‘இக்கணம் ‘

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

கவியோகி வேதம்


^^^^
பெரும்பான்மை மாந்தர் சென்ற ‘கணம் ‘ பேசியே
அரும்சொத்தாம் ‘இக்கணத்தின் ‘ ஆற்றலினை இழக்கின்றார்!
..
பழைய ‘டேப் ‘ போடுபவர் வாய்களைத் தைத்தாலே,
இழைகின்ற இப்புவியில், இனிய ‘சுரம் ‘ பிறக்குமென்பேன்;
..
சிறுவயதுத் துன்பத்தை, செல்வோர்கள்,வருவோர்கள்
உறவினர்கள் அனைவரிடம் ஒப்பாரி வைப்பதினால்,
..
பலபேர்வாய் ‘ரப்பர்வாய் ‘ ‘பேழ் ‘வாயாய் ஆச்சுதென்பேன்!
உலவுகின்ற ‘இன்பஒளி ‘ ஓடிவரும் சூக்குமமும்,
..
இக்கணத்தின் ‘சுக ‘வழியும் இவர்களால்தான் அடைத்ததென்பேன்!
சொக்கவைக்கும் நிலவொளியை சுகமிலாதான் ரசிப்பானா ?
..
பாய்ச்சல் அருவிதனைப் பைத்தியம் புகழாது!
‘ஆய்வு ‘செய்யும் புதுமைகளை அறிவிலியும் ரசிக்காது!
..
நேற்றைய பொழுதுகளோ நில்லாத காசாச்சு!
தோற்றப்போம் கணங்களோ தொலைவுநிற்கும் ‘மான் ‘ஆச்சு!
..
இக்கணத்தைக் ‘கைப் ‘பிடித்தால் எக்கணமும் தேன்நிலவு:
இக்கணத்தை மனத்திற்கே இதம்தரும் முதலிரவாய்
..
நாம்நினைத்தால் ‘கற்பகம் ‘ நற்சேதி கொண்டுதரும்!
நாம்பெறுவோம் நன்மைகளை இக்கணமே எனநினைத்தால்,
..
அத்தா மரைத்திரு அழகுறவே மேன்மைசெய்வாள்;
வெத்து வேட்டுகளால் விளைச்சல் வந்திடுமா ?
..
இக்கணத்தில் ‘உழைப்புசெய்ய ‘ இனிமைஎண்ணம் பதிந்துவிட்டால்
அக்கிரம ராக்கதரும் அசைத்திடவே முடிந்திடுமா ?
..
தூக்கமும், சோம்பலும்,தொலையாத புலம்பல்களும்
ஆக்கிரமி த்துப்பெண்டிரை ‘அலட்சுமி ‘ ஆக்கிற்றே!
..
என்செய்வேன் என்-இனிய எழில்மிகு திருநாடே!
பொன்-ஆன பொழுதையெல்லாம் தொலைக்காட்சிப் புதைக்குழிக்குள்
..
தினம்கழித்து, மனம்கெடுத்துத் திசைமாறிப் போனாரே!
இனிதுசெய்ய ‘இக்கணம் ‘ எனும்தேவி எண்ணிடினும்,
..
பெண்டிரும், ஆண்மகனும் போனதெண்ணிப் புலம்பினரே!
கண்கெடுக்கும் மாயவலை கரையவழி தெரியலையே!
.
என்இனிய கிராமத்தில் இன்றும்ம தியம்,மதித்துப்
பொன்னாகத் தறிநெசவில், பலவேலை களில்மூழ்கி,
..
இக்கணத்தைப் பணமாக இயக்கிக் காட்டுகின்றார்!
இக்கணத்தை நகரத்தார் பொக் ‘ கெனவே தொலைத்துவிட்டு,
..
போன ‘கணத் தை ‘எண்ணிப் புலம்பித் தீர்க்கின்றார்!
ஆனவய துவந்தும் ஆண்கள்குட்டிச் சுவரமர்ந்தே,
..
ஊர்க்கதையும்,பெண்கதையும் சிரிப்போடு உரைத்துவிட்டு
சாரமாய் ஓர்வேலை ‘வரலை ‘யென சரம்திரிப்பார்!
.
மலைமுகட்டு அருவிஒன்று பெரும்பொந்துள் மறைந்து ‘கொட்டின் ‘,
வலைவலையாய்ச் சொல்திரிப்போர் வாளாது பார்த்திருப்பின்,
..
யாருக்கு இந்ந ?டம் ? யாரின் துரதிர் ?டம் ?
போர்செய்யும் சுறுசுறுப்பு பொழுதுமுட்டும் இருந்துவிட்டால்,
..
எக்கணமும் பயன்பாடு இருந்துநம்மை அறம்காக்கும்;
திக்கெட்டும் புகழ்சேரும்;தெருவெல்லாம் வளம்செழிக்கும்;
..
இக்கணமும் போச்சே! எனப்புலம்பல் தேவையில்லை!
எக்கணமும் நம் ‘சித்தே ‘! இவ்வுண்மை ஒருசொத்தே!
…(யோகியார்)
yogiyarvedham@vsnl.net

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்