வேறுபாடு….!

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

தேவன்மலர்


அவள்….!
வேலைவிட்டு வீடுவந்தாள்
வீடெல்லாம் குப்பை கூளம்
கூட்டிப் பெருக்கி நிமிர்ந்தவளுக்கு
காத்திருந்தது சமையல் வேலை….!

குழந்தைகளை சாப்பிடச் செய்து
அலுப்புதீரக் குளித்துவிட்டு
அயர்வோடு படுத்தபோது….
அருகினில்….
ஆசையுடன் கணவன்!

இவள்….1
ஆசைமகன் அடம்பிடிக்க
அலுக்காமல் கதைச்சொல்லி
அருகினில் படுத்தபோது….
மனதோடு கணவனின் அன்புமுகம்….
அவனோ….
ஆண்டு பல தனித்திருந்தான்
பொருளீட்ட வெளிநாட்டில்….

-தேவன்மலர்,சிங்கப்பூர்

Series Navigation

தேவன் மலர்

தேவன் மலர்