‘ரிஷி’
தாயுமானவன், தந்தையானவன் நான்.
தீர நேசிக்கிறேன் என் சேய்களை.
அதனால் தான், ஆயகலைகள் கற்கவும்
அவர்களை அனுமதிக்க மறுக்கிறேன்.
திறன் வளர்க்க அவர்கள் புறப்பட்டுப் போய்விட்டால்
அந்தப் பிரிவை என்னால் தாங்க முடியாது.
நாய்களைப் போல் நடத்துகிறேனா?
வாய்க்கு வந்தபடி பேசாதீர்கள்.
உங்களைத் தான் உள்ளே வரவே விடவில்லையே நான்.
என்ன? படமனுப்பியிருக்கிறார்களா இங்கிருப்பவர்கள்?
அடங்காப்பிடாரிகள்.
ஏய், யாரங்கே-
அடித்து நொறுக்குங்கள் அவர்களை.
அப்படியாவது அவர்கள் நல்ல வழிக்கு வரட்டும்.
கழியைப் பிரயோகிக்காமல் விட்டு விடுவது சரியல்லவே.
உரிமை பேசும் தறுதலைகளாக வளர்ந்துவிட்டால்
பின், ஐயோ, பழி வந்து சேருமே.
அருமையாக வளர்க்க வேண்டும் என் பிள்ளைகளை.
எத்தனைக்கெத்தனை அதிகம் அடிக்கிறேனோ
அத்தனைக்கத்தனை உன்னதப் பெற்றோராவேன்!
பிரிவாற்றாமை என்னை உருக்கிக் குலைத்து விடுமே
என்ற அச்சம் வருத்த
குறும்புக் கண்ணனை யவன் வளர்ப்புத்தாய்
உரலில் கட்டி வைத்ததைப் போலவே
நான் மின்கம்பிவேலியிட்டு
பத்திரப்படுத்தியிருக்கிறேன்.
தத்துப் பிள்ளைகளா அவர்கள்
அல்லவேயல்ல
என் வித்துகள்;
புத்திரச் செல்வங்கள்.
ரத்தம் பெருகும்படியாக
எத்தித் தள்ளுவேன்.
படித்ததில்லை நீங்கள்?
அடிக்கிற கை தான் அணைக்கும்.
எனவே தான், நான் இன்னும் அடித்து முடிக்கவில்லை.
அத்தனை உறுதி வாய்ந்தது என் அன்பு-
புரிந்து கொள்ளுங்கள்.
எத்தனை வேண்டுமானாலும்
துண்டாடித் தோரணம் போடுவேன்.
பொத்திக் கொண்டு போய்விட்டால்
உங்களுக்கு நல்லது.
குளோபல் வில்லேஜ், ஹியூமன் ரைட்ஸ் என்றெல்லாம்
தத்துபித்தென்று கத்த முற்பட்டீர்களோ
வெட்டி விடுவேன் வெட்டி.
கைப்பற்றிய ஆயுதங்களும் இப்போது என்னிடம் குவிந்திருக்கிறது
கவனமிருக்கட்டும்.
ஏற்கனவே அறுத்தெறிந்தாகி விட்டது
என் பிள்ளைகளின் கைகளை
நாவை
கண்களை
சிறகுகளை
நாட்களை
நம்பிக்கைகளை
நல்லுயிரை…
“பல்லாண்டு வாழ வேண்டிய” என்பதையும்
சேர்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அது ஒரு பொருட்டில்லை.
இரண்டாம் நூற்றாண்டாகட்டும்,
இருபத்தியோராம் நூற்றாண்டாகட்டும்,
மக்கள் நலன் காக்கவென்றே
வரம் வாங்கிக் கொண்டு வருவோர்
பெரும்பாலும்
சாமானியர்களின் தொண்டைக்குழியை அறுத்தவண்ணமே தான்
அவர்களுக்காகக் குரல்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்னிடம் மட்டும் ஏன் தப்பு கண்டுபிடிக்கிறீர்கள்?
அகண்ட உலகமே அக்கடா என்று பார்த்துக் கொண்டிருக்க
உங்களுக்கு மட்டும் ஏன் இந்த துக்கிரித்தனம்?
யாம்
எம் மக்களைக் குட்டுவதும்
வெட்டுவதும்
நசுக்குவதும்
பொசுக்குவதும்
மதிப்பழிப்பதும்
மிதித்தழிப்பதும்
யாவும்
அதியன்பினால் மட்டுமே.
திரும்பத்திரும்ப நான் திட்டவட்டமாய்ச் சொல்லியும்
நம்பாமல் உள்ளே எட்டிப்பார்க்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள்,
நடப்புண்மை அறிய முயலும் கயவர்கள்
காவுகொள்ளப்பட்டு விடுவர்.
அச்சுறுத்துவதாக எண்ண வேண்டாம்.
அக்கறையோடு எச்சரிக்கிறேன்_
அன்பின் பெயரால்…
ramakrishnanlatha@yahoo.com
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2
- தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2
- “காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”
- முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
- இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
- கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்
- உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>
- என். விநாயக முருகன் கவிதைகள்
- வேத வனம் –விருட்சம் 47
- ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்
- ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..
- முதல் முதலாய்த் தோற்ற நாள்
- மழை
- அதிர்ஷ்டம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது
- நினைவுகளின் தடத்தில் – (34)
- Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- நெஞ்சு பொறுக்குதில்லையே…
- மனப் பொழிவு
- குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..
- நட்சத்திரவாசி
- ஊழிக் காலம்
- போதிமரங்கள்
- கார்காலம்
- www.மனிதம்.com
- குப்பைப் பூக்கள்..!