அனந்த் நாகேஸ்வரன்
மு. இராமனாதன் கூறியது போல முத்துலிங்கத்தின் படைப்பு இலக்கியத்தரம் வாய்ந்தது என்றாலும், கருத்தளவில் உண்மையிலேயே எவ்வளவு நீள்கிறது என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.
நேர்காணலின் உச்சமாக ஆசிரியரின் கீழ்கண்ட கேள்வியும் அதற்கான பதிலும் முன்னிறுத்தப்படுகிறது.
“நீங்கள் எதற்காக உடம்பை இவ்வளவு வருத்திப் பிழிந்து இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்? உங்கள் பொழுதுபோக்குக்கு வேறு ஏதாவது தேர்வு செய்யலாமே?”
இந்தக் கேள்வி அவளை நிலைகுலைய வைத்துவிட்டது என்கிறார் ஆசிரியர். ஒரு கணம் என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பும் ஜெனிவீவ் கடைசியில் ஒருவாறு நிதானித்து ஒவ்வொரு வார்த்தையாகப் பொறுக்கி எடுத்துப் பேசுகிறாள்: “ஜவலின் எறிபவர்கள், நீச்சல் வீரர்கள் எடை தூக்குபவர்கள், இவர்கள் எல்லாரும் தினம் தினம் தங்களை வருத்திப் பயிற்சி எடுக்கிறார்கள். போட்டிகளில் பங்குபற்றுகிறார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள்? மனித உடம்பை அறிவதுதான் நோக்கம். உடம்பின் எல்லையைக் கண்டுபிடிப்பது. அதைச் சிறிது நீட்டுவது. இதுவும் ஒரு சேவைதான். அடுத்தவருக்கு.”
இங்கு தமிழ் சினிமா Hero போன்று அளவுக்கு அதிகமாக புனிதப்படுத்தும் போக்கை காண்பதை தவிர்க்க முடியவில்லை. பதிலில் சாமார்த்யம் இருக்குமளவிற்கு சரக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பணம், புகழ் நிமித்தம் அநேகமாக வர்த்தகமாக்கப்பட்டுவிட்ட இன்றய விளயாட்டு வீரர்களின் நோக்கத்தை “உடம்பை அறிவது” என்பதன் கீழ் வகைபடுத்தியது நெருடலையே ஏற்படுத்துகிறது.
விளயாட்டு என்பது என்ன? ஏன் தோன்றியது? அதன் நோக்கம் என்ன? இன்றயதினம் உலக அரங்கில் விளையாட்டு என்ற பெயரில் நடந்துகொண்டிருப்பதற்கும் அதற்கும் என்ன சம்மந்தம் ?
உடம்பை, மனதை ஆரோக்யமாக, மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது, வெற்றி-தோல்விகளை இலகுவாகப் புரிந்து கொள்ள உதவுவது மற்றும் ஒரு குழுவாக செயல்பட்டு (team work) எப்படி வெற்றி ஈட்டுவது என்பதை புரிந்துகொள்தல் போன்றவை விளையாட்டின் பயன்கள். இதில் எதுவும் இன்றய விளையாட்டில் இருப்பதாய் தெரியவில்லை. குத்துச்சண்டை எப்படி ஒரு விளையாட்டாக இருக்க முடியும்?
இன்றய உலகில் அநேகமாக அனைத்து விளையாட்டு நட்சத்திரங்களும் உடல் நலத்தை விற்று பணமும் பதக்கங்களும் ஈட்டுபவர்களாகவே உள்ளனர். இவர்களின் “எல்லை நீட்டுகிற” முயற்சியில் எத்தனைமுறை “knee surgery” செய்து கொள்கிறார்கள் ? இது மேலும் நீண்டு ஊக்க மருந்து உட்கொள்தல், மற்றும் அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவிற்கு அரசியல் (Indian cricket)…… இதில் “உடம்பை அறிதல்” எங்கு நிகழ்கிறது? இதையும் தாண்டி “இதுவும் ஒரு சேவைதான். அடுத்தவருக்கு” என்பது நிஜமாகவே தொண்டையில் சிக்கிக்கொள்கிறது.
விளையாட்டு என்பது தன்னளவில் உன்னதமானது. தற்கால தொழிலதிபர்கள் அதை விளம்பரமாக்கி வியாபாரமாக்கிவிட்டனர். விளையாட்டு வீரர்களோ கண்ணை விற்று சித்திரம் வாங்குகின்றனர். ரசிகர்களோ நேரத்தையும் பணத்தையும் பாழ்படுத்துகின்றனர். இந்த பரிதாபமே விளையட்டு என்ற பெயரில் இங்கு அரங்கேருகின்றது.
சரி…இவையெல்லாம் கூட விட்டுவிடலாம், ஒரு மிக நேர்மையான விளையாட்டு வீரரையே எடுத்துக்கொள்வோம். அவருடைய அதிகபட்ச உன்னதமான நோக்கம் என்னதான் இருந்துவிட முடியும்? அவருடைய திறமையை நிரூபிக்க வேண்டும், அது பணமாகவோ, புகழாகவோ அவரை வந்து சேரவேண்டும் என்பதைத்தவிர? இதில் “உடம்பை அறிதல்” என்று ஒரு யோகியைப் போலவோ, சேவை என்ற அளவிற்கு புனிதப்படுத்துதலோ தேவையற்றது என்பது என் கருத்து.
(ananth333@gmail.com)
- அம்மா
- எல்லையைக் கொஞ்சம் நீட்டுவது — குறித்து….!!!
- அக்கினிப் பூக்கள் – 6
- திண்ணைப் பேச்சு – அசுரன் மறைவு
- ‘பயணி’ (The passenger – A film by Michelangelo Antonioni)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !விண்மீன் தோற்றமும் முடிவும் (கட்டுரை: 9)
- Last Kilo Bytes
- எவனோ ஒருவன் – திரைப்பட விமர்சனம்
- கிறிஸ்தவம்? கோகோ கோலா?
- கிழிசல்கள்
- நாடக வெளியின் ‘வெளி இதழ்த் தொகுப்பு’ – புத்தக அறிமுகக்கூட்டம்
- ஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென்
- புதுச்சேரியில் புத்தகக் கண்காட்சி
- கிழக்கிலங்கையின் கவிகள்
- கடிதம்
- கலாமோகனின் கதைகள் குறித்து… ஒரு முன்குறிப்பு
- நாஞ்சில்நாடன் அறுபது வயது நிறைவு நூல் வெளியீடு
- மொழிபெயர்ப்பாளர் திருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்; ‘இயல் விருது’ பெறுகின்றார்
- எழுத்துக்கலைபற்றி ……..5 கி.சந்திரசேகரன்
- லா.ச.ரா. நினைவாக : எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா
- ஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்- வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைக் காவியம்
- உயிர்மை புத்தக வெளியீடு – மணா , தமிழச்சி தங்க பாண்டியன் நூல்கள்
- அனார் கவிதைகள் : எனக்குக் கவிதை முகம்
- நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்
- “பழந்தமிழ்ப் பாக்கள்- மரபுவழிப் படித்தலும் பாடுதலும்” – சில எண்ணங்கள்
- பெருஞ்சுவர் சூழ்ந்த பெண் : (பெருஞ்சுவருக்கு பின்னே [சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும்] ஜெயந்தி சங்கர்.)
- தமிழிலிருந்து தமிழாக்கம்: நூற்கடல் தி.வே.கோபாலையர் தமிழாக்கிய பெரியவாச்சான் பிள்ளையுரை
- கவிதைகள்
- ரௌத்திரம் பழகு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 4 (இறுதிக் காட்சி)
- தைவான் நாடோடிக் கதைகள் 6 பெண்புலி மந்திரக்காரி (ஹொ கொ பொ)
- பிரம்மரிஷி
- ராலு புடிக்கப்போன டோனட் ஆன்ட்டி
- அப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் – ஒரு பெரிய சிறுகதை
- இலக்கிய விசாரம் : மரபு மீறலும் மரபு சிதைத்தலும்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 13 நம்பிக்கை எனும் நீர் குமிழ்
- குறிப்பேட்டுப் பதிவுகள் – 6 !
- சம்பந்தம் இல்லை என்றாலும் – விநோத ரச மஞ்சரி (ஆசிரியர் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்)
- அதிகார வன்முறைக்கு எதிரான ஜிகாத்
- பாலியல் கல்வி,சிறார்கள் மற்றும் நாடாண்மை
- கொலையும் செய்யலாம் பத்தினி!!!
- தாகூரின் கீதங்கள் – 9 ஆத்மாவைத் தேடி !
- விருது
- வலி தந்த மணித்துளிகள்
- மாத்தா ஹரி அத்தியாயம் -42