ஒற்றை மீன்
Published March 20, 2011 • By
இளங்கோ
இளங்கோ
*
எல்லையற்று நீளும் துயரச் சுவரில்
கரும்பாசி போல்
படிந்திருக்கிறாய்
தனிமைப் போக்கும் வழியற்று
அகன்ற கண்ணாடிக் குடுவையில்
நீந்தும்
என்
ஒற்றை மீனுக்கு
உன்னைக் கொஞ்சம்
சுரண்டி
உணவிடுகிறேன்
அது
குமிழ் குமிழாய்
உடைத்துக் கொண்டிருக்கிறது
தன் பெருமூச்சை
*****
2. கண்ணீர் குரல்
*
தொலைதூர
செல்போன் அழைப்பின்
வழியே
பிசுபிசுக்கும்..
உன்
கண்ணீர் குரலால்
ஆலங்கட்டிக் கொள்கிறது
இந்த
உரையாடல்..
******
–இளங்கோ