This entry is in the series 20100822_Issue

ராமலிங்கம் சந்திரமௌலி


தேங்கிக் கிடக்கும்
மழை நீரில்
காகிதக் கப்பல் விட்டு
கரை சேர ஆசை

நிலா முற்றம் மட்டுமே
உலா வரும் பெண்ணை
கை கோர்த்து
நீண்ட கடற்கரை வெளியில்
நடத்திச் செல்ல ஆசை

கனக ராயன் குளத்தில்
தாய் தந்தை பார்க்கும்
பெண்ணையும் மணம் முடிக்க ஆசை

ரஜினியுடன் கைகோர்த்து
இமாலயம் செல்ல ஆசை

கமலுடன் அமர்ந்து
நாத்திகம் பேசவும் ஆசை

லயமின்றி ஊர் சுற்ற ஆசை
பயம் கொண்டு
கோவில் சுற்றவும் ஆசை

நிசம் மறந்து
இசம் பேச ஆசை

புழல் நினைத்து
உள்ளடங்கும் ஓசை

நிசத்திற்கும் நடைமுறைக்கும் இடையேயான
முரண்பாடுதான் வாழ்க்கை என்ற
சிந்தனையில் பிறந்தது
இந்த வார்த்தை

Series Navigation