அபுல் கலாம் ஆசாத்
நேற்று,
தொலைத்துத் தலை முழுகிவிட்டேன்.
நுரையீரலுக்குள்
நெருப்பு வீசிக்கொண்டிருந்த
உலைக்களத்தை உடைத்துவிட்டேன்.
அது என்ன ஆள்காட்டி விரலா
அறுத்து எறியத் தயங்க ?
விரல்களுக்கிடையில் செருகப்பட்ட
வெள்ளை விஷம்தானே,
பிடுங்கி எறிந்துவிட்டேன்.
எப்போது ஆரம்பித்தேன் என்பது
நினைவுகளின் இடுக்குகளில்
சிக்கிச் சிதைந்து போனது.
ஒன்று மட்டும் நினைவிலிருக்கிறது,
இது
விரல்களில் வீற்றிருந்ததில்
ஓட்டுப்போட வயது வந்துவிட்டதாக உணர்ந்தது.
இதழ்களில் இறுக்கி
விடுதியின் வாசலில்
கனவு மெய்ப்படக் கனவு கண்டு
வானில் வட்டங்கள் விட்டது..
‘வேலைப் பளுவில் வியர்க்காதிருக்க
வெண்சாமரம் இது ‘,
எவனோ சொன்னதில் இன்னமும் தொடர்ந்தது..
இப்படியாக இழுத்து இழுத்து
வாழ்வின் முடிவிற்கு
விண்ணப்பம் எழுதியிருந்தது
தொண்டைக்குழியில்
துரட்டி போட்டுச் சுரண்டியபோதுதான்
புரிந்தது.
அலங்காரமாக விரல்களில் சுழன்று
மெள்ள மெள்ள
ஆலகாலமாகும்
அதிசயப் பொருள் இது.
வீரியம் தெரிந்துமா
விரியனைத் தொடுவது ?
தொட்டவரை போதுமென்று
வெடுக்கென்று கை இழுத்து
விரைந்து நடந்துவிட்டேன்.
அடுத்த தலைமுறைக்கும்
சேர்த்துப் புகைத்தவன்,
சாம்பற்கிண்ணத்தின் சமாதியில் நின்று
சத்தியம் செய்கிறேன்,
“இனித் தொடுவதில்லை இதனை”
——-
அபுல் கலாம் ஆசாத்
azad_ak@yahoo.com
- கூலியில்லா வேலைக்காரி
- யாரிந்த தீவிரவாதி ?
- அறிவியல் மேதைகள் ஆல்ஃப்ரெட் பெர்னார்ட் நோபல் (Alfred Bernard Nobel)
- விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன் [Carl Sagan] (1934-1996)
- பாட்டிகளின் மகத்துவம்
- புதிய வகை உயிரை உருவாக்க அறிவியலாளர்கள் முனைகிறார்கள்.
- ராங்கேய ராகவின் படைப்புலகம்
- சந்தேகத்துக்கு மருந்தில்லை (எனக்குப் பிடித்த கதைகள்- 37 -லா.ச.ராமாமிருதத்தின் ‘ஸர்ப்பம் ‘)
- பிரியங்களுடன்
- காணிக்கை!
- பொதுவுடமை.
- ரசிக்க பிடித்தன..
- நீச்சல் பயிற்சி
- நட்பு
- நினைவு
- குறை தீர்ந்த குழந்தைகள்
- அப்பாவின் ஓவியம்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது – 5 (தொடர்கவிதை)
- இந்த வாரம் இப்படி – நவம்பர் 24 2002
- கவிதா:
- ஞானோபதேசம்
- சிந்து சமவெளி நாகரிகமும் சாதிய சமுதாய அமைப்பும்
- மறக்கப்பட்டவர்கள் : மலேசியாவில் ஏழைகள் இந்திய வம்சாவளியினரே
- பாட்டிகளின் மகத்துவம்
- தண்ணீர் யாருக்குச் சொந்தம் ?
- தண்ணீர் இனவெறி
- தண்ணீர் : பொலிவியாவில் எதிர்ப்புகள்
- நாட்டு நாய்களும் நகரத்து நாய்களும்
- புகை
- பூவும் நாரும்
- கவர்ச்சி காட்டும் கண்ணகி
- மனமெங்கும் வாசமோ ?
- கனவு நாடு
- சா(சோ)தனை
- மத்யமர்(சுஜாதா மன்னிப்பாராக….)