புகாரி
பாராட்டு!
உன் பாராட்டால்
தமிழா – நம்
தமிழுக்குச் சோறூட்டு!
O
பாராட்டும் போது வரும்
பெளர்ணமி நிறைவும்
அதைக் கேட்ட கணமே
கம்பி மத்தாப்பு
கொளுத்திக்கொள்ளும்
கண்களைச் சந்திக்கும்
இதய நெகிழ்வும் தவிர
உயர்வான இன்பங்கள்
வேறுண்டா ?
O
மறந்துவிட்டாயா ?
தாலாட்டிப்
பாராட்டியதாலேயே
தோழா நீயன்று
நிம்மதிக்குள் கண்ணயர்ந்தாய்
O
தமிழா நீ
சபிப்பதைத் தள்ளிப்போடு
ஆனால்
இன்றே இப்பொழுதே உன்
பாராட்டை அள்ளிப்போடு
O
பண்புயரப் பாராட்டினால்
உனக்குப்
பதவியும் பறிபோகுமா
அன்றி
பற்கள்தான் உடைபடுமா ?
பாராட்டுவதால்
பாராட்டியவன்தானே
பன்மடங்கு உயர்கிறான் ?
O
கலைஞர்களெல்லாம்
நல்ல
பாராட்டும் பண்பாளர்கள்தாம்
ஆனால்
ரசிகன்தானே உலகின்
முதல் மூலக் கலைஞன் ?
O
ரசனைகளே நமது உள்ளம்
ரசித்ததைப் பாராட்டும்
பண்புதான் அதன் மகுடம்
ரசனைகளற்றவனின்
உடலும் உள்ளமும்
ஐம்புலன்களும் புதைபட்ட
சமாதிகளல்லவா ?
கண்ணுக்குள் விழுந்து
பூவிரித்ததைப் பாராட்டாதவன்
குருடன்தானே ?
காதுக்குள் நுழைந்து
கிசுகிசுத்ததைப் பாராட்டாதவன்
செவிடன்தானே ?
நாவினில் தித்தித்து
நினைவழித்ததைப் பாராட்டாதவன்
ஊமைதானே ?
O
வண்டுவந்து பாராட்டாமல்
மலர்கள் பூக்கத் தவிக்குமா ?
தென்றல் வந்து பாராட்டாமல்
வசந்தம் உன்னைத் தழுவுமா ?
நிலவு வந்து பாராட்டாமல்
இரவு மனதில் இனிக்குமா ?
மழை வந்து பாராட்டாமல்
சோறு உனக்குக் கிடைக்குமா ?
இளமை வந்து பாராட்டாமல்
வாழ்க்கைதான் இனிக்குமா ?
O
பெண்ணைப் பாராட்டாமல்
ஒரு காதல் இல்லை
அவள் கண்ணைப் பாராட்டாமல்
ஒரு மயக்கம் இல்லை
சொந்தம் பாராட்டாமல்
நெஞ்சுக்கு இன்பம் இல்லை
உறவைப் பாராட்டாமல்
உலகில் உயிர்களே இல்லை
O
பாராட்டி வளர்வதன்றோ
எங்கும் கலைகள்
பாராட்டி செழிப்பதன்றோ
நமது சமுதாயம்
O
அடடா…
இப்படி நீ
பாராட்டாமல் கிடந்தால்
அப்படி அப்படியே
அழிந்துபோகுமே
உன் மொத்த இனமும்
அந்த அழிவின்
இராட்சச வாய் வாசலில்
முதலாமவன் யார் தெரியுமா ?
நீதான் தமிழா
நீயேதான்!
*
அன்புடன் புகாரி
buhari@rogers.com
- வைரமுத்துக்களின் வானம்-3
- ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள்
- கவிதை மொழியும் உரை நடை மொழியும்
- என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும்
- கிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை
- அகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் ‘ஞானதா ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 77)
- கடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்
- தூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்
- மார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்!
- அரசியல் : ஒரு விளக்கம்
- மொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு
- பலிகொடுத்து வழிபடுவதைப் பற்றி…
- சிலநேரங்களில்
- மேலும்…
- ஒரு மத்தியான நேரத்து சிந்தனை..
- மனம்
- சோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து
- குமரி உலா 3
- பல்லாங்குழி
- கற்றதனாலாய பயனென்கொல்
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3
- பாரதீ…
- காதல் கருக்கலைப்பு
- ஆனந்தியின் டயரி : காதலா காவலா ?
- கடிதங்கள்
- ஹே பக்வான்
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2
- பச்சைக்கிளி
- வேலை
- கங்காணி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து நான்கு
- கல்பாக்கம்
- நீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா ?
- தமிழக அரசின் மக்கள்-விரோத உயிர்வதைத் தடுப்புச் சட்டம்
- திருவிழா
- வைரமுத்துவே வானம்
- இருவர்
- பாராட்டு
- காலத்தின் கட்டாயம்
- பூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்
- வாரபலன் (இந்த வாரம் – ‘தி இந்து ‘ வாரம்)
- கறுக்கும் மருதாணி (ஆசிரியர் கனிமொழி) நூலின் முன்னுரை
- விடியும்! நாவல் – (14)