இரங்கலுக்கு வருந்துகிறோம்

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

சு.மு.அகமது


சுவர் எழுதிக்கொள்ளும்

எனது இரங்கற்பாவை

அதற்குத்தான் தெரியும்

சித்திரத்தின் வலி

தீண்டல்களின் தோலுறியும்

சுவரதை நன்கறியும்

பூக்களின் சருமத்தில்

புகைச்சலின் பரிசம்

பூவோடு சருகும் கருகும்

மட்கிப்போயிருக்கும்

என் எச்சத்தின் மிச்சம்

நெட்டி முறித்திடும் சோம்பல்

நெடு நாளைய கனவாய்

ஒருக்களிக்கும் நினைவுகளில்

என் மரணம்.

-சு.மு.அகமது

Series Navigation

சு.மு.அகமது

சு.மு.அகமது