திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030518_Issue

அரசியலும் சமூகமும்

கோபி கிருஷ்ணன் மறைவு : அஞ்சலிக் கூட்டம்

அண்ணா நகர் அமரந்தா இல்லத்தில் நடைபெறவிருக்கிறது. எழுத்தாளர் திரு . கோபி கிருஷ்ணன் மே மாதம் , 10ம் தேதி தன்னுடைய 58-வது வயதில் மறைந்துவிட்டார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு ஒரு…

இந்த வாரம் இப்படி : மே 17 2003 (ஜெயலலிதா, கிருஷ்ணசாமி,மருத்துவக்கல்லூரி மாணவர்கள், புத்ததேவின் வங்காளம்)

மஞ்சுளா நவநீதன் ஜெயலலிதாவுக்குக் கண்டனம் : கிருஷ்ணசாமிக்குப் பாராட்டு மருத்துவர் கிருஷ்ணசாமி சாதிக்கலவரத்தை தூண்டுகிறாரா ? ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதுபோல, கிருஷ்ணசாமி ஜாதிக்கலவரத்தைத் தூண்டுகிறார் என்று முதல்வர் பேசியிருக்கிறார். அதுவும்…

சில நிகழ்வுகள், சில பார்வைகள்

வெளி ரெங்கராஜன் (ஓடும் ரயிலிலும், மதுபான வளாகத்திலும் நடந்த சில இலக்கியச் சந்திப்புகள் பற்றி வணிகப் பத்திரிகைகளில் வந்த செய்திகளை ஆதாரமாக வைத்து குடியும், கூத்துமாக சிற்றிலக்கிய வட்டாரம் ஏன் இவ்வளவு ஒழுங்கீனமாகப் போய்க்கொண்டிருக்கிறது…

கூவத்தில் எறியப்படாத புத்தகமும், எறியப்படவேண்டிய பத்திரிகையும்

கோபால் ராஜாராம் 'இலக்கியப் பேட்டையில் கலாட்டா ' என்று தலைப்பிட்டு 'இந்தியா டுடே 'யில் சிற்றிலக்கிய நண்பர்களைப் பற்றியும், நிகழ்வுகளைப் பற்றியும் ஒரு நீண்ட கட்டுரை வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையில் வெளிவந்தவை எண்ணி மூன்றே…

கடிதங்கள்

மே மாதம் 18 ஆம் தேதி, 2003 ஆசிரியருக்கு, கோ. ராஜாராம் தனது கட்டுரையில் சு.சமுத்திரம் `தாழ்த்தபட்ட மக்களின் ' குரலை பிரதிபலித்ததாக எழுதியிருக்கிறார். உண்மையில் சமுத்திரம் தாழ்த்தபட்டவர்களின் குரலுக்கு எதிராகவே எல்லா சமயங்களிலும்…

வாரபலன் – மே மாதம் முதல்வாரம் 2003 வாகனப்ப்ராப்தி

மத்தளராயன் சதா மழை பெய்யும் யார்க்ஷயரை விட்டு ஊரைப் பார்க்கக் கிளம்பலாம் என்று முடிவெடுத்த அடுத்த நாள் பயணம் வைக்க வேண்டிப் போனது. வழக்கம்போல் மேன்செஸ்டரில் இருந்து கிளம்பி நடுவில் துபையில் பத்து நிமிடம்…

ஒவ்வாத மனிதர் [எழுத்தாளர் கோபிகிருஷ்ணனுக்கு அஞ்சலி ]

ஜெயமோகன் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் 10.05.03 அன்று சென்னையில் மரணமடைந்தார் . ஐம்பத்துமூன்று வயதானவர். ஏற்கனவே பலவகையான உடல்நலப்பிரச்சினைகளினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இறுதிநாட்களில் நண்பர்களின் சிறு உதவிகளால் வாழ நேர்ந்தது. கோபிகிருஷ்ணன் எனக்கு எழுத்தாளராக அறிமுகமானது…

ஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் ?

டாக்டர் வந்தனா சிவா ஆந்திர பிரதேஷ் பஞ்சாப் மாநிலங்களுக்குப் பின்னர், விவசாயக் கடன்களும், விவசாயிகள் தற்கொலைகளும் இன்று உத்தரபிரதேசத்திலும் தொடங்கிவிட்டன. கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கின்றன. முக்கியமாக உருளைக்கிழங்கு விவசாயிகளை. விவசாயிகள் உருளைக்கிழங்கு ஒரு குவிண்டாலுக்கு சுமார்…

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 3

K.ரவி ஸ்ரீநிவாஸ் சூழலரசியல் (political ecology) என்ற ஆய்வுத்துறை சமூகம் இயற்கை/சூழல் உறவுகளை ஆய்கிறது, குறிப்பாக இயற்கை/சூழல் பயன்படுத்தபடுவதற்கும்,சமூகத்தின் பல பிரிவினர்,அமைப்புகளுக்கும் உள்ள உறவினை ஆராய்கிறது. பண்பாட்டு சூழலியல் என்ற ஆய்வுத்துறையில் சமூகங்கள்,இயற்கை,ஆற்றல் பயன்பாடு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி லியோனார்டோ டா வின்சி, பத்து மனிதர்களின் ஆற்றலை ஒருங்கே கொண்ட பேரறிஞர் (ten men-in-one) என்று போற்றப்பட்டவர். டா வின்சி ஒரு அறிவியல்…

மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 4 – எர்வின் ஸ்க்ராட்டிஞ்சர்

அரவிந்தன் நீலகண்டன் உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும் ? நீ கண் கண்ட தெய்வம். எல்லா விதிகளும் நின்னால் அமைவன. எல்லா விதிகளும் நின்னால் அழிவன. உயிரே. நீ காற்று. நீ நிலம்.…

போபால் விஷ வாயுவில் பல்லாயிரம் பேர் பலியாகிப் பதினெட்டு ஆண்டுகள்….! (Bhopal Union Carbide Pesticide Plant Gas Disaster, A Revi

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் முப்பெரும் பேரழிவு நிகழ்ச்சிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி அணுகுண்டு வீழ்ச்சிக்கு அடுத்த படியான இடத்தைப் பெறுவது, போபால் இராசயனக் கூடத்தில் 1984…

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி – ஒன்று

சுந்தர ராமசாமி அன்பார்ந்த நண்பர்களே, முதலில் ஒரு பதினைந்து நிமிடங்கள் என்னுடைய கருத்துக்களை நான் பேசலாம் என்றும் அதற்கு பின் நண்பர் மகாலிங்கம் அவர்களின் கவிதைத் தொகுப்பை வெளியிடலாம் என்றும் அதையடுத்து நான் ஆரம்பத்தில்…

அறிமுக நேர்காணல்: காஞ்சனா தாமோதரன்

மனுபாரதி காஞ்சனா தாமோதரன் - தமிழ் எழுத்துலகில் கடந்த ஆறு வருடங்களாகக் கவனிப்புப் பெற்று வரும் பெயர். நம் 'தென்றல் ' வாசகர்களுக்குக் கூட இப்பெயர் நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது. இவரது 'X’ என்ற சிறுகதையும்,…

அதிகாரமும் அடிமைத்தனமும் ( துர்கனேவின் ‘முமூ ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 61)

பாவண்ணன் ஆந்திரத்தில் துரோணாச்சலம் என்னும் இடத்தில் கொஞ்சகாலம் வசித்தோம். அவ்வளவாகத் தண்ணீர் வசதியில்லாத இடம். நாங்கள் குடியிருந்த தெருவின் முடிவில் ஒரு ஆழ்துளைக்குழாய் போட்டிருந்தார்கள். அங்கிருந்துதான் தண்ணீர் பிடித்துவரவேண்டும். நானும் என் மனைவியும் மட்டுமே…

கதைகள்

மனிதாபிமானம்

கோமதி கிருஷ்ணன் அந்த பெண் குழந்தை,2 ,2 1/2 ,வயதிருக்கும் அழகென்றால்கொள்ளை அழகு.குங்குமப்பூவும்,ரோஜப்பூவும் கலந்த நிறம்.கண்ணும்,மூக்கும் , நிறமும்கதுப்பு கன்னங்களும்,காச்மீரிகளுக்கே உரித்தான, விவரிக்கத்தெரியாத,ஒருதேஜஸும் .பகவானே;;இந்த குழந்தைக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை ? அது…

அரசூர் வம்சம் – அத்தியாயம் ஆறு

இரா முருகன் விடிகாலையிலேயே கலுபிலு என்று சத்தம். அடிபிடி சண்டை. வீட்டில் ஸ்திரிகள் இருந்தாலே போதும். கூக்குரலுக்கும் சிரிப்புக்கும் அழுகைக்கும் சச்சரவுக்கும் கும்மாளத்துக்கும் குறைச்சல் இல்லை. எங்கப்பா ஆலப்பாட்டிலேருந்து வரச்சே பாண்டிப் பணம் நாலணா…

பறவைப்பாதம் – அத்தியாயம் 1

எஸ். ஷங்கரநாராயணன் 1 பெரியவனின் மீசை சார்ந்த கவனங்கள் ஆச்சரியம் அளிக்கின்றன. வாழ்க்கையில் இது ஒரு பருவம். எதையும் மகிழ்ச்சியின் ஊற்றாய் உள்க்கதகதப்போடு அனுபவிக்கும் வயது. டான்-ஏஜ். நடையில் சற்று கனவின் ஒயில் தன்னைப்போல…

களவு

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் ஒரேயொரு குட்டிக் கிராமத்தில ஒரேயொரு வாசிகசாலை இருந்துதாம். அங்க ஒரு மேசை நாலு கதிரை ஒரு இத்துப்போன அலுமாரி மீசை போல தேஞ்ச தும்புக்கட்டையும் இருந்துதாம். எங்க பாத்தாலும் கறப்பத்தான்…

அன்புள்ள அப்பாவுக்கு

நாகரத்தினம் கிருஷ்ணா பாரீஸ், 10-12-2000 அன்புள்ள அப்பாவுக்கு, இங்கு நான், உங்கள் மருமகப்பிள்ளை இருவரும் நலம். அது போல் உங்கள் நலனையும், அம்மா, அண்ணன், அண்ணி, குழந்தை செளம்யா அனைவரின் நலனையும் அறிய ஆவல்.…

கவிதைகள்

நீராகிப் போன கடிதங்கள்

ராபின் மேகங்கள் பெற்ற வெண்மை கொண்டு புலர்ந்த காலை; முடித்தாக வேண்டிய வேலை, படித்தாக வேண்டிய புத்தகம், கேட்டாக வேண்டிய சங்கீதம், எழத்தான் வேண்டிய திருக்கிறது; அகத்தின் கனவுகளை புறத்தின் நீர்கழுவி வேஷங்கள் தரித்து…

நிகழ் காலம்

மீ.வசந்த், சாத்தூர். இந்தியாவிடம் நலம் விசாரித்தேன், இருக்கிறதாம். இன்னும் அப்படியே இளமை மாறாமல். புரியவில்லை. இ..ள..மை மா..றா..ம..ல் ? ? ? அர்த்தம் கிடைத்தது. வளர்ச்சிகள் இல்லாமலும் வசதிகள் இல்லாமலும்... முன்னெப்படியோ அப்படியே இன்றைக்கும்.…

உன் முயற்சி தொடரட்டும்

புஷ்பா கிறிஸ்ரி நீ உழைத்து உயரவில்லையா ? உழைப்பை மறவாதே! நீ விதைத்து முளைக்கவில்லையா ? விதைப்பதை விட்டுவிடாதே! உன் மூளையும் செயற்படவில்லையா ? சிந்தனையை விட்டு விடாதே! நீ கேட்பதுவும் கைகூடவில்லையா ?…

நான் பதித்த மலர் கன்றுகள்

சித்தகவி கடும் குளிரிலும் நெஞ்சினில் கனன்றெரியும் காதல் சூட்டின் இதத்துடன் உன்னை மனதில் நினைத்துக் கொண்டே பரவசத்துடன் நான் பதித்த கன்றுகள் அனைத்தும் பூத்துக் குழுங்குகின்றன விதம் விதமான மலர்களுடன்; இதோ ஒரு பட்டு…

தமிழ்மணவாளன் கவிதைகள்

தமிழ்மணவாளன் -1- முற்றிலும் உருமாறிப்போன கனவின் சாட்சியாய் மெல்ல மெல்ல கரைந்த போது எத்தருணம் அதனோடு இதுவும் இணையாகும் அசலின் ஒருகணம் நிலைப்பின் பின் தொடர்ந்து கரைய வழிந்தோடிப்போகிறது வாழ்வு. **** ***** *****…

யாதுமாகி …

சுந்தர் பசுபதி தவறவிட்ட தருணங்கள் தழும்பாகி சொரிந்துகொள்ள உணக்கையான காயமாகி உள்ளுக்குள் அடிபட்ட ஊனமாகி அவசியத்தை வலிக்குள் பொதித்த நிகழ்கால தேடலின் மையமாகி....... டாஹோ மலைத்தொடரில் க்ராண்ட் கான்யான் பள்ளத்தாக்கில் கோல்டன் கேட் பாலத்தில்…

பித்தர்களுக்குள் பிச்சைக்காரன்

சத்தி சக்திதாசன் பித்தன்தான் பிழையான உலகில் சரியாக வாழ முயலும் நானொரு பித்தன் தான் சித்தத்திலே ஊறிய தூறல்களை ஒவ்வொன்றாக அள்ள முயலும் நானொரு பித்தன் தான் பத்தியெறியும் பாசத்தீயின் மத்தியிலே உறவு எனும்…

நினைவலைகள்

ஸுவாதி கிருஷ் அன்னை மடித்தூக்கம் மாலையில் வீதியோரத்தில் நண்பர்கள் கூட்டம்! விடலைப் பிள்ளைகளாய் நம் தெருக்களில் துள்ளித்திரிந்த காலம் துக்கங்கள் மறந்த காலம் பண்டிகைகளை எதிர்பார்த்து பள்ளிவிடுமுறைகளை விளையாடியே கழித்து திருவிழாக்களின் தாவணிகளை ரசித்து…

சாதனங்கள்

பாரதிராமன் நிலவைப் பார்த்துக் குரைத்த நாய்கள் மலையைப் பார்த்துக் குரைக்கலாயின பின்னர் மனிதனைப் பார்த்துக் குரைக்கத் தொடங்கின இப்போதெல்லாம் தங்களில் ஒன்றைப் பார்த்து மற்றொன்றாய்க் குரைக்க ஆரம்பித்துள்ளன இன்னும் சற்றுப் போனால் தங்களைப் பார்த்தே…

சாமியும் பூதமும்

பாரதிராமன் எதிலும் இல்லை என்றான் ஒருத்தன் எதிலும் இருக்கிறது என்றான் இன்னொருத்தன் சண்டை முற்றி சமாதானமாயிற்று இப்போது சண்டையில் இல்லை சமாதானத்தில் இருக்கிறது என்றான் முதல்வன் சமாதானத்தில் இருக்கிறது சண்டையிலும் இருக்கிறது என்றான் இரண்டாமவன்…