை
என்று எதுவுமில்லை..

*****
–இளங்கோ

Series Navigation